Marakkathe Nee Marukkathe Nee -21

862 95 48
                                    

மறக்காதே நீ மறுக்காதே நீ - 21

பதினைந்தாம் நாள்...

காலை ஒன்பது மணி..

கபாலீஸ்வரர் கோயில் பிரகாரத்தில் ஸ்ம்ருதியின் அருகே யதுநந்தன் அமர்ந்திருந்தான்.

"நான் இங்கே இருப்பேனு உங்களுக்கு யார் சொன்னது?" என கேட்டாள் ஸ்மிருதி.

"காலையில் உங்கப்பாவிற்கு போன் செஞ்சிருந்தேன். உங்கம்மா தான் போன் எடுத்தாங்க. பேசிட்டிருக்கும் போது, உன்னை பத்தி கேட்டேன். அவங்க தான் நீ கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போயிருக்கிறதா சொன்னாங்க" என சொன்னான்.

"ஒ, அப்படியா" என கேட்டவள், இவனிடம் அம்மா எதற்காக தான் கோயிலுக்குப் போயிருப்பதை சொன்னார் என யோசித்தாள்.

"இன்னிக்கு ஆபிஸ் போகலையா?' என கேட்டான்.

"சேனலில் லீவ் கிடையாது. தேவைப்படும் போது ஆஃப் எடுத்துப்போம். நான் எப்பவும் ஸண்டே தான் ஆஃப் எடுத்துப்பேன். நேத்து வேலை அதிகமாக இருந்ததால். இன்னிக்கு எடுத்துட்டேன்" என சொன்னாள்.

"இன்னிக்கு என்ன கோயிலுக்கு வந்திருக்கே?' என இயல்பாக கேட்டான்.

"எனக்கு சிவன் ரொம்ப பிடிக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கே வந்துடுவேன்" என சொன்னாள்.

அவளை அதிசயமாக பார்த்தவன், "எல்லா பொண்ணுங்களுக்கும் கண்ணனை தான் பிடிக்கும். நீ வித்தியாசமா சிவனை பிடிக்கும்னு சொல்றே" என கேட்டான்.

"சிவனை மாதிரி யாரும் தியாகம் செய்ய முடியாது. பாற்கடலை அமுதத்துக்காக கடையும் போது முதலில் வந்த ஆலகால விஷத்தால், உலகமே அழிஞ்சிடும் என்ற நிலை வந்த போது, அவர் எதை பத்தியும் யோசிக்காம அதை எடுத்து வாயில் போட்டுக்கிட்டார். அது எந்த காலத்திலேயும், எந்த விதத்திலேயும் வெளியே வர கூடாது என்று தன்னோட தொண்டையிலே நிக்க வைச்சிருக்கார். நமக்கு இரண்டு நாள் திரோட் இன்ஃபெக்ஷ்ன் வந்தாலே என்ன பாடு படறோம்" என சொல்லி விட்டு சிரித்தாள்.

Completed - Marukkathe Nee Marakaathe NeeWhere stories live. Discover now