Marukkathe Nee Marakkathe Nee - 16

784 107 153
                                    

மறக்காதே நீ மறுக்காதே நீ - 16
பத்தாம் நாள்...

காலை ஆறு மணி..

காலையில் செல்போனில் அலாரம் அடித்தும், எழுந்திருக்க மனமின்றி தலையணையை அணைத்தபடி படுத்திருந்தாள் சம்யுக்தா.

"சித்தார்த்" என தன்னையறியாமல் சொன்ன யுக்தாவை, "இப்போ என்ன சொன்னே?" என சம்யுவின் கோபமான குரல் மிரட்டியது.

"சித்..தா..ர்த்" என தயங்கியப்படி சொன்ன யுக்தாவை, "இப்போ காலையிலே உனக்கு எதுக்கு அவன் ஞாபகம்?" என எரிச்சலாக கேட்டாள் சம்யு.

"வந்து.." என மென்று முழுங்கியவள், "நேற்று முழுசும் அவனை பார்க்கலை, அதான்.." என பயந்தபடி சொன்னாள் யுக்தா.

"அதனால் என்ன? நேற்று ஒருத்தரை பார்க்கலைனா காலையிலே அவங்க ஞாபகம் தான் வருமா? ஸ்மிருதியை கூட தான் நேத்து பார்க்கலை, அவ ஞாபகம் ஏன் வரலை?' என அழுத்தம் திருத்தமாக கேட்டாள் சம்யு.

என்ன பதில் சொல்வது என தெரியாமல் விழித்த யுக்தாவிடம், "அவன் உனக்கு யார்? ஃபிரண்டா? ரிலேட்டிவா? ஆபிஸ் கொலிக்கா? இல்லை தெரிஞ்சவனா? இது எதுவுமே இல்லை தானே? அப்பறம் எதுக்கு அவனை நினைச்சே?" என கடுப்புடன் கேட்டாள் சம்யு

யுக்தா பதில் சொல்லாமல் மெளனமாக தலையணையை அழுந்த பிடித்தபடி படுத்திருந்தாள்.

"அவன் யாருனு நான் சொல்லட்டுமா? உன் கல்யாணத்தை நிறுத்தினவன். உன்னை கடத்திட்டு போய் அடைச்சி வைச்சவன்" என சத்தமாக இறைந்தாள்.

"இன்னும் எத்தனை நாள் அதையே சொல்லிட்டிருக்க போறே?" என முணுமுணுப்பாக சொன்னாள் யுக்தா.

"எத்தனை வருஷமானாலும் அது தானே உண்மை? உண்மையை தான் சொல்ல முடியும்" என அழுத்தமாக சொன்னாள் சம்யு.

"அது தான் அப்பவே அவன் மன்னிப்பு கேட்டானே?" என மெதுவான குரலில் கேட்டாள் யுக்தா.

"அவன் ஒரே ஒரு தடவை தானே ஸாரி சொன்னான்" என நக்கலாக கேட்டாள் சம்யு.

"ஒரு தடவை கேட்டாலும் அவன் அதை ரொம்ப ஃபீல் பண்ணி கேட்டான். அவன் ஏற்கனவே இருபது வருஷம் அவங்கப்பா அம்மா இல்லாம கஷ்டப்பட்டிருக்கான்" என தயங்கியப்படி சொன்னாள் யுக்தா.

Completed - Marukkathe Nee Marakaathe NeeWhere stories live. Discover now