மறக்காதே நீ மறுக்காதே நீ - 22
பதினாறாம் நாள்...காலை ஒன்பது மணி
'குட்மார்னிங் மிஸ் சம்யுக்தா வசந்தன், ஜஸ்ட் ஐந்து நாட்கள்'
என்ற மெசெஜை அனுப்பி விட்டு சித்தார்த் நிமிர்ந்த போது, பூஜையறையிலிருந்து திருமாறன் வந்தான்.
"வா சித்தார்த், காப்பி சாப்பிட்டிங்களா?" என கேட்டவர், சோர்வாக தலை அசைத்தவனை யோசனையுடன் பார்த்தார்.
"என்னாச்சு, விக்ரம் ஏதாவது கண்டுபிடிச்சானா?" என கேட்டார்.
இல்லை என மறுத்தவனை கவலையுடன் பார்த்தவர், கண்களை மூடி யோசித்தார்.
"சித்தார்த், நான் எங்கிட்ட எல்லா ஆவண்ங்களையும் விக்ரமிடம் கொடுத்துட்டேன். அப்போ சர்வீஸிலிருந்த போலிஸ்காரங்க எல்லாரோட விவரங்களையும் கொடுத்துட்டேன்" என நிராசையாக சொன்னார்.
"தாங்க்ஸ் சார். ஆனா அது எல்லாமே முரளிதரன் சந்தன கடத்தியிருக்கார் என்பதற்கான ஆதாரங்களா தான் இருக்கு. எதுவுமே என் அப்பாவை அவர் தான் கொல்ல சொன்னார் என்பதற்கு ஆதாரமா இல்லை" என விரக்தியுடன் சொன்னான்.
"நீ உன் வழியில் எதுவும் முயற்சிக்கலையா?' என கேட்டார்.
"அதையும் முயற்சி செஞ்சோம். நாதன் அங்கிள் அந்த பழைய கேஸை ஒபன் செய்ய கூட முயற்சி செஞ்சார். தாத்தா தான் வேண்டாம் என்று சொல்லிட்டார். அவர் எந்த மிரட்டலுக்கும் மசிய மாட்டேங்கிறார். அவருக்கு உடல்நிலை வேற சரியில்லை. ஏதாவது தடாலடியா செஞ்சு, அவருக்கு ஏதாவது ஆயிடிச்சுனா, பிரச்சனை பெரிசாயிடும். எனக்கு அவருக்குத் தண்டனை தான் வாங்கி தரணுமே தவிர, அவரை கொலை செய்யறதில்லை" என ஆயாசமாக சொன்னான்.
"நான் கொடுத்த முரளிதரனோட போன் கால் ரெக்கார்டிங்கெல்லாம் என்னாச்சு" என ஆர்வமாக கேட்டார்.
"ஆம் அதையெல்லாம் கேட்டோம். அதிலேயும் எதுவும் உருப்படியா இல்லை. இன்னும் கேட்டா, கொலை நடக்கிறதுக்கு இரண்டு நாள் முன்னாடியிலிருந்து அவர் தன் வீட்டுப் போனை உபயோகப்படுத்தலை" என வெறுப்பாக சொன்னான்.
YOU ARE READING
Completed - Marukkathe Nee Marakaathe Nee
RomanceSudum Nilavu Sudatha Suriyan - Part 2