விடாமல் துரத்துராளே 43

5.2K 89 84
                                    

விடாமல் துரத்துராளே 43

தியாவை பார்த்த பின்பு தான் தேவாவிற்கு போன உயிர் திரும்ப வந்தது. அவளை காணமால் இவ்வளவு நேரம் பதை பதைத்து பதறி கொண்டு இருந்த மனது இப்போது தான் அமைதி கொண்டது..

பாப்பா என அவளை அணைக்க போக, அவன் முன் கை நீட்டி தடுத்து முறைத்தாள் தியா.. தேவாவும்  நேற்றைய சம்பவத்தில் அவள் கோவமாக இருப்பது புரிந்து அமைதியானான்…

.சூர்யாவும் தியாவை காணவில்லை என தேவா கூறியதிலிருந்து பயந்து போயிருந்தான், அதுவும் இவ்வளவு நேரம் எங்கு தேடியும் தியா  காணவில்லை என்றதும் அவளுக்கு ஏதோ ஆகி விட்டதோ என்று மனது  தப்பு தப்பாக யோசித்து பயந்து போயிருந்தது.. இப்போது தியாவை கண்டதும் தான் நிம்மதியாக இருந்தது.. இருந்தும் இது என்ன விளையாட்டு என்று தியா மீது முதல் முறை கோவம் வந்தது..

பாப்பு இவ்வளோ நேரம் நீ எங்க போய் இருந்த? தியாவை பார்த்து கோவமாகவே சூர்யா கேட்டான்..

இந்த கேள்வியை நான் தான் உங்களை பார்த்து கேட்கனும் 10 மணிக்கு மேல்ல இரண்டு பேரும்  எங்க போய் ஊர் சுத்திட்டு வரீங்க? சூர்யாவை கேள்வி கேட்டாலும் பார்வை முழுவதும் தேவா மீது தான் வைத்து இருந்தாள் தியா..

நாங்க உன்னை தேடி தான் போய் இருந்தோம் சூர்யா கூற குழப்பமான தியா என்னை எதுக்கு தேடனும் என்று கேட்டாள்..

ஏன்னா நீ தான் காணாம போய்ட்டியே பாப்பு என்று சூர்யா கூறியதில்  ஹேங் என்று முழித்தவள் சூர்யாவை நோக்கி மட்டமான சரக்கை எதுவும்  அடிச்சியாடா அண்ணா என்றதும் சூர்யா முறைக்க,

பின்ன காணமா போறதுக்கு நான் என்ன குழந்தையா, வீட்டுல இருக்க என்னை காணமா போய்ட்டேன் சொல்ற,

நான் எங்கமா அப்புடி சொன்னேன்.. உன் புருஷன் தான் நீ காணமா போய்ட்டேன்னு சொன்னான்…

சொல்லிருப்பார் சொல்லிருப்பார் ஏன்னா அது தான் அவர் அடி மனசு ஆசையாச்சே என்று தேவாவை அடி கண்ணால் பார்த்தபடி கூறியவள் மேலும்  அவர் தான் அப்புடி சொன்னாருன்னா உனக்கு எங்கடா போச்சு மூளை, நான் எதுக்குடா காணமா போக போறேன் சூர்யாவிடம் கோவமாக கேட்க.

You've reached the end of published parts.

⏰ Last updated: Apr 28, 2023 ⏰

Add this story to your Library to get notified about new parts!

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now