விடாமல் துரத்துராளே!! 3

1.4K 52 9
                                    

விடாமல் துரத்துராளே 3

ராகவ் - இனியா இருவருக்க திருமணம் நல்ல முறையில் நடை பெற்றது… மண்டபத்தின் வாயிலில் தங்கள் காரில் வந்து இறங்கினார்கள் வெண்ணிலா திவேஷ் இருவரும்… வெண்ணிலாவை கண்ட மஞ்சுளாவும் இந்துமதியும் ஓடி வந்து அவளை கட்டி கொண்டனர்…

இந்துமதி, ஏன் நிலா இவ்வளோ லேட்டா வர நீ நேத்தே வருவன்னு நான் எதிர் பார்த்தேன்…. இல்ல இந்து அவர் வீட்டு சைட் ஒரு பங்ஷன் அங்க போயிட்டு வந்தோம் அதான் லேட்… சரி இப்பவாவது வந்தீங்களே என்று அவர்களை உள்ளே அழைத்து சென்றார்கள்… வெண்ணிலா மஞ்சுளாவின் தங்கை இந்துமதிக்கும் தோழி…

வெண்ணிலா, தனது அக்காவிடம் சூர்யா வந்தானா என்று மஞ்சுவிற்கு மட்டும் கேட்கும் குரலில் மெதுவாக கேட்க, அவன் வரலை அந்த தேவா வராததால் அவனும் வரமாட்டானாமா, ஷோபாவும் அம்மாவும் வந்து இருக்காங்க… பெரிய தளபதி படத்தில் வர தேவா, சூர்யானு மனசுக்குள்ள நினைப்பு… அந்த தேவாக்கூட சேர்ந்து இவனும் கெட்டு போக போறான் பாரு என்றாள் மஞ்சு அதே போன்று மெதுவாக, அவர்கள் பின்னே திவேஷ் சென்றான்….

தேவாவை பற்றியே சிந்தித்துக் கொண்டு வந்த திரவியா எதிரே வந்த திவேஷை பார்க்கமால் தெரியாமல் வந்து அவனை இடித்து விட்டாள்… கையில் அவள் வைத்து இருந்த க்ளாஸில் இருந்த மொத்த காப்பியும் அவன் மேலே ஊற்றியது… சாரி ப்ரோ சாரி ப்ரோ என்ற திரவியாவை நிமிர்ந்து கோவமாக ஏய் உனக்கு எல்லாம் என்று திட்ட வந்த திவேஷ் திரவியா முகத்தை கண்டதும் புருவ முடிச்சுகளுடன் ஏதோ யோசனை உண்டாக அமைதியாகி விட்டான்…
இதை பார்த்த வெண்ணிலாவிற்கு கோவம் வர  பார்த்து வரமாட்டியாமா  என்று தியாவை சத்தம் போட்டாள்... மஞ்சுளாவிற்கும் தியா மேல் கோவம் புசு புசு வென ஏறியது… தன் தங்கை கணவரின் மேல் எதையோ ஊற்றி விட்டாளே என்று,

தியா, சாரி அக்கா நான் சரியா கவனிக்கல என் மேல் தான் தப்பு… சாரி ப்ரோ என்று திரும்ப கூற அதை திவேஷ் கவனிக்கும் நிலையில் இல்லை... அவனின் எண்ணமும் முழுவதும் அந்த நாளை தொட்டு மீண்டது…. அவன் மூளைக்கு உள்ளே இந்த பொண்ணை பார்த்தா அந்த பொண்ணு மாதிரி இருக்கே என்ற எண்ணம் ஒரு நொடி தோன்றியது… அடுத்த நொடியே அவளை மாதிரி எல்லாம் இல்ல அவளே தான் என்று உறுதிபடுத்தி கொண்டான் இவர்களை நோக்கி வந்த யமுனா தியாவை பார்த்து என்ன ப்ராளம்டா என்று கேட்ட போது,

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now