விடாமல் துரத்துராளே!! 13

1.5K 50 12
                                    

விடாமல் துரத்துராளே 13

டேய் குரங்கு எருமை உண்மையிலே படிச்சு தான் ஐ.பி.எஸ் பாஸ் பண்ணுனயா இல்ல பீட் அடிச்சு எழுதுனியா, உன்னை எல்லாம் எவன்டா போலீஸ் வேலைக்கு எடுத்தது. ஒரு வேலை கூட உருப்படியா செய்ய மாட்டேங்குறே என்று தியா சபரியை போனில் திட்ட, எதிர்முனையில் இருந்த சபரியோ ஏய் சைனா பொம்மை இப்ப எதுக்கு கதவு சந்துல மாட்டுன எலி மாதிரி கீச்சு கீச்சுங்கிற,

பின்ன என்னடா பாவா நம்பர் கொடுத்து எங்க இருக்காங்க ட்ரேஸ் பண்ணி தர சொன்னா, மூணு மணி நேரமா அங்க போ இங்க போன்னு அழைய வைச்சிட்டு இருக்கியே தவிர கரெக்ட்டா பாவா இருக்க இடத்தை சொல்ல மாட்டேங்கிறேயே என்று அவனிடம் குறைபட்டு கொண்டாள்.

இதுக்கு நீ கோவபட வேண்டியது உன் பாவா கிட்ட தான். என்னமா ஆளு பிடிச்சு வைச்சு இருக்க. ஊருக்குள்ள வேற நல்ல ஆளே உனக்கு கிடைக்கலையா. கொஞ்சம் நேரம் கூட ஒரு இடத்தில் இருக்க மாட்டேங்கிறார். அங்க இங்கன்னு சுத்திட்டே இருக்கார். ட்ரேஸ் பண்ணற எனக்கே மண்டை காயுது. உன்னை சுத்தல விடுறது உன் பாவா தான். ஆனா நீ என்கிட்ட கோவபடுறீயா. தேவை தான் எனக்கு இருக்கிற வேலை எல்லாம் விட்டுட்டு உனக்கு ஹெல்ப் பண்றேன்ல. என்னை நானே அடிச்சுக்கனும். இனிமே நா உனக்கு உதவி பண்ணறதா இல்ல. என்னமோ பண்ணிக்கோ என்று போனை வைக்க போக.

அய்யோ கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டமோ பயபுள்ள டென்சன் ஆகுதே என்று எண்ணிய தியா சபரி சபரி என் தங்கம்ல செல்லம்ல போனை வைக்காதாடா நான் சும்மா உன்கிட்ட ஒரு லொலாய்க்கு பேசுனேன். கோவம் எல்லாம் ஒன்னும் இல்ல. அதை எல்லாம் ரப்பர் வைச்சு அழிச்சுடுடா.  இந்த ஒருவாட்டி மட்டும் எந்த இடத்தில் இருக்குறார்னு சொல்லுடா என்று கெஞ்சலில் இறங்க. போய் தொலை என்ற சபரியும் நீ இருக்கிற இடத்தில் இருந்து கொஞ்சம் தூரம் தான் போ என்றான்.

தேவா காரை ஓட்டி கொண்டு இருந்தான்.‌ ஆனால் அவன் கவனம் சாலையில் இல்லை. அவன் நினைவு மொத்தமும் தியா மீது தான் இருந்தது. அந்த பொண்ணை அந்த இடத்திலே அந்த நிலைமையில் தனியா விட்டுட்டு வந்து இப்ப உனக்கு என்ன அவளை பத்தி நினைப்பு. இப்படி கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமா எப்ப இருந்து நடக்க ஆரம்பிச்ச என்று அவனின் மனசாட்சி கேட்ட கேள்விக்கு அவனால் விடை அளிக்க முடியவில்லை. சற்று நேரத்திற்கு முன்பு நடந்ததை நினைத்து பார்த்தான்.

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now