விடாமல் துரத்துராளே 37

1K 63 14
                                    


விடாமல் துரத்துராளே 37

என்ன பாப்பா கண்ணு சிவக்கிற அளவுக்கு உங்க வீட்டுல கவனிப்பு பலம் போல என்ற தேவாவின் நக்கலில் நிமிர்ந்து தேவாவை முறைத்தவள், நானே இதுவரை என்னை திட்டாத என் டாடி திட்டிடாருன்னு பீல்ங்கில்ல உக்கார்ந்துட்டு இருக்கேன்… பொண்டாட்டி வருத்தில்ல இருக்காளே சமாதானம் பண்ணுவோம்ன்னு நினைக்காமா   நக்கல் பண்றீங்களா கண்களை உருட்டியபடி கேட்டாள்… இவ்வளவு நேரமும் இதுவரை கடினமான ஒரு வார்த்தையும் பேசாத தந்தை திட்டியதில் வருத்தமாக இருந்தவளுக்கு தேவாவை பார்த்ததும் அந்த வருத்தம் எல்லாம் காற்றில் வைத்த கற்பூரமாய் கரைந்து போனது..

நீ செஞ்ச காரியத்துக்கு உன்னை திட்டாம கொஞ்சவா செய்வாங்க.. உங்க அப்பாவ இருக்கிறதல்ல திட்டுனதோட விட்டுட்டாங்க. இதே நான்னா இருந்துதிருந்தா நாலு போடு போட்டு இருப்பேன்..

காதலிக்கிறது என்ன அவ்வளவு பெரிய தப்பா, அதுக்காக என்னை வெறுத்துருவாங்களா,

நீ காதலிச்சது அவங்களுக்கு கோவம் இல்லை.. யாரை காதலிச்ச அதான் அவங்க கோவத்திற்கு காரணம்.

ஏன் உங்களுக்கு என்ன குறைச்சல்? பார்க்க நல்ல ஹிந்தி ஹீரோ மாதிரி இருக்கீங்க.

உன் கண்ணுக்கு தான் பாப்பா நான் ஹீரோ. ஆனா இந்த ஊருக்கும் உலகத்துக்கும் பொண்ணுங்க கிட்ட மிஸ்பிகேவ் பண்ணுன கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போட்டு வந்த வில்லன். என்னை மாதிரி ஒருத்தனை காதலிச்சு கல்யாணம் பண்ணினா எந்த பெத்தவங்களுக்கு தான் பிடிக்கும். உன் அம்மா அப்பா கோவத்தில்ல நியாயம் இருக்கு பாப்பா. அவ்ளோ ஏன் நாளைக்கு என் பொண்ணு என்னை மாதிரி ஒருத்தனை காதலிக்கிறேன் கல்யாணம் பண்றேன்னு சொன்னா அதுக்கு நான் அனுமதிக்கவே மாட்டேன். எனக்கு இப்புடி தான் கோவம் வரும்.

நீங்க தான் எந்த தப்பும் செய்யலையே பாவா. அது மத்தவங்க செஞ்ச தப்பை மறைக்க உங்க மேல்ல வீண்பழி போட்டுட்டாங்க என தியா கூறியதும் பயங்கரமாக சிரித்த தேவா ஷோபாவில் இருந்து இறங்கி அவளுக்கு எதிர்ப்புறம் அமர்ந்தான் நான் தப்பே பண்ணலைன்னு உன்கிட்ட சொன்னது யாரு அந்த  சூர்யா பய தானே, சூர்யா கர்ணன் மாதிரி தப்பு   என் மேல்ல தப்பு இருந்தாலும் இல்லைன்னு தான் சொல்லுவான்.. அவன் சொன்னதை நம்பியா என்னை கல்யாணம் பண்ணன லூசு புள்ள என்றவனை முறைத்தவள்,

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now