விடாமல் துரத்துராளே 39

1K 58 8
                                    


விடாமல் துரத்துராளே 39

வானம் முழுவதும் கண்மை பூசி கொண்டது போன்ற இரவு நேரம். அந்த கருமை படர்ந்த வானில் தங்கமாய் ஜொலித்த பௌர்ணமி நிலவு. அந்த நிலவை பார்த்தபடி தனது வீட்டின் பால்கனியில் நின்று இருந்தான் ஹர்ஷா… நிலவின் வெண்மையும் அழகும் அவனின் ஹரிணியை விட குறைவானதாக தோன்றியது… அவளை பற்றி நினைத்ததும் இதழ்கள் தானாக விரிந்தது.. அன்று அவள் பேசிய வார்த்தை நினைவு வர முகம் இறுகியது… அன்றைய நாள் நடந்ததை நினைத்து பார்த்தான்…

அதே நேரம் தேவா வீட்டில் பாப்பு எப்புடி ஹர்ஷா தான் உனக்கு உதவி பண்ண போறான்னு சொன்னா சூர்யா ஆச்சர்யத்துடன் கேட்டான் அதுவா டா அண்ணா அது வந்து என்று  சொல்ல தொடங்கினாள்..

(35வது udல ஹரிணி அவங்க பாட்டியை ஆரோக்கியம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போவாளே நியாபகம் இருக்கா, அப்ப ஹர்ஷா வருவானே நியாபகம் இருக்கா அதோட கண்டினியூ தான் இது. நியாபகம் இல்லாதவர்களுக்கு கீழே சின்னதா போடுறேன்)

ஹரிணி பாட்டியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வா என அவள் தந்தை கண்டிப்பாக ஹரிணியிடம் கூற அவளும் வேண்டா வெறுப்பாக தன் பாட்டியை ஆரோக்கியம் மருத்துவமனைக்கு கூட்டி போனாள். ஹர்ஷாவை பார்த்து விடவே கூடாது என்ற வேண்டுதலுடன், போன இடத்தில் ஹர்ஷா விடுமுறை என்பதை அங்குள்ள நர்ஸ்கள் தங்களுக்குள் பேசியதை வச்சு தெரிந்து கொண்டாள். ஹர்ஷா அங்கு இல்லை என்பதை தெரிந்து கொண்டவளின் வாய் சும்மா இருக்காமல் எப்போதும் போல இந்த ஆஸ்பத்திரிக்கு எதுக்கு கிழவி வந்த இது சரியான கிட்னி திருடுற ஆஸ்பத்திரி என்று பேசி கொண்டே இருந்தவள் கவனிக்கவில்லை தன் அருகே நின்று இருந்த ஹர்ஷாவை..

அவனை பார்த்து அதிர்ச்சியான ஹரிணி அச்சோ இவன் வர மாட்டான்னு சொன்னாங்க..இப்ப என்னடான்னா வந்து நிற்கிறான்.. இவன் இல்லைங்கிற தைரியத்தில்ல தானே ஓவரா பேசினோம்.. இப்ப நம்ம பேசுனது ஒரு வேளை கேட்டு இருந்தா சேதாரம் நம்ம உதட்டுக்கு தானே என்றவள் வலது கையால் தன் வாயை மூடி கொண்டாள்.. அய்யோ முறைக்கிறானே முறைக்கிறானே என தனக்குள் பேசி கொண்டாள்…

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now