விடாமல் துரத்துராளே 37

Start from the beginning
                                    

சூர்யா அண்ணா சொன்னதை நம்பி இல்ல, என் மனசு சொன்னதை நம்பி உங்களை காதலிச்சேன். பாவா சூர்யா அண்ணா சொல்றதுக்கு முன்னாடி, ஏன் உங்களை பார்க்கிறதுக்கு முன்னாடியே உங்க பேரை என்னைக்கு என் அம்மா சொன்னாங்களோ அந்த நிமிஷத்தில்ல இருந்ததே என் மனசு ஒன்னே ஒன்னு தான் சொன்னுச்சு நீங்க எனக்கானவர் நீங்க எந்த தப்பும் செஞ்சிருக்க மாட்டீங்கன்னு, இந்த ஊர் உலகம் நீங்க தப்புன்னு சொன்னாலும் உங்களுக்கு எதிரே ஆயிரம் சாட்சி இருந்தாலும் ஏன் நீங்களே நானா தப்பானவன் சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்.  என் மனசு சொன்னதை  தான் அன்னைக்கு நான் நம்புனேன் இப்ப நம்புறேன் ஏன் நான் சாகற அதை மட்டும் தான் நான் நம்புவேன் என தியா தேவா கண்களை பார்த்து கூறியவளை தாவி அணைத்து அவள் தோளில் முகத்தை புதைத்தவன்

நீ எந்த தப்பும் செஞ்சிருக்க மாட்ட எனக்கு தெரியும் நான் உன்னை நம்புறேன் இந்த வார்த்தையை நான் எதிர்பார்த்த ஆளுங்க யாருமே சொல்லல பாப்பா. என்னை 25 வருஷமா பெத்து வளத்தவரு, என் கூட பொறந்தவங்க, வாழ்க்கை முழுசும் என்கூட வர போறதா நான் நினைச்சவங்க இவங்க யாருமே சொல்லல… என்னை முன்ன பின்ன பார்க்காத நீ என் மேல்ல வச்ச  நம்பிக்கை மாதிரி  அவங்க எல்லாம்  எல்லாம் ஏன் பாப்பா என்னை நம்புல. நீ எந்த தப்பு செஞ்சிருக்க மாட்டேன்னு அவங்க ஏன் பாப்பா சொல்லல என் அவளை அணைத்தபடி கூறியவயனின் குரலிலே தெரிந்தது அவன் பட்ட வேதனை..

அவன் முதுகை தடவி ஆறுதல் படுத்தியவள் இந்த பாப்பாவுக்கு இந்த முரட்டு பாவாங்கிறது  தான் விதி போல அதான் இப்புடி எல்லாம் நடந்திருக்கும் போல என தியா தேவாவை ஆறுதல் படுத்த கூற,  தேவாவோ அவள் தோளில் இருந்து முகத்தை எடுத்து தியா முகம் பார்த்து என்ன சொன்ன புரியல என்றான்.

ஒரு வேளை அவங்க எல்லாம் உங்களை நம்பி இருந்தா, இப்புடி ஒரு அழகான அறிவான க்யூட்டான வொய்ஃப் கிடைச்சிருக்குமா சொல்லுங்க பார்காகலாம், நான் உங்க வாழ்க்கையில்ல வரும்னுங்கிறதால தான் கடவுள் உங்களுக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்தாரு போல, என தியா அவனை ஆறுதல் படுத்த கூற,
அவளை  முறைக்க நினைத்தவனும் தோற்று சிரித்தபடி இதை எல்லாம் நான் சொல்லனும் நீ சொல்ல கூடாதுடி என்றான் அவளின் மூக்கை உரசியபடி,

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now