எல்லாம் சிவமயம்

250 30 12
                                    

💙 அன்பே💛சிவம்💙

🕊️Episode 4️⃣

மயில் சாமி - என்ன ambulance வந்து இருக்கு

K - தெரியலையே மாமா...யாருக்கு என்னாச்சு....

எனக் கேட்டுக் கொண்டே கதிரும் மயில்சாமியும் வீட்டில் இருந்து வெளியே வந்ததும்

மயில்சாமி - ஐயோ வள்ளி...

அன்னமா - மயிலு

மயில் சாமி - என்ன அன்னமா என்னாச்சு என் வள்ளிக்கு

அன்னமா - நம்ம வள்ளி நம்மள விட்டு போயிட்டா பா....

மயில் சாமி - ஐயோ வள்ளி....

(Author - சின்ன சின்ன சண்டையில் பிரிந்த உறவுகள் சாகும் வர சில குடும்பத்தில் சேர மறுக்க காரணம்... சுய மரியாதை என்று தனக்குள் நினைத்து அவர்கள் தன் தலையில் தானே வைத்து கொள்ளும் கொல்லி தான்.....)

அன்னமா - எல்லாம் முடிஞ்சுடுது மயில்.... அவ இந்த உலகத்தை விட்டு போயிட்டா

மயில் - ஐயோ கடவுளே... இவ உயிரோடு இருக்கும் போது என்னை இவ கிட்ட இருந்து பிரிச்சு வச்சி இப்போ இவ போன பிறகு என்னை இங்க வர வச்சிருக்கியே... இந்த கோலத்தை பாக்கவா நான் இங்க வந்தேன்...

K - மாமா... மாமா... என்னாச்சு மாமா

மயில்சாமி - மாப்பிள்ள உன் அத்த நம்மள விட்டுட்டு போய்ட்டா மாப்பிள்ள...

K - ஏங்க.... என்னாச்சு.. எப்படி இவுங்க இறந்தாங்க

அன்னமா - நாளைக்கு காலையில தன்னோட மக கல்யாணம் நடக்காதுன்னு மாப்பிள்ள வீட்ல சொன்னதை கேட்டு வள்ளி மனசு உடைந்து போயிட்டா தம்பி... இதோ இந்த இடத்துல தான் மயங்கி கீழே விழுந்தா... நாங்க உடனே ஹாஸ்பிடல் தூக்கிட்டு போனோம் ...ஆனா நாங்க போற வழியிலேயே வள்ளி உயிர் பிரிஞ்சிடுதுன்னு dr சொல்லிட்டாரு பா..

மயில் சாமி - முல்ல... என் மக முல்ல எங்க..

அன்னமா - அவுங்க அம்மா இறந்த செய்தி கேட்டு புள்ள பித்து பிடிச்சது போல ஆகி அவளும் மயங்கி கீழே விழுந்துட்டா பா...

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now