எமிலி பாவம் 😔

305 36 20
                                    

💙 அன்பே💛சிவம்💙

🕊️Episode ✌️

இடம் கதிர்ஷிவம் இல்லம்.....

மயில் சாமி - கதிர் என்னப்பா நேரம் ஆகுது இன்னுமா கிளம்பிக்கிட்டு இருக்க.....

K - கிளம்பியாச்சு மாமா போகலாமா

மயில் சாமி - என்னப்பா இது மூணு வருஷம் கழிச்சு உன்ன கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு வெளிநாட்டுல இருந்து வர போறா...அவளை பார்க்கறதுக்கு போகணும் என்ற ஆசையே உனக்கு இல்லையா

K - மாமா எனக்கு யாரை பாக்கணும்ன்னு ஆசை இருக்கோ இல்லையோ அதெல்லாம் இப்போ இங்கே தேவை இல்ல...முதல்ல உங்களுடைய உடல் நிலை தான் எனக்கு முக்கியம்.. இந்தாங்க இந்த மாத்திரையை போடுங்க

மயில் சாமி - ஐயோ எனக்கு ஒன்னும் இல்லடா கதிரு...ஏன்டா இப்படி பண்ற...வாடா போலாம் பிளைட் லேண்ட் ஆவதற்கு இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு

K - இங்க பாருங்க நான் மறுபடியும் மறுபடியும் சொல்றேன் என்னுடைய கல்யாணம் நல்லபடியா நடக்கலனாலும் பரவாயில்ல...ஆனா எனக்கு உங்களுடைய ஹெல்த் ரொம்ப ரொம்ப முக்கியம்

மயில்சாமி - என்ன நீ கல்யாணம் நடக்காது அது இதுன்னு அபசகுனமா பேசுற, உன் கல்யாணத்தை பார்க்கிறதுக்காக தான் நான் உசுரோடவே இருக்கேன்...இப்ப என்ன உனக்கு இந்த மாத்திரையை நான் போடணும் அவ்வளவுதானே காட்டு

K - மாமா உங்களுக்கு ஏற்கனவே ரெண்டு தடவ ஹார்ட் அட்டாக் வந்திருக்கு மூன்றாவது தடவையும் வராதுன்னு என்ன நிச்சயம்

மயில் சாமி - அதெல்லாம் வராதுடா

K - ஏன் வராது

மயில் சாமி - ஏன்னா என் ஹார்ட்ல எல்லாம் வல்ல திருவண்ணாமலை சிவமும்,எனக்காக எல்லாமே பண்ணும் என்னுடைய அக்கா மகன் கதிர்ஷிவமும் இருக்கிறாங்க...அதனால எனக்கு ஒன்னும் ஆகாது....

K - போதும் மாமா....நல்லா பேசுறீங்க..... இந்தாங்க முதல்ல மாத்திரையை போடுங்க..

மயில் சாமி - இந்த மாத்திரை எல்லாம் என் நோய்க்கு மருந்தாகாது மாப்பிள்ள

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now