விடாமல் துரத்துராளே 16

Start from the beginning
                                    

இப்ப வெண்ணிலா உனக்கு ப்ரெண்டோட தங்கச்சி மட்டும் இல்ல உன் அண்ணியோட தங்கச்சியும் கூட உனக்கு கட்டிக்கிற முறை கூட இருக்கு.  நீ தாராளமா வெண்ணிலா வை லவ் பண்ணலாம். இப்பவாவது அந்த பிள்ளை கிட்ட போய் உன் மனசில் இருக்கிறதை சொல்லு கண்ணா என்று கூறிய மகேஸ்வரனை இறுக அணைத்து கொண்டான் தேவா. தன் மீது மகேஸ்வரன் வைத்திருக்கும் அன்பை எண்ணி பூரித்து போனான்..

தாங்க்ஸ் மாமா தாங்க் யூ சோ மச்… எனக்காக நீங்க பண்ற எல்லாத்துக்கும் தாங்க்ஸ் மாமா.

என்னது இது புதுசா தாங்க்ஸ் எல்லாம் சொல்ற கண்ணா… உனக்கு நான் செய்யமா வேற யார் செய்வாங்க. எனக்கு நீ கார்த்தி மாதிரி இல்ல இல்ல கார்த்தியை விட ஒரு படி மேல் தான் என்றவரின் அன்பில் தேவா கரைந்து தான் போனான். ஆனால் இந்த அன்பு மாமா தான்  நாளை தன் மானத்தை காப்பாத்த இவனை இரையாக்க போகிறார் என்பதை அவன் அறியவில்லை. மகேஸ்வரனுமே தன் மகனுக்கு மேலாக நினைத்த தேவா வாழ்க்கையை தானே அழிக்க போகிறோம் என்பதை கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்.

என்ன தான் மகேஸ்வரன் வெண்ணிலா விடம் காதலைதெரிவிக்க கூறினாலும் இப்போது வேண்டாம் அவள் படிப்பு முடியட்டும் என்று தேவா அமைதி காத்தான்‌...  நாட்கள் அதன் போக்கில் ஓடின… தேவா, சூர்யா, கார்த்திக், ஜீவா, திவேஷ் ஐவரும் ஆரோக்கியம் மருத்துவமனையிலே வேலைக்கு சேர்ந்தனர்… தேவா சிறிது காலத்திலே கை தேர்ந்த மருத்துவர் என்ற பெயர் வாங்கினான்… அவன் செய்த அறுவை சிகிச்சை எல்லாம் வெற்றி தான். மகேஸ்வரன் செய்து வந்த உதவிகள் பௌன்று தேவாவும் மலையை ஒட்டியுள்ள ஜனங்களுக்கு மருத்துவ உதவி நிறையவே செய்தான். அவனுக்கு இதன் மூலம் நிறைய நல்ல பெயரையும் புகழையும் கொடுத்தது… அவனுக்கு மட்டுமில்லாமல் ஆரோக்கியம் மருத்துவமனைக்கும் புகழ் கிடைத்தது. வெளி மாநிலம் வெளி நாட்டில் இருந்து கூட வைத்தியத்திற்கு ஆரோக்கியம் மருத்துவமனை வந்தனர்… திவேஷிற்கு ஏனோ தேவாவை மற்றவர்கள் புகழ்வது பிடிக்க வில்லை...

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now