விடாமல் துரத்துராளே!! 3

Începe de la început
                                    

இவர்களின் அருகில் வந்த யமுனா என்ன பிரச்சனை என்று விசாரிக்க, மஞ்சுளா உங்க பொண்ணை பாருங்க என் தங்கச்சி ஹஸ்பண்ட் மேல் காபி கொட்டிடா என்று புகார் கூற,

யமுனா தியாவை முறைத்தார்.. மஞ்சுளா ஏற்கெனவே திருமண பேச்சு தொடங்கியதில் இருந்து பாலகிருஷ்ணன் யமுனா இருவரையும் எதாவது குறை சொல்லி பேசி அவர்களை கஷ்டப்படுத்தி கொண்டே இருந்தாள்… இப்போது இதையும் அவள் பிரச்சினை ஆக்கி விடுவாளோ என்று, அய்யோ இந்த அக்கா வேற நான் ஏதோ வேணும்னு செஞ்சது போல இந்த ஹீட்லர் மம்மி கிட்ட மாட்டி விடுறாங்களே என்று நினைத்து கொண்டு கவனிக்கல மம்மி வேணும்னு செய்யல, நான் அவங்க கிட்ட சாரி கூட சொல்லிட்டேன் என்றாள் தியா…

மஞ்சுவோ சாரி சொல்லிட்டா போதுமா சட்டை ஃபுல்லா கறை… இதை போட்டுட்டு எப்படி பங்ஷன் அட்டன் பண்ணுவாங்க என்று கொஞ்சம் கோவமாக பேச, யமுனா தியாவை பார்த்து எல்லா விஷயத்திலும் விளையாட்டு, கொஞ்சம் கவனமா இருங்க மாட்டியா என்று திட்டி விட்டு சாரி தம்பி நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் என் பொண்ணுக்காக  என்றார்...

திவேஷ், ஆன்டி இட்ஸ் ஓகே நோ ப்ராப்ளம், இது ஒரு சின்ன விஷயம் இதுக்கு போய் நீங்க ஏன் சாரி சொல்றீங்க… அவங்களை திட்டாதீங்க... என் மேலேயும் தப்பு இருக்கு… நான் மொபைல் பார்த்துட்டே எதிரே வந்தவங்களை கவனிக்கல… சாரிமா என்றான் தியாவை பார்த்து, அவளும் சாரி ப்ரோ என்றாள்… யமுனா தாங்க்ஸ் தம்பி உங்களுக்கு நல்ல மனசு என்று விட்டு தியாவை அழைத்து கொண்டு உள்ளே சென்றார்… செல்லும் அவர்களையே கூர்ந்து பார்த்து கொண்டு இருந்த திவேஷ் மனதில் தேவாவிற்கு இந்த பொண்ணை நேரில் பார்த்தால் அடையாளம் தெரியுமா என்ற யோசனை எழுந்தது…. பின்பு வெண்ணிலாவிடம் கார்ல் இன்னோரு செட் டிரஸ் இருக்கு சேன்ஜ் பண்ணிட்டு வரேன் என்று கூறி அங்கு இருந்து வெளியே சென்றான்… திவேஷ் சாரி கேட்டதை பார்த்து வெண்ணிலாவிற்கு தான் அதிர்ச்சி… அவளுக்கு தெரியாத தன் கணவனை பற்றி, திவேஷ் தன் மீது தவறு இருந்தாலே சாரி கேட்க மாட்டான்… சின்ன ஒரு பிரச்சனையை கூட பேசி பேசியே பெரிய பிரச்சினை ஆக்குபவன்… இன்று தியா மேல் தவறு இருந்தும்... அதை பெரிதுப்படுத்தாமல்  அவன் மன்னிப்பு கேட்டு அமைதியாக இருந்தது அவளுக்கு அதிர்ச்சி தான்… திவேஷ் செயலுக்கு பின்னால் வேறு ஏதோ ஒரு  காரணம் நிச்சயம் இருக்க வேண்டும் என்று எண்ணம் எழுந்தது... இருந்தாலும் இப்போதைக்கு அந்த எண்ணத்தை வெளி காட்டாமல் அவன் உடை மாற்றி வந்ததும் உள்ளே சென்றாள்…

விடாமல் துரத்துராளே!!Unde poveștirile trăiesc. Descoperă acum