கல்வியின் கரம் பிடித்து விட்டால் வாழ்வில் கரம் பிடிப்பவனை எதிர்பார்க்காமல் எந்த சூழலையும் துணிந்து சந்திக்கலாம் என்னும் எண்ணத்தில் மிதப்பவள், பட்டம் பெறாமல் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க மாட்டேனென கங்கணம் கட்டிக்கொண்டு இருப்பவள் வந்தனா.
செல்வத்தில் மிதந்தாலும் தன் கனவு பாதையை சந்திக்க இயலாமல் வாடும் சுபித்ரா.
உடன் பிறப்புக்காக எதையும் சந்திக்க துணியும் மனோஜ்.
எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றியை கண்டாலும் ஒரு துணையின்றி, செய்யும் அனைத்து செயல்களிலும் நிறைவை சந்திக்க இயலாமல் ஒரு துனைக்காக தவம் கிடக்கும் கவின்.
அன்னையின் தயவால் 23 வயதிலேயே வந்தனாவின் கரம்பிடிக்க காத்திருக்கும் கவினின் இனிய மொழியால் அவள் மனதின் எண்ணங்களை கைவிட்டு அவன் கரம் பிடிப்பாளா?
விதியின் அடுத்த சதி என்னவென்ற யோசனை எதுவுமே இல்லாமல் வாழ்வில் முக்கிய முடிவெடுக்கும் இவர்கள் நால்வரையும் தெரிந்தோ தெரியாமலோ முறையான பாதையில் இட்டுச் செல்லும் நாயகன், தன் வாழ்வின் சந்திப்பது என்னவோ தொடர் தோல்விகளையே...
இவ்வைவரின் வாழ்வும் ஒன்றாக ஒரே நேர்கோட்டில் சந்தித்து கொள்ளும் விதியின் அந்த ஒரு பக்கம் வரும் நேரம் இவர்களின் நிலை என்ன?..
தெரிந்து கொள்ள படியுங்கள், "சந்திப்போமா (விதியின் ஒரு பக்கம்) Jul 9 onwards.
Oops! Bu görüntü içerik kurallarımıza uymuyor. Yayımlamaya devam etmek için görüntüyü kaldırmayı ya da başka bir görüntü yüklemeyi deneyin.
Genre. : Fiction Started : 9,Jul, 2021 Ended. : Ongoing