❤️ KV ❤️

26 2 0
                                    

1. KV  💖 part 1💖(காவல் வீரா)

மக்களே... என்னோட. தனிப்பட்ட ஸ்பெஷல் கதை இது. கல்கி வீரா என்றழைக்கப்பட்ட "காவல் வீரா". (முதல் பாகம் - ஷேனாவின் காதல் மாயாவின் கையிலே)

கல்கி வீரா படிச்சவங்களுக்கு தெரியும் இந்த கதை போக்கு எப்டி இருக்கும்ன்னு... பட் அவங்களுக்கும் இது படிக்க கண்டிப்பா புதுசா தா இருக்கும்... 😁 படிக்காதவங்களுக்கு ஒரு குட்டி முன்னோட்டம் 😁🥰.. நெறைய விஷயம் சேத்து விட்டுறுக்கேன்... ஹிஹி...

முன்னோட்டம்.

"மறுமை பூமி"

அநியாயங்கள் நிறைந்த பூலோகம் தோன்றிய அதே நாளில் மாயங்கள் நிறைந்து தோன்றிய ஒரு லோகம்.

"இருள் சூழ வேண்டும்... பிரபஞ்ச மெங்கிலும்.... ஒளி என்பது துளியேனும் இல்லாது.. முழுவதும் இருள் சூழ வேண்டும்.. அதை இந்த இருளரசன் ஆழ வேண்டும்..."

பிரபஞ்சத்தை கைக்குள் வைக்க துடிக்கும் துஷ்டர்கள் ஒரு துருவம்..

✨✨✨

"குழந்தைகளுக்கு என்ன பெயர் சூட்டவிருக்கிறீர்கள்??.. "

"மகாராணி... முதல் பிள்ளைக்கு மாயா என்றும் இரண்டாமவளுக்கு ஹாசினி என்றும் பெயர் சூட்ட முடிவெடுத்துள்ளோம்.."

"ஹம்... மஹி மாயா... ரக்ஷஹாசினி... இனி தர்ம ராஜ்யத்தை காக்கும் இளவரசிகள் இவர்கள்...

இவ்விருவரின் பிறப்பும் பிரபஞ்சத்தின்  சரித்திரத்தின் ஒரு முக்கிய பக்கங்களாக திகழும்.. இருளை அழித்து ஒளியை பெருக்கும் போராட்டத்தில் இந்த இரு பிஞ்சுகளின் பங்கு உயர்ந்திருக்கும்...

துஷ்டர்களை எதிற்கும் நாயகிகள் ஒரு துருவம்.

✨✨✨

என்னை மன்னித்து விடு அண்ணா... நான்... இங்கிருந்து செல்கிறேன்... எமக்கு என் சினேகன் வேண்டும்..

ஸ்ரீதேவி.. அவன்.. அவன் ஒரு துஷ்ட்டன்... நம் எதிரி... அவனை நம்பி ஏன் இவ்வாறு செய்கிறாய்?.. உன் பதவிக்கு மதிபளிக்காமல் இவ்வாறு துரோகியின் கரம் பிடிப்பது அநியாயம்.

தொடர் முன்னோட்டம்Where stories live. Discover now