ஹையோ கண்ணா அப்படி பார்க்காதே...
என் விழி உனக்குள் சிக்கிக்கொண்டு
சிரிக்கிறது எனை மறந்து ..பூக்கள் பூத்துவிட்டது ஆனால் அதில் நீ வந்து தேனெடுக்க அழைப்பு விடணுமா என்ன..??
மஞ்சள் மாங்கல்யம் நீ
அணிவிக்க என் நெஞ்சு குழி
மத்தியில் அழகாய் அசைந்தாட வேண்டி காத்திருக்கிறேன்....
பூத்த நாளில் இருந்து உனக்காக.. .
உன் கரங்கள் கோர்த்து இல்லறம் துவங்க..பரிசம் போடவில்லை ...
வெற்றிலை பாக்கு மாற்றவில்லை. நிச்சயதார்த்தம் மட்டும் முடிந்துவிட்டது நம் காதலை கூறி நமக்குள் ஏற்றுக்கொண்டதுமே.. ..வண்ணமயமான வாழ்க்கை
தொடங்க விரைவில் வந்து சேரடா
என் மனதை உன் வசப்படுத்திய
என் மன்னவனே..!!!!
![](https://img.wattpad.com/cover/159093955-288-k678881.jpg)
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....