அத்தியாயம் - 35

Start from the beginning
                                    

ஆதவனை பார்த்து, "சஹானாவை வீட்டுல விட்டுடு நான் ஒரு மணி நேரத்துல வந்துடுவேன்" மறைமுகமாய் அவர்கள் காதலுக்கு பச்சை கொடி காட்டியவன் வாகனத்தினுள் நுழைந்தான்.

"தமிழு, கௌதமு... இவன் என்னோட லவ்க்கு ஓகே சொல்லிட்டானா?" நம்ப முடியாமல் நண்பர்களிடம் சந்தேகம் கேட்டான்.

"கல்யாணத்துக்கே ஓகே சொல்லிட்டாண்டா என் வென்று" சந்தோசமாக நண்பனை அடித்தான் கெளதம். அங்கு வாகனத்தை எடுத்துக்கொண்டு  சென்றவன் வேகமாக நடந்து செல்லும் மணிமேகலையை மறித்து அந்த கூட்ட நெரிசலான சாலையில் நிறுத்தினான்.

மறித்து நின்றவன் கண்ணாடியை இறக்கிவிட்டு, "ஹாய் டா மான்குட்டி" உற்சாகமாக வணக்கம் வைத்தான்.

"போங்க நான் பேச மாட்டேன்" மான்குட்டி அழைப்பில் மனதில் இருந்த சோகம் எல்லாம் வீதி என்றும் பாராமல் கண்ணீரை அவனிடம் காட்டினாள்.

"போக மாட்டேன். வா வண்டில வந்து ஏறு" - ஆதி

"உங்க கூட எல்லாம் நான் வர மாட்டேன். போங்க... போங்க" என்றாள் இன்னமும் அழுகையுடன். சில நொடிகள் பொறுமை காத்த வாகன ஓட்டிகள் பொறுமை தாளாமல் ஹாரன்களை இஷ்டத்திற்கு அலறவிட்டனர்.

"இப்போ என்ன வேணும் உங்களுக்கு? டிராபிக் ஆகிட போகுது. கிளம்புங்க" என்றாள் மனமே இல்லாமல். பின்னால் இரைச்சல் சத்தம் கூடிக்கொண்டே சென்றது.

"நீ இல்லாம வண்டி ஒரு இன்ச் கூட நகராது" அவனும் பிடிவாதமாய் இருக்கையில் வசமாய் சாய்ந்து அமர்ந்து ஏதோ பாட்டை முணுமுக்க துவங்கினான்.

"யார்டா நீ... நடு ரோட்டுல வண்டிய சாவகாசமா நிப்பாட்டிட்டு இருக்க, எடுடா..."

"யோவ் வேலை வெட்டி இல்லனா ஓரமா போய் நின்னு ஒய்யாரமா ஓய்வெடு, உயிரை வாங்கனே நிக்கிறானுக பாரு"

பார்ப்போர் எல்லாம் ஆதியை கண்டமேனிக்கு திட்ட அவனோ எதையும் காதில் வாங்காமல் உல்லாசமாக அமர்ந்திருந்தான். திருட்டு முழியோடு நின்ற மணிமேகலையை ஒட்டி உரசி இருசக்கர வாகனங்கள் செல்ல துவங்க இருந்த ட்ராபிக் நெரிசலை பார்த்த ஒரு காவல் அதிகாரியும் வருது தெரிந்த உடன் வேகமாக காரின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்துகொண்டாள் மணிமேகலை, "பிடிவாதம்" என்ற முணுமுணுப்புடன்.

இணையா துருவங்கள் (Completed)Where stories live. Discover now