அத்தியாயம் - 35

2.2K 65 110
                                    


மருத்துவமனையை விட்டு வெளியில் வந்த ஆதி கண்ணில் சிக்கினாள் அவன் மான்குட்டி. வராத சிரிப்போடு நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தவள் கண்ணில் அத்தனை பரிதவிப்பு. 

அவளை பிடித்து வைத்திருந்த நண்பர்களுக்கு நன்றியை மனதின் உள்ளே உரைத்தவன் வேகமாக அவர்களை நோக்கி கால்களை அகற்றினான். 

ஆதி வருவதை பார்த்தவள் அவசரமாக நண்பர்களிடம் விடைபெற்று நகர்ந்தாள்.

"ஆதவா கார் கீ தா" காலில் வெந்நீரை ஊற்றியது போல் துடித்தவன் கண்கள் மொத்தமும் நடந்து செல்லும் அவனவள் தான்.

காற்றில் பறந்துகொண்டிருந்த அவன் கையில் சாவி விழுந்ததையும் கவனிக்கவில்லை ஆதி.

"சாவி வச்சு ஒரு மணி நேரமாச்சு நீங்க கைய கீழ இறக்கலாம்" தமிழ் குரல் கேட்டு அப்பொழுது தான் அதை கவனித்தான் ஆதி.

'ஈஈ...' பற்களை காட்டி சிரித்தவன் துரிதமாக வாகனத்தை நோக்கி நகர அவன் கையை பிடித்து நிறுத்தினான் கெளதம், "எங்க போற?"

"மான்குட்டிக்கு கால் வலிகிதாம்... அது தான் ஜண்டு பாம் வாங்கி தர போறேன்" - ஆதி

மீண்டும் பறக்க தயாராக இருக்க இன்னும் விடவில்லை கெளதம்.

"ஏதேய்??!!..." - கெளதம்

"கால் வலிக்கு ஜண்டு பாம் போடணும்னு நான் இப்போ தான் கேள்வி படுறேன்" - தமிழ்

"அடேய் கலாய்க்கிற நேரமில்லைடா இது மான்குட்டி ஓடுது... கைய விடுடா பேமானி" என்ன பேசியும் கெளதம் நண்பனின் கையை விடவில்லை.

"தழல் சீரியஸ் கண்டிஷன்ல இருக்கானாம். ஈஸ்வரன் அதே நிலைமை தான்" இவன் நம் பேச்சை கேட்கப்போவதில்லை என்று ஒப்புவித்தான் தமிழ்.

ஒரு நிமிடம் நின்று அவன் பேசியதை கேட்டவன், "அவனுகள விட்டுட சொல்லுடா... உள்ள இருக்கறவன் காலு காலுன்னு கத்துறான்"

நண்பர்கள் விசித்திரமாக அவனை பார்க்க, "என்னடா அப்டி பாக்குறீங்க? தழல் மேல கூட எனக்கு பெருசா கோவம் இல்ல, ஈஸ்வரன் மேல தான் வெறியேறுது. நாம அவன அடிச்ச அடிக்கு வெளிய போனாலும் ஒரு மணி நேரம் கூட தாங்க மாட்டான். ஏதாவது காட்டுக்குள்ள விட்டுட்டு வர சொல்லிடு. நம்மளால அவன் சாக கூடாது அவ்வளவு தான். ஆனா அவன் துடி துடிச்சு சாகனும். அத மட்டும் ஜெயன பாத்துக்க சொல்லு"

இணையா துருவங்கள் (Completed)Where stories live. Discover now