அத்தியாயம் - 22

861 37 17
                                    




சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம் தாளாமல் கண்ணில் பட்ட மோர் கடையில் நின்று மோர் அருந்திக்கொண்டிருந்தவன் சட்டை எல்லாம் வேர்வையில் நனைந்திருந்தது. வறண்டிருந்த தொண்டைக்கு இதமாய் அந்த மோர் நீர் உள்ளே சென்றாலும் ஆதியின் மூளை மொத்தமும் செயல்படாத எண்ணம்.

கடந்த ஒரு வாரமாக பைனான்ஸ் கம்பெனி, பேங்க், வட்டிக்கடை என ஏறி இறங்காத இடம் இல்லை. தெரிந்த மொத்த இடத்திற்கும் சென்றாகிவிட்டது எங்கும் தெளிவான பதில் இல்லை. எங்கு சென்றாலும் ஏதோ ஒரு இடத்தில் முட்டி நிற்கும் பிரம்மை.

கைபேசி சினுங்க, அழைப்பவர் எவர் என்றும் பாராமல் எரிச்சலோடு, "ஹலோ" என்றான்.

"ஹலோ ஆதி தான பேசுறது? வட்டிக்கு பணம் கேட்டுட்டு இருக்கன்னு கேள்வி பட்டேன். கந்துவட்டி ஓகேவா?"

கந்துவட்டி என்று யோசனை இருந்தாலும் கிடைத்த ஒன்றையாவது விட வேண்டாமென்று, "எந்த ஏரியா?"

"கூவம் பிரிட்ஜ் வந்து இதே நம்பர்க்கு கால் பண்ணு, நான் அங்க தான் இருக்கேன்" என்றவன் பேச்சிலே அடாவடி தனம் இருந்தது.

"நான் யோசிச்சிட்டு நாளைக்கு கால் பண்றேன்" என்று இணைப்பை துண்டித்துவிட்டான். இப்பொழுது எங்கு செல்வதென்று தெரியவில்லை. மீண்டும் கைபேசியோலிக்க எடுத்துப்பார்த்தான்.

இது தமிழின் தந்தை நந்தன் தான். அழைப்பை ஏற்காமல் அப்படியே விட்டு பாக்கெட்டிலிருந்து சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தான். சூடான புகை உள்ளே சென்றதும் இதம் பரவுவதற்கு பதில் வழக்கம் போல் தன்னையே தண்டிக்கும் எண்ணம் மட்டுமே. மீண்டும் நந்தன் அழைத்தார்.

உச்சகட்ட எரிச்சலில் அழைப்பை ஏற்று, "ப்பா வெளிய இருக்கேன் என்ன தான் வேணும் உங்களுக்கு?" பேசிய வார்த்தை புரிபட தலையில் அடித்து, "வேலைல இருக்கேன் ப்பா" அமைதியாக பதிலளித்தான் கையிலிருந்த சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி.

"டேய் வீட்டுக்கு வாடா" அவரும் கட்டமாகவே பேசினார்.

"புரிஞ்சுக்கோங்க ப்பா... என்ன பண்றதுனே தெரியாம நானே பைத்தியம் புடிச்ச மாதிரி அலைஞ்சிட்டு இருக்கேன்" குரலில் அத்தனை சோர்வு.

இணையா துருவங்கள் (Completed)Where stories live. Discover now