மிது பிரபாவுடன் இருந்ததை வாசுவிடம் கூற வாசுவிற்கு வந்த கோவத்தில் மிது கன்னத்தில் ஓங்கி அடித்தான். வாசு அடித்த அடியில் மிது இரண்டடி தள்ளி சென்று விழுந்தாள்.
வாசு தலையை கோதி தன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு மிதுவை தூக்கி நிறுத்தினான். மிது கன்னத்தில் கை வைத்துக் கொண்டு தேம்பலுடன் நின்றிருக்க வாசு "அறிவிருக்கா உனக்கு என்ன காரியம் பன்னிட்டு வந்திருக்க உன்னை அவனை பார்த்துக்க அனுப்பனா நீ அவன் கூட ச்ச" என்று அதற்கு மேல் கூறாமல் அவள் மேல் இருந்து கையை எடுத்து விட்டு தலையை கோதியவாறு இரண்டடி பின் சென்றான்.
"உன்னை சொல்லி குத்தம் இல்லை என்னை சொல்லனும் உன்னை அங்க அனுப்பனன் பாரு என்னை சொல்லனும்" என்று வாசு அவனை அவனே அடித்துக் கொண்டான்.
"நீ தான் அப்படினா அவன் எந்த தைரியத்துல உன் மேல கை வச்சான் அவன் கூட யோசிக்கவே இல்லையா சாருவ பத்தி ஒரு நிமிஷம் கூட அவன் யோசிக்கலையா" என்று வாசு கேட்க "பிரபா சுயநினைவுலே இல்லை" என்று மிது கூற வாசு மிதுவை கொலைவெறியுடன் பார்த்தான்.
"உன்னை என்ன சொல்ரதுன்னே தெரியல மிது இதுக்கு அப்பறம் உனக்குன்னு ஒரு லைப் நா எப்படி அமைச்சி கொடுப்பன் ஐய்யோ" என்று வாசு அடுத்து என்ன செய்ய போகிறோம் என்று பதட்டத்தில் அங்கும் இங்கும் நடந்தான்.
"நா எங்கையாவது கண்காணாத இடத்துக்கு போய்ட்ரன் அண்ணா பிரபா கிட்ட இந்த விஷயம் சொல்ல வேணா சாரு கூட அவன் லைப் லாங் ஹாப்பியா இருக்கனும்" என்று மிது கூற "இத நேத்து நைட் யோசிச்சிருக்கனும் சாரு கூட வாழனுமாம்" என்று கூறியவன் "நீ போய்ட்டா எல்லாம் சரி ஆகிறுமா சரி நடந்தத விடு இப்ப நீ வீட்டுக்கு போ என்ன பன்னலான்னு யோசிக்கலாம் அதுக்குள்ள எதாவது தப்பா முடிவெடுத்து தொலையாத கிளம்பு" என்று கூற மிதுவும் கிளம்பினாள்.
வாசு ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து கிளம்பி பிரபாவை காண சென்றான். வாசு சென்ற நேரம் பிரபா விழித்திருந்தான். "டேய் மிது எங்க டா" என்று பிரபா கேட்க வாசு "அவ வந்தது உனக்கு தெரியுமா" என்று வாசு கேட்க
![](https://img.wattpad.com/cover/268367933-288-k995481.jpg)
YOU ARE READING
கண்மணியின் காதலை தேடி
Romanceகாதல்!..... கண்ணுக்குள் ஊடுருவி நெஞ்சுக்குள் எறிந்திடும் சுகமான வலி!..... கனவுகளை அடைந்திட கை கொடுக்கும் தன்னம்பிக்கை ..... வெற்றி தோல்வியை சமமாய் பங்கெடுக்கும் பாதி உயிர்..... அளந்திட முடியா நேசம் கொண்ட ஆழி.... மூச்சு முட்டேனும் மூழ்கிட துடிக்கும்...