மிதுவை பார்க்க பிரபாவும் வாசுவும் ஆவலாக ஓர் இடத்தில் காத்திருக்க டிடெக்டிவ் "சார் சார் வந்துட்டாங்க அங்க பாருங்க அவங்க தான" என்று ஓர் திசையில் கை காட்ட பிரபாவும் வாசுவும் அவர் காட்டிய இடத்தில் இருந்தவரை பார்த்து அதிர்ந்தனர்.
மிது அங்கு இருந்தவரை லூசாக ஆடை அணிந்து கை நிறைய வளையல்கள் அணிந்து தலைமுடியை பின்னலிட்டு இருப்பாள் ஆனால் இப்பொழுது மிது நன்று உடலோடு ஒட்டியவாறு உடை அணிந்து கூந்தலை விரித்து விட்டவாரு ஒரு கையில் வாட்ச் மறு கையில் ப்ரேஸ்லெட் என்று மிதுவாகவே தெரியவில்லை.
"மச்சான் மிதுவா டா இது ஆளே மாறி போய் இருக்கா" என்று வாசு ஆச்சரியமாக கூற "எனக்கு அந்த மிதுவ தான் டா ரொம்ப பிடிக்கும்" என்று பிரபா கூற வாசு புன்னகைத்தான்.
"சார் வாங்க போய் பேசலாம்" என்று டிடெக்டிவ் கூற "இல்லை சார் அவ எங்க இருக்கா யார் அவ கூட இருக்கான்னு தெரிஞ்சிக்கனும்" என்று பிரபா கூற வாசுவும் டிடெக்டிவும் சரி என்று அமைதியாக மிதுவை கண்காணிக்க தொடங்கினர்.
மிது அங்கு வந்து நின்ற ஆட்டோவில் ஏறி செல்ல பிரபாவும் அந்த ஆட்டோவை பின்பற்ற தொடங்கினான். ஆட்டோ சிவகாசிக்குள் நுழைந்து சென்றுக் கொண்டிருக்க பிரபாவும் விடாமல் பின் தொடர்ந்தான்.
ஓர் பரிசு பொருள் கடை முன் ஆட்டோ நிற்க பிரபாவும் வண்டியை பத்தடி தூரத்தில் நிறுத்தினான். மிது உள்ளே சென்று ஏதோ வாங்கியவள் கண்ணாடி வழியாக வெளியில் காரில் வாசுவை பார்த்து விட்டாள்.
"வாசு அண்ணா இங்க எப்படி ஒருவேளை என்னை தேடி வந்திருப்பாரோ அண்ணா மட்டும் தான் வந்திருக்காரா இல்ல பிரபாவும்" என்று சந்தேகமாக காரின் முன் பகுதியில் பார்த்தவள் பிரபாவை பார்த்து அதிர்ந்தாள்.
பிரபா மிதுவை பார்க்க மிது சட்டென திரும்பி பொருளை பார்ப்பது போல் பார்த்தாள். "ஓ காட் அவங்க என்னை பார்த்துட்டாங்க என்ன தான் பாலோவ் பன்னி வராங்க இப்ப நா என்ன பன்னுவன்" என்று பதட்டமானவள் அவளுக்கு தேவையானதை வாங்கிக் கொண்டவள் மீண்டும் அதே ஆட்டோவில் ஏறினாள்.
VOUS LISEZ
கண்மணியின் காதலை தேடி
Roman d'amourகாதல்!..... கண்ணுக்குள் ஊடுருவி நெஞ்சுக்குள் எறிந்திடும் சுகமான வலி!..... கனவுகளை அடைந்திட கை கொடுக்கும் தன்னம்பிக்கை ..... வெற்றி தோல்வியை சமமாய் பங்கெடுக்கும் பாதி உயிர்..... அளந்திட முடியா நேசம் கொண்ட ஆழி.... மூச்சு முட்டேனும் மூழ்கிட துடிக்கும்...