உறவுகளை அனுசரிக்கும் எண்ணம் என்றுமே அவருக்கு இருந்தது இல்லை. நரியின் தந்திரம் நிறைந்த சூழ்ச்சியும், கண்களில் குரூரமும் காண படுபவர். தங்கையின் திருமணம் முடிந்த பிறகு தங்கை கணவருக்கு நல்ல பிள்ளையாக நடந்து சிறிது சிறிதாக தொழிலும் நுழைத்து விட்டார்.
"மாமா எப்ப வந்திங்க இந்தியாக்கு?" பாசத்தில் அவரை நோக்கி ரெண்டு அடி வேகமாய் எடுத்து இறுக்க அணைத்து கொண்டான் விஷ்னு.
"நேத்து தான் மாப்பிள்ளை வந்தேன். என்ன மாப்பிள்ளை துரும்பா எளச்சு போயிட்ட?" என்று மேலும் கீழும் தன் பாச மருமகனை பார்த்தார்.
"மாமா நானா எளச்சு போயிருக்கேன் பாருங்க நல்லா ஜிம்கு போய் பாடி பில்டு பண்ணி வச்சிருக்கேன், இது ஆர்ம்ஸ் மாமா" என்று தனது புஜங்களை அவரிடம் காண்பித்தான்.
அவனை ரசித்து பார்த்தவர், "என்ன இருந்தாலும் நீ எளச்சு தா போயிருக்க மாப்பிள்ளை. என்ன வீட்டுல ஒழுங்கா கவனிப்பு இல்லையா?" என்று இறுதி வரியை ஹரியை நோக்கி பேசியவறை, விருப்பம் இல்லா பார்வையை அவர் மீது வீசி அந்த இடத்தில் இருந்து நகர்ந்தான் ஹரி.
ஹரி சென்றதை பார்த்து, "ஏன் மாமா இப்டி பேசுனீங்க அவன் முன்னாடி? சித்தி மாதிரி என் அம்மா இருந்த கூட இன்னேரம் பாத்துருக்க முடியாது. நாங்க ஒன்னும் சித்தி பசங்க பெரியம்மா பசங்க மாதிரி பழகல. அவன் என் கூட பொறந்தவனுக்கும் மேல... என்னோட சித்தி என்னோட அம்மாக்கு சமம்" அழுத்தமாய் அடி குரலில் இருந்து தனது எதிர்ப்பை தெரிவித்தான்.
ஒரு நொடி தன் முன் நிற்பது விஷ்ணுவா இல்லை உதய் மாதவனா என்ற சந்தேகம் பிறந்தது அவன் குரலில்.
நிலைமையை சமாளிக்கும் பொருட்டு, "அட என்ன மாப்பிள்ளை சும்மா சொன்னா சின்ன மாப்பிள்ளை கோச்சுக்குறான் அத போய் நீயும் பெருசா எடுத்துக்காத. அப்றம் என் பொண்ணு என்ன சொல்றா? எப்ப கல்யாணத்தை வச்சுக்கலாம்?"
அவரது கேள்வியில் நெளிந்தவன், "இப்ப எதுக்கு மாமா அத பத்தி, அதி படிக்கட்டும் அப்றம் பேசிக்கலாம்" என்று பேச்சை மழுப்பினான்.
YOU ARE READING
இணையா துருவங்கள் (Completed)
Romanceஉதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்யத்தை நொடியில் தரை மட்டம் ஆக்குவதில் வல்லவன். இவன் கால் பதிக்காத துறை இல்லை செல்லாத நாடும் இல்லை. ஆத...
அத்யாயம் - 7
Start from the beginning