இதயம் 23

34 1 0
                                    

                                                               திருமணதிற்கு பின்

உன்னில் நானும்...என்னில் நீயும் 

இணைந்திருக்கத் தேவை இல்லை

நானும் உன்னை மணந்திருக்கத் தேவை இல்லை

திருமணம் வரை உன்னுடன் இருந்த என் மீதான காதல்

திருமணதிற்கு பிறகு சிறிது சிறிதாய் களைந்து போனது

உன்னோடு வாதம் செய்தே என் நாட்கள் போனது..!

என் இரவுகளும் நீண்டது -சண்டை 

போடும் நாட்களில் உனது சுருக்கென்ற வார்த்தைகளில் 

அனுதினமும் மரணம் தழுவிச் செல்கிறேன்..!

அவன் சுமையோடு என் சுமையையும் 

வழியின்றி சுமந்தவன் -இன்று

சுமையோடு,சுமையாக என்னையும் தூக்கி எறிகிறான்..!

தியாகம் என்ற வலையில் நான் விழுந்து -உன்னிடமிருந்து

சாபம் என்ற ஒன்றை பெற்றுக் கொண்டேன்..!

கூடி இருந்தும்,குடியே உலகமென்பாய்-நான் 

வாடி இருந்தும் வலியை மட்டுமே தருகிறாய்

சொன்ன சோகம் கொஞ்சமே

இந்த பாரம் போதுமே..!!!

காதல் நுழைந்தால் என்ன ஆகும் இதயம்!!!Where stories live. Discover now