இதயம்- 15

149 10 5
                                    


  நீ வளர்ந்து கொண்டே செல்கிறாய்
காலவரை இன்றி !

நான் வெட்டி எறிந்தாலும்
நீ வளர்ந்து கொண்டே செல்கிறாய்
வளர்பிறையாக !

நீ வேண்டாம் என விலகி நின்றாலும்
அந்த மனஸ்தாபம் ...
ஒரு நொடியில் உருகி விடுகிறது
பனித்துளியாக !

நீ என்று பார்த்தாலும்
முதல் நாள் பார்த்த
அதே தூறல் !

பிறப்பிற்கும்,இறப்பிற்கும்
இடையில் நீ
இருந்தாலும்..
உன்னை விட்டு பிரிய மனம்
விட்டு சென்றதில்லை !

நீ இருக்கும் பொது
என்னை சுற்றிய நிகழ்வுகள்
மறைந்து விடுகிறது !

நீ என்னை விட்டு செல்கையில்
பிறந்ததன் அர்த்தம்
புரிகிறது !

மீண்டும் வந்து சேர்கையில்
உன் வளர்ச்சி
அபரிமிதமாகிறது !

நீ வந்த பின்
என் கண் முன்னே
சொர்கத்தையும் !

நீ சென்ற பின்
அதே கண்களால்
மரணத்தையும்
யாசிக்கிறேன் !

உன்னை அளித்து விட்டால்
புதிதாய் முளைப்பாயே தவிர
வேரோடு அழிய மாட்டாய் !

நீ பலர் இதயங்களை
பருகி இருக்கலாம் ...

சிலர் இதயத்தை தட்டி
பார்த்து இருக்கலாம் ...

ஆனால்

அன்பின் அர்த்தத்தை
உன்னிடம்தான்
முதன் முதாலாய்
பரிசித்தேன் ....

தாய் என்பவள் எவள்?
தந்தை என்பவன் யார் ?
என்பதை
அழுத்தமாக
திருத்தமாக
உருக்கமாக
சொல்லியதும் நீதான் !

நீ எவனிடத்தில்
பிறந்தாயோ?
அவர்களிடமே வளர்கிறாய்...
நல்ல
அனுபவங்களை
கற்றுத் தருகிறாய்...

வளர்வாய் நீ
இன்னும் பல
நூற்றாண்டுகள் !

மனிதனை விட்டு
மனிதனிடம்
இடம் பெயர்ந்து !!!  

காதல் நுழைந்தால் என்ன ஆகும் இதயம்!!!Where stories live. Discover now