முதல் கனவு முடிந்திடும் நேரம்
முழுமதியாய் அவள் முகம் படர்ந்திடும்!
பனித்துளி அவள் பகல் நிலவென
ஒரு சிறு கூச்சம் ஆட் கொள்ளுமே!
என திரு விழி கசிந்துருகிடும் நேரம்
அவள் அருகினில் இருந்திடத் தோன்றிடும்!
ஒரு தரம் அடித்திடும் இமைகளில்
மயில் இறகென விழுந்திடுவேன்!
அவள் தந்த சிறு மாற்றம்
எனக்குள் அது புது மாற்றம்!
இனிய இரவுகள் என அவள் துணை தேடிட
சட்டென தூரிகை தூவி
வசந்தம் சேர்த்திடுவாள் !
அவள் முன் சறுகென சரிந்திடும் இதயம்
பட படவென சிறகை விரித்திடும்!
ஒரு கணத்தூண்டலில்
குழந்தையாய் தவழும்
அவள் கை விரல் பட்டென
தொட துடித்திடும்!
இரவல் வாங்கி சேர்க்கும் இருதயமென
அவளிடம் இதழ்களை வாங்கி சேர்த்திடுவேன் !!!
YOU ARE READING
காதல் நுழைந்தால் என்ன ஆகும் இதயம்!!!
Poetryhi, this is me thenmozhi mathankumar....i already continued first book here as a couple ove story ...and this is my 2nd book its a tamil poet about love...i hope u like this poet and im eagerly waiting for upcoming voting if u have any complime...