அவள் கண்கள் எனக்காக
அலைமோதக் கண்டேன்!
இமை...இமையே
இவை நடுவே
எனை மீறிக் காண !
இது என்ன புது மாற்றம்
எனக்குள்ளே தோன்ற !
வழி நெடுக
இவள் மணமே
எனை மோதிச் செல்ல-அவளின்
புது சாயல் என்னுள்
களவாடக் கண்டேன்!
பேரழகை வெல்லும்
பெண் இவளே என்று
ஊனுக்கு உயிரே
பகையாகக் கண்டேன் !
இனியேனும் உறவாடி-என்
நாட்கள் போனால்
இதயத்தின் சம நிலையோ
நிறம் மாறக் கூடும்!
தலைகீழாய் என் உலகம்
மாறிப் போனால்
உயிர்கூட்டின் உறவும்
மோட்சம் காணும் !
இதுவே ...இதுவே
உன்னை யாசிக்கும்
நிலையாகிப் போனால்
நித்திரையும் உன் சப்தம்
பிறையாகக் கூடும்!
என் மனதில் தவழும் ஊசலாய்-நீ
ஆனால் தாலாட்டும் பல்லவியாய்
நானே ஆவேன் !
லோகமும்,சூன்யமாய்
மாறிப் போனால்-உன்
ஜாடைக் கண் இமையில்
புது லோகம் படைப்பேன்!
தாள் திறந்து நீ எனை ஒரு கணம் பார்த்தால்
பரவசம் என்னுளே பல நூறு காண்பேன் !!!