இணையா துருவங்கள் (Completed)

By Bookeluthaporen

45.6K 1.5K 1.4K

உதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கா... More

அத்யாயம் - 1
அத்யாயம் - 2
அத்யாயம் - 4
அத்யாயம் - 5
அத்யாயம் - 6
அத்யாயம் - 7
அத்யாயம் - 8
அத்தியாயம் - 9
அத்யாயம் - 10
அத்யாயம் - 11
அத்யாயம் - 12
அத்யாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்யாயம் - 18
அத்யாயம் - 19
அத்யாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 27
அத்தியாயம் - 28
அத்தியாயம் - 29
அத்தியாயம் - 30
அத்தியாயம் - 31
அத்தியாயம் - 32
அத்தியாயம் - 33
அத்தியாயம் - 34
அத்தியாயம் - 35

அத்யாயம் - 3

1.6K 60 66
By Bookeluthaporen

"அண்ணா... ப்ச்... சொல்றதக் கேளு,  தேவ இல்லாத வேலையபப் பாக்குற" பல்லவி நடுங்கிக் கொண்டே  சுற்றும் முற்றும் எவரேனும் உதவிக்கு வர மாட்டார்களா என்ற ஏக்கத்தோடுப்  பார்த்தாள். ஆனால் ஒருவரையும் காணவில்லை.

"அட..!  இரு மா பயப்படாத நான் பாத்துக்குறேன்"  நெஞ்சை நிமிர்த்திப் பேசியது வீர தீர விஷ்ணு தான்.

"அண்ணா ப்ளீஸ் வா இப்ப கூட ஒன்னும் இல்ல ஓடிறலாம்" - பல்லவி

எவ்வளவு கெஞ்சினாலும்  கண்டுக்கொள்ளாமல் தான் எடுத்த காரியத்தில் கண்ணாய் இருந்தான் விஷ்ணு. வேறு வழி இல்லாமல்  திவ்யாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பியபடியே சகோதரனை இயலாமையுடன்  மீண்டும் கெஞ்சினாள் பல்லவி.

சகோதரனின் அறைக்குள் நுழைந்து கார் சாவியினை திருடவே இந்த வேலை. 

"கொஞ்ச நேரம் பேசாம மட்டும் இரு. ஐஞ்சே அஞ்சு நிமிஷம் தான்.  சாவி அய்யா கைல தான் இருக்கு" 

அவன் உள் நுழைத்து 4 வது சாவியை முயற்சி செய்ய அதுவும் திறக்க மறுக்க, 'ப்ச்' எரிச்சலோடு அடுத்த சாவியை நுழைத்தவன் பின்னால் இருந்து ஒரு குத்து விழுந்தது.

"டேய் முட்டா பயலே ஏண்டா இங்க திருடிட்டு இருக்க?"

ஹரி  ஹஸ்கி குரலில் கேட்க, "அவன் கார் கீய ஒளிச்சு வச்சிருக்கான் டா அதான் எடுக்க போறேன், உன் பைக் கீ  வேணுமா?" - என்றான் விஷ்ணு

"அஹ்ஹ்... அப்டியே கல்லாச் சாவியும் எடு" ஹரி கேலியாக கூற,

பல்லை காமித்து, "ஹ்ம்ம் .. இதுவும்  நல்லா இருக்கே" என பதிலளித்த விஷ்ணுவை அடித்து துவைக்கும் வேகம் ஹரிக்கு.

"நீ ரொம்ப ஓவரா பண்ற மாட்டுனோம் செத்தோம் டா" - ஹரி

ஹரி எச்சரிக்கை எல்லாம் காதில் கேட்டால் தானே விஷ்ணுவிற்கு, "ஒழுங்கா என் கார் சாவிய குடுத்திருந்தா நான் ஏன் இப்டி திருடன் மாறி போகப்  போறேன்? இல்ல ஒரு அண்ணனா நடந்துருந்தா நான்  உரிமையோடு உள்ள போயிருப்பேன்" 

விஷ்ணுவிற்கு சகோதரன், சகோதரனாக நடக்கவில்லை என்பது வருத்தம் இல்லை, கோவம், "புடிக்கலைனா நீ  கிளம்பு" என்றான் முறைப்போடு.

"பல்லவி நீ கிளம்பு நான் சாவியோட வரேன், போறப்ப இந்த தொடை நடுங்கியயும் கூட்டிட்டு போ" தன்னை முறைத்த ஹரியை கண்டுக்கொள்ளவே இல்லை.

அடுத்தச்  சாவி உள்ளேச் சென்று கதவை 'க்ளிக்' திறந்து விட்டது. வெற்றிக்  களிப்பில் அறைக்குள்ளே  சென்றவன் ஒவ்வொரு இடமாகத்  தேட ஆரம்பித்தான். 

எங்கும் பைலை மட்டுமே காட்டியது அந்த அறை. தாடையை தடவியபடி, 'ஒரு வேலை ஸ்டடி ரூம்ல வச்சிருப்பானோ' என்று நினைத்து திரும்பியவன் வெளியே செல்ல எத்தனிக்கும்போது, வேகமாக உதய் மாதவன் உள்ளே நுழைவதை பார்த்துத் திடுக்கிட்டான். 

உள்ளே இருப்பவனை கண்டதும் யோசனையுடன் 'என்ன' என்று புருவத்தை உயர்த்தி கேட்ட தமையனைப்  பார்க்க கை நடுங்கியது விஷ்ணுவுக்கு.

"அதுது..  வந்து சாந்த் கன்ஸ்டிரக்ஷன்ஸ் ஃபைலை எடுக்க வந்தேன்" ஒரு நிமிடம் விஷ்ணுவை உதய்யின் பார்வை அளந்தது.

'ஐயையோ கண்டு புடிச்சிருவானோ' தம்பியின் நெற்றியில் வேர்வை வடிவதை உணர்ந்து, உதய் ஏ.சி ஆன் செய்து விட்டு, "கதவ பூட்டு" என்றதும் 'சரி' என்று கூட தலையை அசைக்க வில்லை வேகமாக சென்று கதவை பூட்டியவன், மீண்டும் பூனை போல் வந்து அதே இடத்தில நின்றான் விஷ்ணு.

பைலை தேடியவாறே, "எதுக்கு இப்ப அது?" என்று கேட்க, "இல்ல ரெபரன்ஸ்க்கு தேவ படுது" என்றான் விஷ்ணு. 

'அண்ணா' என்று அவன் உதய்யை அழைத்து ஆண்டுகள் ஆகியது ஆனாலும் அதை ஓரம் கட்டி உதய் அந்த ஃபைலுடன் இரண்டு சாவிகளை வைத்தான். 

சாவியை பார்த்த விஷ்ணு கொஞ்சம் ஆடிப்  போனான். அது ஹரி விஷ்ணு இருவரின் இரு சக்கர வாகன சாவிகள். விழிகள் விரிய சகோதரனை பார்க்க அவனோ கை கடிகாரத்தை கழட்டிவிட்டு டையை கழட்டி கொண்டு இருந்தான், கண் சிமிட்டி பார்த்த விஷ்ணு 'இது கனவு இல்லையே' என்று பார்க்க.

"என்ன?" என்று உதய் குரல் கேட்டு நினைவிற்கு வந்தவன், 'ஒன்னும் இல்லை' என்பது போல் தலையை ஆட்டி கதவை திறந்தான்.

"இனி யாரோட சாவியும் என்கிட்ட இருக்காது, இப்டி திருட்டு சாவி போட்டு உள்ள வர தேவ இல்லை. உங்க லைப் நல்லா இருக்கணும்னு நெனச்சு பண்ணேன். ஆனா உங்களுக்கு புடிக்கல, என்னமோ பண்ணுங்க எனக்கு வேலைல ஒழுக்கம் இருக்கனும் அவ்ளோதான்.  லைப்ல நீ என்னமோ ஆனா எனக்கு என்ன?" தான் வழக்கமாக கூறும் உணர்ச்சியற்ற தொனியில் கூறினான் உதய்.

சாவியை மறைத்து வைத்த பொழுது அது அக்கறையாக படாமல் கொடுமையாக பட்டது, அதுவே சாவியை கொடுத்து ஏதோ செய்துகொள் என கோவத்தோடு உதய் கொடுப்பது அதை விட கொடுமையாக பட்டது இளையவனுக்கு.

என்றும் வராத கோபம் இன்று வந்தது விஷ்ணுவிற்கு 'நீ என்னமோ ஆனா எனக்கு என்ன?' என்பதை கேட்டு 'ஒரு முறை கூட சகோதரன் என்கின்ற உரிமையில் என்னைத்  தண்டிக்க மாட்டாயா? ஒரு பணியாள் போல தான் என்னை பார்ப்பாயா?' என்ற கோவம்.

"ஆமா உனக்கு என்ன வர போகுது, உனக்கு எப்பயும் காசு, உங்க பிஸ்னஸ், பதவி தான முக்கியம், இந்த வீட்டுல இருக்கவன் எப்படி போனா உனக்கு என்ன வர போகுது? மிலிட்டரி ஆஃபீசர் மாறி இருந்தா திருட்டு தனமா தான்  உள்ள வர முடியும். அப்பறம் நான் ஒன்னும் ஆபீஸ்ல ஃபிராடு வேலை பாக்கல ஒழுங்கா இருன்னு சொல்றதுக்கு" விறு விறுவென வெளியே சென்றவன் கோவத்தில்  உதய்யின் அறையிலே பைலை கீழே ஏறிந்துச் சென்றான்.

விஷ்ணு சென்றப்  பாதையை பார்த்து கண்களை சுருகியவன் ஒரு பெருமூச்சுடன்  தலையை குலுக்கி விட்டு உடை மாற்றும் அறைக்கு சென்றுவிட்டான்.  

'என்ன கூறுவது அவனிடம்?' தன்மேலும் தவறு உள்ளது என்று உணர்ந்து இதற்கு மேல் எதுவும் பேச விரும்பவில்லை உதய். ஆனால் ஒரு பக்கம்   ஒரு சிறு புன்னகை வந்தது, சகோதரன் கோவத்திற்கு ஏனும் தன்னுடன் உரிமையாய் பேசுகிறான் என்று.

மற்றொரு பக்கம் ஏனோ இந்த ஆடம்பர வாழ்க்கையே விரும்புபவன் என்று கூறும் பொழுது அனைத்து உணர்ச்சிகளையும் தூக்கி எரிந்து அவனை அணைத்து, 'உங்க பாசம் தர்ற சந்தோசத்தை எதுனாலயும்  தர முடியாது. பாசத்தை தருவியாடா? உரிமையை தருவியா விஷ்ணு?' என்று கேட்க தோன்றியது.

ஆனாலும் தன்னுள் இருக்கும் அந்த தான் என்ற வார்த்தை அவனை மீண்டும் மனதிற்கு இன்னொரு வேலி போட வைத்தது,

"இனிமேல் நீயா வந்து அண்ணான்னு  உரிமைல பேசுனா மட்டும்  தான்  இந்த உதய் மாதவன் உன் அண்ணன் ஆவான், அது வரைக்கு நான்  வெறும் உதய் மாதவன் தான் " உறுதி எடுத்தான் தனக்குள்.

காலைப் பொழுது பனி மூட்டங்களின் நடுவில் மின்னும் பச்சை இளம் தளிரைப்  போல் அந்த மார்கழி மாத குளிரில் ஒரு சிறு சூரிய கதிர் அந்த விடியலுக்கு அழகை சேர்த்தது. கொஞ்சி கொஞ்சி விளையாடும் அந்த குயில்களின் அழகை ரசித்தவாறு தன் வீட்டுத் தோட்டத்தில்  நடையை மேற்கொண்டவன்,  அந்த சூரிய கதிர்கள் பட்டு உருகும் புற்களின் மேல் இருக்கும் சிறு துளி நீரையும் தன் வெறும் காலினால் ரசிக்கத்  தான் செய்தான்.

"என்ன பா உதய் ஞாயிற்று கிழமைலயும் இவளோ வேகமா ஏன்  எந்திரிச்ச?" கேட்டது அவன் சித்தப்பா.

ஒரு எதார்த்தப் பார்வைப் பார்த்து, "குட் மார்னிங் சித்தப்பா, பழக்கம் ஆகிடுச்சு நானே தூங்கணும்-னு நெனச்சா கூட தூங்க முடியல"

தோளில் அன்பாக தட்டியவர், "உன்ன நெனச்சா எனக்கு ரொம்பப்  பெருமையா இருக்குப்பா, இந்த வயசுல எவ்வளோ பக்குவம், நிதானம்.." 

யாருடையப்  போற்றுதலையும் கேட்க பிடிக்காது உதய்க்கு, "சித்தப்பா சித்தி உங்கள கூப்புடுறாங்கனு நினைக்கிறேன் " என்று உண்மையை கூறுபவன் போல கூற அவர் நம்பி விட்டார், 

"அப்படியா அப்ப உடனே போகணும்,  இல்லனா இன்னைக்கு எனக்கு பூஜ நடந்துரும்" சிரித்து விட்டுச்  சென்றார் மனைவியாய் எண்ணிப்  பயந்து. 

அவரின் சிரிப்பு தொற்றிக்கொள்ள உதயும் சிரித்தவாறே தலை அசைத்து வழி அனுப்பிவைத்தான்.

அவனை நோக்கி வந்த மற்றொரு உருவத்தைக் கண்டு , 'கருமம் புடிச்சவன் ' பொங்கி வந்தச்  சிரிப்பை அடக்கியவாறேத்   திரும்பினான் உதய்.  

இன்னும் உலர்த்தாத தலை முடியைக் கோதியபடி  நடந்து வந்த ஆதவனின் முகத்திலோ  எரிச்சல் ஏக போகமாகப் படர்ந்து இருந்தது, "என்ன டா காலைல மூஞ்சிய இவ்ளோ அழகா வச்சிருக்க" கிண்டலாக கேட்டான் உதய்.

"தம்பி இது உங்களுக்கு காலைலயா? எனக்கு இது மிட்னயிட் டா. உனக்குலாம் ப்ரண்டா இருந்தா இப்படி தான்  இருக்கும், எதுக்கு டா எங்க அம்மாகிட்ட போன் பண்ணி சொன்ன? அது என்னமோ நான்  எக்ஸாம் எழுத போற மாதிரி டான்னு அஞ்சரைக்கு எழுப்பி விட்ருச்சு, உங்க வீட்டுக்கு ஐயர் கூட இன்னும்  வரல அதுக்குள்ள என்ன எழுப்பி விட்டுட்டாங்க", தூக்க கலக்கத்தில் புலம்பியவனை சாந்தப்படுத்தி கையைப் பிடித்து வாசல் நோக்கி இழுத்துச் சென்றான்.

"சரிடா கோவப்படாத வா அப்டியே ஒரு சின்ன வாக் போலாம்"

"எது இந்த பனில?" ஆமாம் என்று தலையை ஆட்டிய உதய்யை பார்த்து முறைத்து, "போடா லூசுப்  பயலே" என்று வீட்டை நோக்கி உள்ளே சென்றான் ஆதவன்.

"சித்தி.. என்ன சமையல்?" நேராக சமையல் அறைக்குள் சென்ற ஆதவன் அங்கே இருந்த ஒரு வடையை எடுத்து வாயில் வைத்தான்.

கையில் கரண்டியால் ஒரு அடி விழுந்தது, "சாமிக்கு வைக்கிறதுக்கு முன்னாடி சாப்பிடக்கூடாது" என்று அதட்டியவர் மீண்டும் தன் வேலையை தொடர ஆரம்பித்தார்.

"குழந்தையும் தெய்வமும் ஒன்னு தான, எனக்கு குடுங்க. 6 மணிக்கு வந்துருக்க பையனுக்கு ஒரு வடை கூட இல்லையா" என்று உரிமையாக கூறி எடுத்து உண்ண ஆரம்பித்தவனை அதற்கு மேல் எதுவும் கூற இயலவில்லை அவரால், "மாடு மாறி வளந்துட்டு குழந்தையாம்  குழந்தை" காதை திருகிவிட்டு வேலையில் மும்முரம் காட்ட தொடங்கினார்.

"ஏன் சித்தி என்னமோ எல்லா வேலையும் நீங்களே பாக்குற மாறி சீன் போடுறீங்க வேலை ஆளுங்களும் ஹெல்ப் பண்ணாங்க தான?" 

பரிசாக ஒரு கொட்டு வாங்கியவன் அதனை துடைத்து விட்டான், "ஏன் பேச மாட்ட காலைல 4 மணில இருந்து வேலை செஞ்சிட்டே இருக்கேன் தனியா, நம்ம பூஜைக்கு நாமளே பண்ணாத் தான் மனசுக்கு திருப்தியா இருக்கும்"

"நீங்க ரெண்டு பெத்து போட்டுருக்கீகங்கல்ல  அதுகள எழுப்பி விட வேண்டியது தான. தனியா வேலை பாக்கணும்-னு என்ன அவசியம்?"

செல்லமாக அவன் கையில் அடித்தவர், "புள்ளைங்கள அப்படி சொல்லாத டா, பாவம் நைட் முழுக்க படிச்சிருப்பாங்க"

"எது அதுக படிச்சிருக்குகளா?" என்று புருவம் தூக்கி இழுத்தவனுக்கு, ஆமாம் என்று தலையை ஆட்டி பதில் கொடுத்தார்.  

ஒரு சிறிய தட்டில் ஆவி பறக்க பொங்கலை குடுத்தார், "அந்த 2 சாத்தானும் படிக்கிதுங்கனு நீங்க மட்டும்  தான்  நம்பனும், ரெண்டும் சரியான ஃபிராடு சித்தி என்ன என்ன சேட்டை எல்லாம் பண்ணுதுங்கனு தெரியாது உங்களுக்கு"

ஆச்சிரியத்துடன் வேலையாய் நிறுத்தி ஆதவனின் பக்கம் திரும்பியவர், "என்னடா சொல்ற பிள்ளைகளை பத்தி, என் பிள்ளைங்க அப்படி எல்லாம் பண்ணாதுங்க" ஆணித்தரமான நம்பிக்கையோடு வாதாடினார்.

"ம்க்கும் ..உங்க பொண்ணு திவ்யா இருக்காளே, அவளுக்கு கேம் மேல ஆர்வம் அதிகம்" என்று தொடங்கியவனை  "ஆனா அவ அப்பா சொன்னால  இப்பலாம் அந்த பக்கமே போறது இல்ல காலேஜ் முடிஞ்ச ஒடனே வீட்டுக்கு தான்  நேரா வருவா" என்றார் பெருமையுடன். 

காரணம் திவ்யாவின் தந்தை அவள் கல்லூரி சென்ற பிறகு விளையாட்டிற்கு தடை போட்டார். எத்தனை முறை வாதாடியும் பலன் இல்லை.

"கிழிச்சா, இப்பயும் விளையாட தான்  செய்றா, டெய்லி புட்பால் கிரௌண்ட்க்கு போகாம வீட்டுக்கு வர மாட்டா"

"போடா பொய் சொல்ற" என்றவரை முறைத்தவன் கையை சப்பி முடித்து அவர் தலை மேல் கையை நீட்டினான், "என்னடா பண்ற" என்று முழித்தவர், "சத்தியம் பண்றேன் உங்க மேல" என்றான். 

இவனை நம்புவதா இல்லை நம்பாமல் இருப்பதா என்று தெரியவில்லை அவருக்கு.

"எப்படி சொல்ற" என்றார்  சந்தேகத்துடன் . 

"அவ ஸூ ல 2 நாள் முன்னாடி மழை பெஞ்ச சகதி அப்டியே ஒட்டி இருக்கு, அதுவும்  இல்லாம அவளுக்கு எங்க ஆச்சு அடி பட்டு பிளாஸ்டர் போட்டிருப்பாளே" என டிடெக்ட்டிவ் போல் சுட்டிக்காட்டியவனை  ஆச்சிரியதோடு வாயை பிளந்து  தலையை ஆடியவர்.  

'எப்படி' என்பது போல் பார்த்தார்.  

"சாக்ஸ்ல ரத்தக் கறை இருந்துச்சு" காலனியை கழற்றிய அந்த 2 நொடியில் இவை அனைத்தையும் நோட்டம் விட்டுருந்தான் ஆதவன்.

"அப்புறம் உங்க சின்ன பொண்ணு பல்லவி, சரியான மக்கு மாடு எல்லா எக்ஸாம்லயும் கோட்டை விட்ருச்சு, தெரியுமா?" 

'இல்லை' என்று பாவமாக தலையை ஆட்டினார் நளினி.  

"அது மட்டும் இல்ல சரியான பஜாரி அவளோட ப்ரோபஸர் ஒருத்தர போன வாரம் பாத்தேன் அப்ப சொன்னாரு ஏதோ ஒரு பொண்ணுகூட சரியான சண்டையாம், நான்  கூட விஷ்ணுவோட அவ காலேஜ் பக்கம் போய் பாத்தேன்,  ஏதாச்சும்  பிரச்னையா இருந்துருக்கும்".

சிறிது இடைவெளி விட்டு மெதுவாக அவர் காதில் மட்டும் கேக்குமாறு , "பாத்து வச்சுக்கோங்க ஏதாச்சு பையன் மேட்டரா இருக்க போகுது... ரெண்டு பொண்ணுங்க சண்டை போட்டாவே அதுவா தான் இருக்கும். பையன் மோசமானவன்னு வேற கேள்வி பட்டேன்" அடுக்கு அடுக்காக அவர் தலையில் குண்டை தன்னால் முடிந்த வரை இறக்கினான் ஆதவன்.

"சரி சித்தி நான் போய் உதய் கூட இருக்கேன்" ஒன்றும் நடவாதது போல் அமைதியாக நண்பன் அறைக்கு சென்றான்.

"என்னடா வந்த வேலை எல்லாம் முடிச்சிட போல" அமைதியான குரலில் உதய் கேட்டான், "சிறப்பா முடிஞ்சது" சந்தோசமாக மெத்தையில் சாய்ந்தான் ஆதவன், சின்னஞ் சிறுசுங்களை  இப்படி சிக்கலில் மாட்டி விடுவதில்  இவனுக்கு அவ்வளவு ஆனந்தம்.  

தலைகீழாக தெரிந்த  உதய்யின் முகத்தில் இருந்த அந்த சிறு உழற்றல் ஆதவனை புருவம்  உயர்த்த வைத்தது.

"எதுவும் பிரச்னையா?" என்று கேட்டவாறே அமர்ந்தான்.  

'இல்லை' என்று தலையை ஆட்டி மீண்டும் அறையை சுத்தம் செய்வதிலே குறியாய் இருந்தான் உதய், "உண்மைய சொல்லுடா" சற்று உயர்ந்தது ஆதவனின் குரல். 

ஆணித்தரமாக கூறலாம் இது தொழில் சார்த்த வருத்தம் இல்லை என்று.  தொழிலில் என்ன நடந்தாலும் அசராமல் நின்று விளையாடுவதில் உதய் வல்லவன் அல்லவா... ஆகையால் தொழிலை பற்றிய கவலையே அவனிடம் தென்படாது.

"விஷ்ணு நேத்து பேசுனான், என்ன என்னமோ காசு, பதவி அப்டி இப்டினு. ஒன்னு மட்டும் புரிஞ்சது என் அம்மா போனப்பயே நானும்  இந்த வீட்டை விட்டு போய்ட்டேனு" 

கூறி வலியை மறைத்து புன்முறுவலித்தவனை பார்த்து, "நான்  வேணா அவன் கிட்டப்  பேசிப்  பாக்கவா?" ஆதவன் நண்பன் முகம் பார்த்தான்.

"யார்கிட்ட விஷ்ணுகிட்டயா?"

"இல்ல..." என்று இழுத்தவனை எரிக்கும் பார்வை விட்டான் உதய், "கீழ போ" என்று ஆணை இட்டு குளிக்க சென்றான் அனைத்தையும் சிந்தனையில் இருந்து தூக்கி  எறிந்து.

குளித்து முடித்து கீழே வந்த பொழுது குடும்பம் அனைவரும் காத்திருக்க .  ஓம குண்டத்தின் அருகில் அமர்ந்து இருந்தது அவன் சித்தப்பா சித்தி தான். சகோதரர்கள் சகோதரிகள் பக்தியுடன் வாய் திறவாமல் ஓம குண்டத்தை வெறித்து பார்த்து கொண்டு இருந்தனர். 

ஆதவனின் அருகில் சென்று நின்றவன், "எதுக்கு இது?" என்று கேட்டான் ஹரி.

"உன் தங்கச்சி பல்லவி ஓடி போக கூடாதுனு" பல்லவியின் காதில் கேட்கும்படியே கூறினான் ஆதவன்.  

உதய் அவன் அருகில் இருப்பதைய் உணர்ந்தவள், "ஐயோ அண்ணா என்ன  இப்படி பேசுறீங்க?" என பதற்றதுடன் வினவினாள் .

"அப்ப உண்மைய சொல்லு எதுக்கு அந்த பிள்ளை கூட சண்டை போட்ட?"

"அது வேற விஷயம். சத்தியமா நான்  லவ் பண்ணல" பயந்து பயந்து பேசியவளின் கண்கள் உதய்யின் மீது பட்டுப்  பட்டு மீண்டது, "லூசு மாதிரி ஏதாச்சு பேசாதீங்க அப்றம் படிக்கவே வீட்டுல விட மாட்டாங்க" என்று கெஞ்சினாள் சகோதரனுக்கு கேட்கும் படியே.

"டேய் உன் தங்கச்சி என்னமோ பிளான் பண்ணிட்டா டா பாத்து இரு" என்று எச்சரித்தான். 

ஆதவன் கூறினால் அதில் அர்த்தம் கண்டிப்பாக இருக்கும் என்று வீட்டில் உள்ள அனைவரும் நம்புவார்கள் என்று உணர்ந்தவள் நடுக்கத்துடன் உதய்யை பார்க்க அவனோ அந்த பேச்சை சலிப்புடன் உதறினான்.

"ப்ப்ப்ச்ச்ச்ச்..." என்று கூறி கண்டு கொள்ளாமல்  நின்றவனை பார்க்க ஆச்சிரியமாக  இருந்தது பல்லவிக்கு. 

ஏனோ,  அவனின் இந்த உதாசீனம் அவளை வருத்தியது. கோவமாக ஒரு பார்வை பார்த்தல் கூட ஒன்றும் தெரிந்து இருக்காது ஆனால் அவன் மௌனம் பிடிக்கவில்லை அவளுக்கு.

"அண்ணா நான்  யாரையும் லவ் பண்ணல"

தன்னிடம் தான் பேசுகிறாள் என்று உறுதி படுத்தி கொண்டு, "என்கிட்ட ஏன்மா சொல்ற உன் அண்ணனுக 2 பேர் இருக்காங்கள அவங்ககிட்ட சொல்லு" என்று கூறி விட்டு வேறு இடத்திற்கு சென்று நின்று விட்டான் அவளின் பார்வை தன் மீது தொடர்ந்து வருகிறது என்பதை உணர்ந்து.

"அண்ணா ஏன்  என்கிட்ட அப்டி பேசுச்சு?" என்று சிணுங்கி கொண்டே கேட்டவளிடம்,  "நீ பண்ண வேளைக்கு அப்படி தான்  பண்ணனும், நானா இருந்தேன் பொடனிலயே நாலு போடு போட்ருப்பேன்" என்று பின் தலையில் ஒரு அடி போட்ட ஆதவனிடம், " வலிக்கிது" என்றவளுக்கு மேலும் ஒரு அடி பரிசாக கிடைத்தது.

"எதுக்கு அவளை அடிக்கிறீங்க?" எகிறிக்கொண்டு வந்தான் விஷ்ணு, பின்னாலே ஹரி.

"இதுக்கு மட்டும் கூட்டமா வாங்கடா"

"அப்றம் வராம, அம்மாகிட்ட என்ன சொன்னீங்க  பல்லவியை பத்தி?" ஹரி கேட்டான்.

"உண்மையச் சொன்னேன்"

"ப்ச்.." மூவரும்  ஆதவனை காண்டுடன் பார்க்க.

"ஓகே .. மங்கமாவா மாறிட்டு இருக்குற இவளை இன்ஜினியரிங் படிக்க வச்சத்துக்கு பஞ்சாயத்துப்  பண்ண அனுப்பியிருக்கலாம் னு சொன்னேன், ஏன் எதுவும் பிரச்னையா?" ஒன்றும் தெரியாதவன் போல் கேட்டான்.

"பொய் சொல்லாதீங்க அவளுக்கு மாப்பிள்ளை பாக்க பிளான் பங்கிட்டு இருக்காங்க" - விஷ்ணு

"என்னாது கல்யாணமா?" வாயை பிளந்தாள் பல்லவி.

"அய்ய்ய் ஜாலி, நான்  போய் தங்கச்சி இருக்க மாறி பையனா பாக்க சொல்றேன், ஒரே மண்டபத்துல 2 கல்யாணம்" அத்தனை மகிழ்ச்சி ஆதவனுக்கு அவர்கள் தவிப்பில்.

அந்த 2 மணி நேரத்தை கடத்த அவள் பட்டப்பாடு அவளுக்கு தான் தெரியும், ஒரு பக்கம் ஆதவன், திவ்யாவின் சீண்டல்... இன்னொரு பக்கம் தன்னை மதிக்காத உதய்யிடம் எப்படி போய் பேசுவது என்ற தயக்கம்.

'தான் யாரையும் காதலிக்கவில்லை என்பதை எப்படி அவனிடம் கூறி புரிய வைக்க முடியும்? கூறினால் நம்புவானா?'காதலை வீட்டில் எதிர்ப்பவர்கள் அல்ல. ஆனால் , படிக்கும் பொழுது அதில் கவனத்தை சிதற விடாமல் இருக்க காதல் என்ற ஒன்றை ஒரு போதும் அருகில் வைத்து கொள்ளவில்லை. 

நன்றாக படிப்பபவர்களுக்கே காதலால் ஏற்படும் பிரச்சனைகளை நேரில் பலமுறை கண்டவள், படிப்பிற்கும் தனக்கும் சுத்தமாக ஆகாது என  தெரிந்து இருக்கும் கொஞ்சம் அறிவை எதற்காக அதில் செலவிட வேண்டும் என்ற எண்ணம் தான் அவளுக்கு. 

கஷ்ட பட்டு மூன்றரை வருடத்தை ஓட்டியவள் மீதம் இருக்கும் ஆறு மாத காலத்தையும் பிரச்சனை இல்லாமல் முடிக்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அதற்கு உலை வைத்து விட்டான் என்று ஆதவனை முறைத்த கண்களை அவன் எளிதாக சமாளித்தான்.

"அண்ணா, பல்லவிக்கு கல்யாணம் பண்ணலாம்னு யோசிக்கிறேன்" குடும்பத்தினர் அனைவரும் இருக்கும் பொழுது பேச்சை துவங்கினார் ஜெயந்தன், உதய்யின் சித்தப்பா.

"நல்லது தான். ஜெயந்தன்" தன் சம்மதத்தை புன்னகையின் மூலம் வெளி படுத்தினார் ரகுநந்தன்.

"அப்பா.. திவ்யா மூத்த பொண்ணு இருக்கப்ப எதுக்கு பல்லவிக்கு?" பொறுப்புள்ள பிள்ளை போல் பேசிய ஆதவனின் பேச்சைக் கேட்டு  பெற்றோர்கள் சிறிது  யோசிக்க.  

'நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணுனேன்' என்று இறைஞ்சலுடன் ஆதவனை முறைத்தவளை பார்த்து, "உன் ரூட் க்லியர்" என்று வாயை அசைத்தான் ஆதவன்.

"பேசாம ரெண்டுபேருக்கும் பாத்துரலாமா?" முகமெல்லாம் பல்லாக கேட்டார் நளினி.

"அம்மா இப்ப எதுக்கு எவ்ளோ அவசரப்படுறிங்க, ரெண்டு பேரும் இன்னும் படிப்பை கூட முடிக்கல" முதல் எதிர்ப்பை வைத்தான் சக்தி.

"ஆமா சித்தி படிப்பை மொத முடிக்கட்டும் அதுக்கு அப்றம் பேசிக்கலாமே" சகோதரர்கள் இருவரையும் நன்றியுடன் பார்த்தனர் பல்லவியும், திவ்யாவும்.

"டேய் ரெண்டு பேரும் சும்மா இருங்க.  என்ன தெரியும் உங்களுக்கு உலகத்தை பத்தி, எங்களுக்கு தெரியும் என்ன முடிவு எடுக்கணும்னு" சற்று அதட்டிய நளினியை கண் சிமிட்டாமல் பார்த்தனர்.

"சித்தி சொல்றத கேளுங்க சித்தி, கல்யாணம் பண்ற வயசா இது ஒரு ரெண்டு வருஷம் பொறுங்க" கெஞ்சினான் விஷ்ணு.

"ஆமா மா புரிஞ்சுக்கோங்க சின்ன பொண்ணுங்க மா, உலகமே இன்னும் தெரியாது அதுக்குள்ள கல்யாணம்னு சொன்னா என்ன பண்ணுவாங்க?" எங்களால் முடிந்த அளவிற்கு தடுக்க முயற்சிப்போம் என்று பேசினார் இருவரும்.

'நல்லா கெஞ்சுங்கடா பாக்கவே சந்தோசமா இருக்கு' என்று நினைத்தவாறே ஆனந்தமாக வேடிக்கை பார்த்த ஆதவனை ஒரு நொடி உதய்யின் பார்வை தொட்டு சென்றது உணர்ச்சியே இல்லாமல்.

"சக்தி, விஷ்ணு இது பெரியவங்க விசியம் கருத்து சொல்றத விட நிறுத்திக்கணும் இது தான் பண்ணனும்னு சொல்லற அளவுக்கு இன்னும் நீங்க இன்னும் வளரல" என்று கோபத்துடன் கூறிய ஜெயந்தன் பேச்சுக்கு அடுத்து பேச இயலாமல் அமைதியாக இருந்தனர் இருவரும்.

இனி வேறு வழி இல்லை என்று பல்லவியின் பார்வை உதய் மேல் விழ அவனோ உணவில் மும்முரமாக இருந்தான், 'அண்ணா ஒருக்க என்ன பாரு ண்ணா' என்று கண்ணீர் வராத குறையாக பார்த்தாள் அவனை. 

ஏற்கனவே 'உன் அண்ணனுக' என்று அவனே அவனை பிரித்துப் பேசியது வலியை தந்தாலும் அவன் யாரோ ஒருவரின் திருமண பேச்சை பேசுகிறார்கள் என்பது போல் இருப்பது மேலும் வலியையும் அழுகையையும் தந்தது அவளுக்கு.

"நான் முடிவு பண்ணிட்டேன் அவ்வளோ தான், ரெண்டு பேருக்கும் இனி மாப்பிள்ளை பாக்குறது தான் என் வேலையே" என்றார் நளினி அழுத்தமான முடிவுடன்.

"என்ன பா உதய் நான் சொல்றது சரி தான? கல்யாண வயசு வந்துருச்சு நல்ல பையனா தெரிஞ்சா நீயும் சொல்லு பேசி முடிச்சிருவோம் ரெண்டு பேருக்கும்" அவர் குரலில் அவ்வளவு ஆனந்தம் தெரிந்தது.

உணவில் இருந்து தலையை நிமிர்த்தியவன், "ஏன் திடீர்னு"

"வயசு ஆகிட்டே வருதுலபா அதுனால தான்" 

சகோதரிகளை பார்த்தவன், "20 எல்லாம் ஒரு வயசா?" என்றான். 

இவ்வளவு நேரம் இல்லாத அமைதி இப்பொழுது தான் தன்னுள் வந்தது போல் உணர்ந்தனர் சகோதரிகள் இருவரும், 'இனி என் அண்ணனே பாத்துக்குவான்' என்ற சந்தோசதோடு உணவை ருசி பார்த்து உண்ண அரம்பித்தாள் பல்லவி.

"அது இல்ல பா கால காலத்துல பண்றது எல்லாத்தையும் பண்ணி வச்சிரணும்ல?" என்று இழுத்தார் ஜெயந்தன்.

"என்ன சித்தப்பா அந்த காலத்துல இருக்கிறதையே  இப்பயும் நெனச்சிட்டு இருக்கீங்க, ஒரு டிகிரி முடிக்கலைனா இப்ப எல்லாம் யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க. படிக்கிற வயசுல படிக்கட்டும் தேவை இல்லாம எதுவும் பேச வேணாம்"

"அது இல்லப்பா..." அவர் பேச்சை பாதியிலேயே நிறுத்தினான் உதய், "நான் சொல்றத சொல்லிட்டேன், இப்ப அவங்களுக்கு கல்யாணம் வேணாம். அதுக்குமேல பண்ணனும்னு தோணுச்சுனா பண்ணிவைங்க" அழுத்தமாக கூறி இடத்தை காலி செய்தான்.

"மா என்ன மச மசன்னு நிக்கிறிங்க அந்த சாம்பாரை இப்படி ஊத்துறது அதுதா அண்ணனே சொல்லிருச்சுல சாப்டுட்டு வேகமா படிக்கணும்" தாயை தெனாவெட்டாக அழைத்தாள் பல்லவி.

"இப்ப மட்டும் நொண்ணன்னு கண்ணு தெரியாதோ" கிண்டல் கலந்த கோவத்தில் பேசி எழுந்து சென்றான் ஆதவன்.

'சாரி ண்ணா' மனதில் நன்றி கலந்த மன்னிப்பை கொட்டினாள் உதய்யை நினைத்து.

"அப்ப கொஞ்ச நாள் கழிச்சு பாத்துக்கலாம்" என்று வருத்தத்துடன் கூறிய நளினியை இரு ஜோடி கண்கள் கோவத்தோடு பார்த்தன, "அவன் சொன்னத தான நாங்களும் சொன்னோம்?" என்றனர் விஷ்ணுவும் ஹரியும் ஒன்றாக சேர்ந்து.

"சாப்பிட்ட இட்லி போதும் ரெண்டுபேரும் போங்கடா" என்று தட்டை வாங்கி வைத்து அனுப்பி விட்டார் இருவரையும் முறைத்து கொண்டே, "மா பசிக்கிது மா நல்லா சாப்பிடல"

"பரவால்ல போதும் போ" என்று அவர்களின் கெஞ்சலிற்கு எல்லாம் செவி சாய்க்கவில்லை அவர்.

***************

"என்னாத்துக்கு இப்ப நீ நடு ரோட்ல நிக்கிற இந்த நேரத்துல?" மணி நள்ளிரவை கடந்தும் கவலை இல்லை, இந்த பனியும் கவலை இல்லை அவனுக்கு, அதனால் தான் அவனுக்கு ஏற்படுத்திய காயத்தின் வீரியம் சிறிதேனும் இந்த பனியும், இருளும் தருகிறதா என்று ஆதியின் வீடு அமைந்துள்ள தெரு கோடியில் நின்று கொண்டு இருந்தான் தமிழ்.

"உன்ன தான்டா கேக்குறேன் பதில் சொல்ல முடியலையா?" குரலைச்  சற்று உயர்த்தி கேட்டான் ஆதி.

"இல்ல உன்னப்  பாத்துட்டு போகலாம்னு தான்  வெயிட் பண்றேன்" தலை குனிந்தே பேசினான் தமிழ்.

"ஏன் தொரைக்கு மூஞ்சிய பாத்து பேச முடியாதோ" ஒரு நிமிடம் தாமதிக்க வில்லை ரெண்டே அடியில் ஆதியை இறுக அணைத்து பேசாமல் கண்களை மூடி நின்றான், "மன்னிச்சிரு டா" என்ற ஒரு வார்த்தையை தவிர வேறு எதுவும் அவனிடம் பேச தோணவில்லை.

"இந்நேரத்துல யாராச்சு நம்மள இப்படி பாத்தா  நாம அப்படியோன்னு யோசிச்சிருவாங்கடா தமிழு.  உன்ன எப்படி நெனச்சாலும் பரவால்ல  என்ன யாரும்  அப்படி நினைக்கக் கூடாது.  ச்சீய் போ அங்குட்டு" என்று தமிழை உதறி தள்ளிவிட்டு தன்னுடைய வழக்கமான பேச்சால்  நண்பனை சிரிக்க வைத்தான் ஆதி.

"சரி வீட்டுக்கு கெளம்பு எனக்கு தூக்கம் வருது" - ஆதி

"ஏன் டா தொரத்தி விட்றதுலயே இருக்க"

"தூக்கம் வருதுடா என்ன பண்ண சொல்ற, இப்டி நடு ரோட்ல ஒக்காந்து பேச சொல்றியா? கெளம்பு டா" என்று கூறி இரண்டு அடி எடுத்து வைத்தவனை, 

"எங்க இருந்த இவ்ளோ நேரம்?" என்ற தமிழின் கேள்வி நிறுத்தியது ஆதியை.

"உன் தங்கச்சி கல்யாணத்துக்கு மண்டபம் புக் பண்ணே போனேன்" திமிரான பதில் ஆதியிடம்.

'இந்த திமிர் பேச்சுக்கு மட்டும் கொறச்சலே இல்ல' திட்டியவாறே  தன் பைக்கில் ஏறி அமர்ந்தவன் திரும்பி ஆதியை பார்த்தான்.

ஒரு சிறிய கல்லை காலில் மிதித்து கொண்டே அதை கீழே விழ விடாமல் முழு கவனத்தையும் அதில் பதித்து உலகத்தை மறந்தவாறே அந்த கல்லில் கவனத்தை செலுத்தியவன் வீட்டை அடைந்தது கூட கவனிக்காமல் சென்றதை பார்த்த தமிழ், "ரொனால்டோ சார் வீட்டை தாண்டி போயிட்டீங்க" என்றான் சத்தமாக.

பள்ளி முதல் கல்லூரி வரை கால்பந்து என்றால் ஆதி என்ற பெயர் மட்டுமே அனைவர்க்கும் நினைவில் வரும், அவ்வளவு திறமைசாலி. அந்த பந்தை கையில் எடுத்தால் அவன் முகத்தில் இருக்கும் அந்தப்  பொலிவு அவனுடைய அழகை மேலும் அழகு படுத்தும், இடை விடாத பயிற்சியில் ஏறிய அந்த கட்டுமஸ்தான உடலில் வேர்வையால் இரண்டாம் ஆடை போல் ஒட்டி கொள்ளும் அவன் சட்டை அவன் செதுக்கி வைத்த உடலை மேலும் கம்பீரமாக காட்டும். 

அந்த நேர்த்தியான தோற்றத்தையும், வெற்றியோ தோல்வியோ முகத்தில் படரும் அந்த கண்களை கவரும் சிரிப்பை பார்க்கவே பெண்கள் கூட்டமே நிற்கும். தங்கள் பக்கம் திரும்பி ஒரு புன்னகையுடன் கண்ணடித்து செல்பவனிற்கு மயங்காத ஆட்கள் இருந்தது இல்லை.

மாநிறம், ஆறடி உயரம், மாய புன்னகை, கூரிய விழிகள், எதற்கும் அஞ்சாத மன தைரியம், ஆண் அழகன் அல்லத் தான்.  ஆனால் அவனுக்கு பலபேர் மயங்கி தான் போனார்கள்.  போதாக் குறைக்கு விளையாட்டில் ஆர்வம் இருப்பவன் ஒரு கம்பீரத்தோடு தான் இருப்பான். 

ஏதேனும் பிரச்சனை என்று வந்தால், கையில் இருக்கும் அந்த வெள்ளி காப்பை முறுக்கி வருபனை பார்த்து அனைவரும் நடுங்கி தான் போவர்.  அவ்வளவு கோவம், பொறுமையின்மை இவை எல்லாம் தாண்டி ஒன்று.

ஒரு முடிவு எடுத்தால் அதற்கு மறுபரிசீலனை இல்லை அவனிடம். அவன் மனதில் இருக்கும் அனைத்து கோவங்களையும் விரக்தியையும் அந்த மைதானம் உள் வாங்கிக்கொள்ளும்.

ஏனோ  அந்த கோவமும் வைராக்கியமும் தான் அவனை விளையாட்டில் முன்னேற செய்தது. 

'உன்னால முடிஞ்சத பண்ணிக்கோ' என்று எதிர் அணியினருக்கு அவன் கண்ணால் விடும் சவால்களே சிறு ஆட்டம் காட்டும். எவ்வளவு கடினமான நேரமாக இருந்தாலும் 'ஆதி பாத்துக்குவான்' என்ற நம்பிக்கையே அவனது அணியை இந்திய அளவிலான போட்டிகளுக்கு அழைத்துச்  சென்றது. 

ஆனால் அவன் விதி அவனை அதற்குமேல் முன்னேற விடாமல் நிறுத்தியது.

சுயத்திற்கு வந்த ஆதி , 'போயும் போயும் இவன்கிட்ட எல்லாம் அசிங்க பட வேண்டி இருக்கு, சமாளிப்போம்'

"வாத்தியாரே, பாடம்லா நல்லா தான் எடுக்குறீங்க. நான் பக்கத்து வீட்டுக்கு ஒரு பொண்ணு வந்துருக்குணு சொன்னேன்ல, அத பாக்க போறேன்" என்றான் ஏளனத்துடன் கண்ணை அடித்து.

"ஐயோ நடிப்பை போட்டது போதும் டா நாயே, நீ எவ்ளோ பெரிய பிராடுனு எனக்கு தெரியும். ஒழுங்கா வெளயாடாம உள்ள போ இல்லனா அவ அப்பாட்ட சொல்லி குடுத்துருவேன்" கேலியோடு நண்பனை மிரட்டினான் தமிழ்.

"போடா போடா நாளைக்கு வந்து அப்பாகிட்ட நீ என்ன 'அநாதை' சொன்னனு சொல்லுவேன், அதுக்கு ஏதாச்சு சமாளிக்க ரெடி பண்ணி வச்சுகோ... டாடா"

"டேய் அவரு என் தோலை உரிச்சு உப்பு கண்டம் போற்றுவர் டா, அப்படிலா சொல்லித் தொலச்சுறாத " அதை அவன் கவனிக்க இருந்தால் தானே.  அப்பொழுதே உள்ளே சென்று விட்டான்.

"நாளைக்கு என்ன என்ன கூத்து பண்ண போகுதோ  இந்த பரதேசி" புலம்பி கொண்டே வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான் தமிழ்.

காலையில் எழுந்த ஆதி உணவு கூட உண்ணாமல் கௌதமை அழைத்து தமிழ் வீட்டிற்கு சென்றான், பவித்ராவுக்கு கை கால் எல்லாம் நடுங்கியது,

"என்ன ஆதி சஹானாவை கூடிட்டே வர மாட்டிக்கிற" என்றார் தமிழின் தந்தை நந்தன்.

"வீட்டுல ஒரு விசேஷத்தை வையுங்க கூட்டிட்டு வந்துறேன் " அவர் கையில் இருந்த நாளிதழை வாங்கி அவருக்கு எதிரில் அமர்ந்தான், "டேய் படிச்சிட்டு தரேண்டா" அப்றம் படிச்சுக்கோங்க என்றதோடு கொடுக்கவில்லை.

'ஆத்தி வந்த ஒடனே வேலைய ஆரம்பிச்சிட்டானே' கெளதம்  தமிழை பார்த்து நடுங்கினான். நேற்று ஆதி சென்ற பிறகு வெளியில் சென்றவன் தான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அதற்கு பிறகு.

"என்ன ஆச்சு கெளதம் உனக்கு" பதறினார் தமிழின் தாயார், "சாக்கடைல விழுந்துட்டான் மா" என்றான் ஆதி.

"ஐயோ இல்லமா சின்ன பசங்க அடிச்சிட்டாங்க, அதான் திருப்பி அடிக்க மனசு இல்லாம வாங்கிட்டேன்" உடனே மறுத்து பதில் கொடுத்தான் கெளதம்.

"அதுக்கு நீ சாக்கடைல விழுந்திருக்கலாம்" சிரித்தார் நந்தன்.

கையை நீட்டியவாறே, "ஐயோ அப்பா அத தான்  நானும் சொன்னேன்" ஹை - பை அடித்தான் ஆதி.

"டேய் போதும்டா புள்ளைய வம்பிழுக்காதீங்க" என்ற ஷீலா ஆதியிடம் திரும்பி, "ஏன்டா இப்ப நடந்த நிச்சயத்துக்கே பிள்ளையை கூட்டிட்டு வரல இதுல நீ அடுத்து அவன் கல்யாணத்துக்கு தான் கூட்டிட்டு வருவியாக்கோம்? சொந்த வீட்டுக்கு வர்ரதுக்கு எதுக்குடா காரணம்" கோவமாக முறைத்தார் ஷீலா.

"இல்லமா அவளுக்கு அன்னைக்கு ஒரு எக்ஸாம் இருந்துச்சு அதான் கூட்டிட்டு வரல இப்ப என்ன நிச்சயத்துக்கு அவ வரணும் அவ்வளோ தான.  நிச்சயம் வைங்க கூட்டிட்டு வந்துரேன் " என்றான் ஆதி.

தமிழோ முந்திக்கொண்டு, "ஐயோ என்னால எல்லாம் இன்னொரு நிச்சயம் பண்ணிக்க முடியாது பா" அலட்டிக்கொண்டவனை காரி துப்பினான் ஆதி, "உன் மூஞ்சிக்கு இன்னொரு கல்யாணம் வேற கேக்குதோ, அடங்குடா கோண மூக்கா"

"வேற யாருக்கு நிச்சயம் பண்ணனும்?" கேட்டார் நந்தன் ஏளன சிரிப்போடு,

"ரொம்ப தான் ஆசை. எனக்கு இல்ல, உங்க பொண்ணுக்கு"

ஆச்சிரியதுடன், "எதுக்கு இப்ப அவளுக்கு, ஆமா எது மாப்பிள்ளை பாத்து வச்சிட்டியா?" என்றார் வழக்கமாக பேசும் கேலியான தோரணையில். 

தன்னைத்  தான் கூறுவான் என்று கெளதம் சட்டை காலரை சரி செய்தவன் ஒரு பெருமித சிரிப்போடு தமிழை பார்த்தான், தான் கொடுத்த சிரிப்பு அனலாக மாறி வருகிறது என்று தெரிந்தபின் அப்படியே  கண்டுக்காத படி  நந்தந்தனின் புறம் திரும்பினான்.

"அவளையெல்லாம் யார் கல்யாணம் பண்ணிக்குவா அப்படி பண்ணுனா அந்த இளிச்ச வாயன் பாவம் தான்" மகளை பார்த்து ஷீலா வருங்கால மாப்பிள்ளைக்கு பரிதாபப்பட்டார்.

'ஐயையோ அவசர பட்டுட்டோமோ' என்றவாறு கெளதம் பவித்ராவை பார்க்க அவள் கண்களை சுருக்கி தாயையும் அவனையும் சிறு விளையாட்டு கோவதோடு பார்த்தாள், 'ச்ச ச்ச நாம ஆளு ராச்சசி இல்ல கொஞ்சம் திமிரு அவளோ தான்' ஒரு காதலோடு அவன் பார்வை அவள் மீதே இருந்தது.

"அதான் இவன் இருக்கான்ல?" என்றான் ஆதி கௌதமை கை காட்டி.

நந்தன், ஷீலா இருவரும் அதிர்ந்து போயினர், "என்ன சொல்ற ஆதி"

"கௌதம பவித்ராக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்றேன்"

என்ன பேசுவது, என்ன நடக்கிறது ஒன்றும் புரியவில்லை இருவருக்கும் ஆனால் ஒருவிதமாக யூகித்தனர் இது தான் நடந்திருக்கும் என்று, "எவ்ளோ நாள்?" என்றார் நந்தன் கௌதமை பார்த்து, அவர் பேச்சில் இருந்த விளையாட்டு மாறி ஒரு தந்தையாக பேசினார்.

"ஒரு வருஷம் பா" என்றான் ஆதி.  

"ஏண்டா கெளதம் உனக்கு வாய் வராதா?" - நந்தன்

"ஐயோ அப்பா சூப்பரா வரும், வேணா ஒரு பட்டு பாடவா?" 

ஷீலா அருகில் இருந்த வெங்காயத்தை அவன் தலையில் எறிந்தான் தமிழ், "டேய் சீரியசா பேசுடா" என்றான் வாயை அசைத்த படியே.  

"அப்ப உனக்கு ஒகேயா?" என்று கேட்டான் அசைவிலேயே, பதில் கூறாமல் ஆதியைபப் பார்த்தான் தமிழ். புரிந்தது கௌதமிற்கு.

"என்னடா உங்களுக்குள்ளயே பேசுறீங்க, டேய் தமிழ் உனக்கு எப்படா தெரியும் இது?" - நந்தன்

"நேத்து பா" - தமிழ்

"உனக்கு எப்படா தெரியும்?" என்றார் ஆதியை பார்த்து, "ஒரு அஞ்சு வருஷம் இருக்கும்" என்றவனை ஆச்சிரியமாக பார்த்தார், "அப்ப ஏண்டா அவனை தடுக்கல நீ?"

"அவன் உங்க பசங்களோட ப்ரன்ட் பா, தப்பானவன் இல்ல. உங்கள விட நல்லாவே பாத்துக்குவான். ஒரு நாள் கூட வெளிய தனியான்னு இந்த ஒரு வருசத்துல பவித்ராவை கூட்டிட்டு போனது இல்ல. 

எல்லாத்துக்கும் மேல பவித்ரா படிப்பு கெட்டு போயிர கூடாதுனு நாலு வருசமா அவளை பாக்குறதோட சரி அதுக்கு மேல ஒரு பேச்சு பேசுனதுல இல்ல லவ் பன்றேன்னு தொல்லை பண்ணி  அவளுக்கு அவன்மேல் இன்டெரெஸ்ட் இருக்குனு தெரிஞ்சும் அவன் அவ படிப்பு முடியட்டும்னு வெயிட் பண்ணுனான். 

என் தங்கச்சிக்கு அவனை விட வேற யாருப்பா நல்ல பையனா வர முடியும்? தமிழ் கிட்ட சொன்னது தான்  உங்கட்டயும் சொல்றேன் அவங்க இதுல எறங்குறதுக்கு முன்னாடி பல தடவ யோசிச்சு தா பன்னிருப்பாங்க, தேவ இல்லாம எதுக்குப்பா பிரிக்கணும். நம்ம பவித்ராவை அம்மா மாதிரி பாத்துக்குவான் பா"

ஆழ்ந்த யோசனையில் மூழ்கினார் நந்தன். 

அவர் அருகில் வந்த ஷீலா கணவரின் தோளில் கை வைக்க, மனைவியின் பக்கம் திரும்பியவர் என்ன செய்வது என்று கண்ணிலே கேட்டவரிடம் சிறிய கண் சிமிட்டலில் சம்மதத்தை தெரிவிக்க கௌதமை நோக்கி, "ஏன் எதுவும் பேச மாட்டிக்கிற கெளதம்?" என்றார்.

"ரொம்ப வருசமா லவ் பண்றேன் பா. தங்கச்சி மாதிரிதா பாக்கணும்னு பல தடவ என்னையே திட்டிருக்கேன். நெட்டை கொக்குனு அவ என்ன கூப்புடுறப்ப அப்டியே எல்லாமே மறைஞ்சிடும். ஆனாலும்,  பெத்த பிள்ளையை பாக்குற மாறி நெனைக்கிற உங்களையும்,  வீட்டுல ஒருத்தரா நெனைக்கிற தமிழையும் யோசிச்சு, யோசிச்சு எல்லாத்தையும் உள்ளயே வச்சேன் . 

ஏக்கமா பவித்ரா என்ன பாக்குறப்ப எல்லாம் என்னமோ பண்ணும் மனசு. அவ என்ன மூணு வருசமா லவ் பண்ரா ஆனாலும்  ஒரு வார்த்தை கூடச்  சொன்னது இல்ல நேரடியா.  எங்க ப்ரண்ட்ஷிப்பை நெனச்சு. 

என்னென்னவோ பண்ணி பாத்தும் முடியலபா அவளை தவற வேற யாரையும் மனசு தேடலை, அதான் உங்க கைல கால விழுந்து ஆச்சு கல்யாணம் பன்னிக்கனும்னு தைரியமா லவ் சொன்னேன். 

இப்ப கூட நீங்க முடியாதுனு சொன்னா என்னால உங்ககிட்ட வாதாட முடியாது, அவளுக்காக எவ்ளோ வருஷம் நாலும்  நான் வெயிட் பண்ணுவேன். எங்க கல்யாணம்னு நடந்தா அது உங்க எல்லாரோட சம்மதம் இருந்தா மட்டும் தான்  நடக்கும். 

ஒன்னு மட்டும் சொல்றேன் பா ராணி மாதிரி பாத்துக்குவேன்னு சொல்ல என்கிட்ட எதுவும் இல்ல. ஆனா என் மனைவியா அவளை சந்தோசமா வச்சுக்குவேன், அம்மா இல்லாத குறைய அவ தான் என் வாழ்க்கைல தீத்து வைக்கணும்னு காத்துட்டு இருக்கேன்"

நீண்ட பெருமூச்சு விட்டு, "ஆத்தி, எவ்ளோ பெரிய ஸ்பீச்" என்று கண்ணை மூடி தலையை உலுக்கி தானே பேசியது போல் விழித்தான் ஆதி.

"சரிம்மா வாங்க இட்லி ரொம்ப நேரமா அடுப்புல இருக்கு கறி கொளம்பு வாசனை வேற ரொம்ப நேரமா கூப்புடுது, சட்டு புட்டுன்னு போட்டா சாப்பிட்டே பாக்கலாம்ல" என்று ஷீலாவை சமையல் அறைக்குள் இழுத்தான்.

"ஆதி  ப்ளீஸ் டா" கெஞ்சினான் கெளதம்,  "அவங்கள பேச விடு"

"டேய் குருட்டுப் பயலே, அங்க பாரு எப்படி கண்ணு மின்னுதுன்னு" என்று நந்தனை காட்டினான் ஆதி, "அவர் அப்பயே ஓகே சொல்லிட்டாருடா நீ பேசுறியான்னு தெரிஞ்சுக்க தான் உன்ன பேச விட்டு வேடிக்கை பாத்துருக்காரு பெருசு"

"ஆமா கெளதம்..." என்ற நந்தனை இடை நிறுத்தி, "அப்பாவை வந்து பேச சொல்லணும் அது தான?" என்று ஆதி கேட்க ஆமாம் என்று நந்தன் தலை அசைத்தார். 

"அவர் தெரு முக்குல தான்  நிக்கிறாரு போய் கூட்டிட்டு வாங்க, குடும்பமே ப்ளானோட தான் வந்துருக்காங்க. இப்ப நீங்க இவனுக்கு ஓகே  சொல்லாட்டி அவர் வந்து பேசியிருப்பார்" 

ஷீலாவிடம் திரும்பியன், "இப்ப கறிக் குழம்பு போட முடியுமா முடியாதா?" என்றான் வெற்று கோபத்துடன்.

"இவன் ஒருத்தன் மாமிசத்தை கட்டியே அழுகுறான், வா எடுத்து வைக்கிறேன்" என்று திட்டிக்கொண்டே உள்ளே சென்றார் ஷீலா.

"ஐய் அப்ப நான்  இந்த வீட்டுக்கு மாப்பிள்ளை ஆகிட்டேனா" முகத்தில் பெரிய பல்ப் எரிந்தது கௌதமிற்கு, "மா அந்த நல்லிய எடுத்து உங்க மாப்பிள்ளைக்கு வைங்க" என்றான் சந்தோசத்துடன்.

"எப்ப பாத்தாலயும் கனவுலயே இருக்க.  நீ மாப்பிள்ளையாவே இருந்தாலும் எனக்கு தான் நல்லி எலும்பு பொழச்சு போ வேணும்னா உனக்கு சாறு ஊத்தச் சொல்றேன்" 

தலையை முடியாது என்று ஆட்டிய கெளதம், "அதெல்லாம் இல்ல எனக்கு தான் வேணும்" என்று அடம் பிடிக்க, "டேய் உன் காதலை ஒத்துக்க வச்ச எனக்கு பிரிச்சு விடவும் தெரியும் பண்ணவா?" என்றான் ஆதி புருவத்தை உயர்த்தி.

"என்ன மாப்ள எனக்கு சாறு கூட வேணா வெறும் இட்லி போட்டா போதும்" என்று சமையல் அறையை நோக்கி ஓடினான் கெளதம், "டேய் கெளதம் அந்த பாயை எடுத்து விரி" என்றான் ஆதி வெட்டி முறித்த அலுப்பில்.  

"இந்தா எடுத்துட்டு வரேன் மாப்பிள்ளை" உள்ளே இருந்து வந்தது கௌதமின் குரல், "அப்பாடா அடுத்த அடிமை சிக்கிட்டான்" மனதில் இருந்த நிம்மதியை உணவு உண்டு அடக்கி வைத்தான் ஆதி.



















Aathiii evloo periya chapter....

epdi iruku?

Share panunga...vote panunga...comment panunga..

Mukiyama spelling mistakes ah ignore panunga... not edited chapter...

Bye take care until the next chapter....

Continue Reading

You'll Also Like

22.5K 637 58
ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை
152K 6.4K 25
அவள் உள்ளங்கவரப் போகும் கள்வன் அவன்..
10.2K 339 22
ஆயிரம் அறிவுரைகள், ஆதரவு கரங்கள் நீண்டாலும் காதலாய் அவன் பார்க்கும் அந்த ஒரு பார்வைக்காக ஏங்கி தவித்தவள் கண்ணீர் கன்னத்தை தொட, அவள் கணவன் கையை கொஞ்சம...
15K 632 29
இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பத...