💞9💞

111 8 3
                                    

முகுந்த் சென்னைக்கு வந்த தினத்தில் இருந்து மித்ரவிந்தாவின் பெரும்பாலான பொழுதுகள் அவனுடனே கழிந்தது. எந்தப் பெண்ணுக்குத் தான் காதலிப்பவனின் அருகாமை கசக்கும்!

அதிலும் முகுந்த் மூச்சுக்கு முன்னூறு தடவை ஹனி ஹனியென உருகுவதைக் கேட்டவளுக்கு தான் உலகில் பிறந்ததே அவனுக்காக தான் என தோன்றியதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

தனது காதலை முகுந்திடம் சொல்வதற்கு முன்னே தான் வணங்கும் முகுந்தனிடம் சொல்லிவிட்டாள்.

"நான் முன்னாவ லவ் பண்றேன் கிருஷ்ணா. அவன் இன்னும் சொல்லலை தான். ஆனா அவன் பாக்குற பார்வை, அவனுடைய பேச்சு எல்லாமே இன்டேரக்டா அவன் என்னை லவ் பண்றானு சொல்லுது. நாங்க எங்க காதலை மியூச்சுவலா ப்ரொபோஸ் செஞ்சதும் உன்ட தான் ஆசிர்வாதம் வாங்க வருவோம்"

ஆனால் ஸ்ரீகிருஷ்ணரோ "பைத்தியக்காரி! நீ தான் காதல் காதலென உருகுகிறாய். நீ காதலிப்பவனின் மனதில் காதல் இருந்தாலும் அதை உணராதவனாக உனக்கு பாடம் கற்று தருகிறேன் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறான் அவன். இதன் முடிவு என்னவோ உங்களின் பிரிவு தான் பக்தையே" என சொல்லிக்கொண்டார்.

முகுந்துடன் சுற்றும் நேரங்கள் எல்லாம் பொன்னான தருணங்கள் என அவற்றைத் தனது மனதில் சேமித்துக்கொண்டாள் மித்ரவிந்தா. மால், சினிப்ளக்ஸ், கோயில், கடற்கரை என அலுக்காமல் சுற்றிக் களைத்தனர் இருவரும்.

இத்தனை நாட்களில் என்ன தான் பேசினார்கள் என்று இருவருக்கும் நினைவில்லை. ஆனால் கண்களில் காதல் மின்ன பேசும் போது உலகமே மறந்துவிடும் அவர்களுக்கு.

என்ன தான் நாள் முழுவதும் ஒன்றாக சுற்றினாலும் மித்ரவிந்தா தன்னிடம் ஒரு எல்லைக்கு மேல் பழக முகுந்திற்கு அனுமதி கொடுக்கவில்லை. அவனது முரட்டுத்தனமான இதழணைப்புக்குப் பின்னர் கன்னத்து முத்தம் கூட பஞ்சமாகி போனது.

என்ன தான் அணைத்தாலும், கைவளைவுக்குள் இருந்தாலும் அதை தாண்டி தன்னை அனுமதிக்காதவளின் செய்கை இப்போதும் முகுந்திற்கு 'எட்டாக்கனியாக காட்டிக்கொள்ளும்' செயலாக தோற்றமளித்தது.

என் தோளில் சாய்ந்திட வாWhere stories live. Discover now