💞2💞

237 8 0
                                    

ஜெய் முரளீ ஸ்ரீதரா 

ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்

கோவிந்த மாதவா கோபாலா கேசவ

ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்

வேணு விலோலா ராதே ஷ்யாம்

விஜய கோபாலா ராதே ஷ்யாம்

யாதவா மாதவா கோபாலா கேசவ

ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்

பாண்டுரங்கா ராதே ஷ்யாம்

பண்டரிநாத ராதே ஷ்யாம்

ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்

வேங்குழல் ஊதும் கிருஷ்ணனின் முன்னே கண் மூடி அமர்ந்து மனமுருகிப் பாடிக் கொண்டிருந்தாள் அந்தப் பேரழகு காரிகை.

ஆம்! அவள் பேரழகியே தான். கருநிற அருவியைப் போன்ற அவளது சுருண்ட கூந்தல் இடையைத் தாண்டி தரையைத் தீண்டிக் கொண்டிருந்தது. கூர்நாசி இல்லையென்றாலும் அவளது மொழுமொழு நாசியின் நுனியும் கன்னங்களும் இயல்பிலேயே சிரித்தால் சிவக்கும். இதழ்களோ எவ்வித செயற்கையான உதட்டுச்சாயங்களின் உபயமுமின்றியே சிவந்து ஜொலிக்கும்.

நடுத்தரமான உயரம் கொண்ட மெல்லிய மேனியாளின் பொய்யோ எனும் இடை அவளது நடனப்பயிற்சியால் அவளுக்குக் கிடைத்த பரிசு. குயிலைப் பழிக்கும் இந்த இனியக் குரலோ அவளது அன்னையிடம் இருந்து வாரிசுரிமை மூலம் கிடைத்த சொத்து.

அந்த இருபத்திமூன்று வயது பேரழகு பெட்டகத்தின் நாமம் மித்ரவிந்தா. தமிழகத்தின் மலையோர மாவட்டத்தில் பிறந்தவள் படிப்புக்காக சென்னையில் தங்கியிருந்தாள். கணிதத்தில் முதுகலை முடித்திருந்தவள் இந்த வருடம் எம்.பில் படிப்பில் கால் பதித்திருந்தாள். அவளுக்குக் கல்லூரியில் பேராசிரியை ஆக வேண்டும் என்பது சிறுவயது கனவு. அதற்காக தான் இவ்வளவு தூரம் வந்து மேற்படிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

அவளது தாயார் சந்திரமதியும் தந்தை ஹரிசந்திரனும் அவளை உள்ளூரில் இருக்கும் கல்லூரியில் படிக்க வைக்க எவ்வளவோ முயன்றனர். ஆனால் நம் மித்ரவிந்தா பிடிவாதத்துக்குப் பெயர் போனவளாயிற்றே! எப்படியோ இருவரையும் சமாளித்துவிட்டுச் சென்னைக்குப் புலம்பெயர்ந்து விட்டாள்.

என் தோளில் சாய்ந்திட வாWhere stories live. Discover now