ஜே.டி பங்களாவில் இன்னும் பார்ட்டி கொண்டாட்டம் முடிவடையவில்லை.
முகுந்தின் பார்வை முகம் வெளிற சம்யுக்தாவிடம் பேசிக்கொண்டிருந்த மித்ரவிந்தாவை வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
இஷிதா அவனிடம் வந்தவள் "பய்யா எதுக்கும் ஒரு தடவை யோசிங்க ப்ளீஸ்" என்று தவிப்பாக கூற
"ஷீ இஸ் மை லைஃப். ஒரு தடவை அவளை இழந்து நான் பிணமானது போதும். இனிமே அவளை விட்டு விலகி நிக்கிற தைரியம் எனக்கில்லை. அவளை என் வாழ்க்கையோட இணைச்சுக்க சாம,தண்ட, பேத வழிமுறைகள் எதையும் நான் செய்ய தயாரா இருக்கிறேன் இஷி. நீ பயப்படாதே. உன் பெயர் இதுல வராது" என்றான் முகுந்த்.
"என் பெயரை பத்தி எனக்கு கவலை இல்லை பய்யா. நீங்களும் மித்ரா மேமும் ஒன்னு சேர்ந்தா எனக்குப் போதும். நான் யோசிச்சது மித்ரா மேமை பற்றி"
"அவ காலேஜ்ல எந்த பிரச்சனையும் வராது. அதுக்கான ஏற்பாட்டை நான் செஞ்சுட்டேன். சம்யுக்தாவை சமாளிக்க மித்ரவிந்தாவே எனக்கு ஹெல்ப் பண்ணுவா. நீ கவலைப்படாத"
அண்ணனும் தங்கையும் இரகசியம் பேசிக்கொள்வதை அறியாமல் இரு தோழிகளும் வீட்டுக்குத் திரும்புவதை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
இஷிதா அவர்களிடம் வரவும் "நாங்க கிளம்புறோம் இஷி. இப்ப கிளம்புனா தான் எங்க ஏரியாக்குப் போய் சேர டைம் கரெக்டா இருக்கும்மா. மித்தி ஏர்போட்டுக்கு வேற போகனும்" என்றாள் சம்யுக்தா.
"அதுக்குள்ள கிளம்புறீங்களா மேம்? ப்ளீஸ் இன்னிக்கு எங்க ஃபேமிலி கூடவே இருந்து டின்னர் சாப்பிட்டிட்டு போங்க மேம். இஷிதா மேமை சுஷில் ஏர்போட்ல ட்ராப் பண்ணிடுவார்" என்று சிறுகுழந்தை போல அடம்பிடித்தாள் இஷிதா.
அவள் கூறியதையே ரவீந்திரன் சுகேந்திரன் தம்பதியினரும் வேண்டிக்கொள்ள சம்யுக்தா அங்கேயே இரவுணவை முடிப்பது என்றும் மித்ரவிந்தா சுஷிலுடன் ஏர்போட்டுக்குக் கிளம்புவது என்றும் முடிவு செய்தனர்.
YOU ARE READING
என் தோளில் சாய்ந்திட வா
Romanceஇலகுவாழ்க்கைக்குப் பழகிப் போன கிரிக்கெட் பிளேயர் முகுந்தின் வாழ்வில் அழகிய தென்றலாய் மனம் வருடும் மயிலிறகாய் மித்ராவின் வருகை.அவனது இலகுவாழ்க்கைக்கு அவள் முற்றுப்புள்ளி வைத்து அவனுக்கு வாழ்வின் சாராம்சத்தைப் புரியவைப்பாளா? அல்லது முகுந்தின் வாழ்வில்...