ஸ்டேஷன் முழுவதும் பரபரவென ஓடி கொண்டு இருக்க கரிகாலன் போன் மின்னி குறுஞ்செய்தி வந்திருப்பதாக சத்தம் போட அவன் அனுப்புனர் யார் என்று முதலில் பார்த்தான் "அன்நௌன் "என்று காட்ட கை நடுக்கத்துடன் திறந்து பார்த்தான் "மாமா, எத்தனை வருஷம் ஆனாலும் நான் உங்கள மறக்கமாட்டேன் "என்று இருந்தது..
அவன் சற்றே திடுக்கிட.. மீண்டும் ஒரு குறுந்செய்தி "நம்ம தான் மாமா என்னிக்கும் ஒருதர்கொருந்தர் எவ வந்தாலும் மாறாது நம்ம நீங்கா நினைவுகள் பல இருக்கு அதை எல்லாம் முழுசா தோண்டி எடுக்க வருவேன் மாமா "இது அவன் நெற்றி முழுவதும் வேர்வை படிய செய்தது..
அவன் போன் திடீரென அலற அவனுக்கு தூக்கி வாரி போட்டது "அம்மா "என்று பார்த்தவுடன் பெருமூச்சு விட்டு போன் எடுத்தான்
"டேய், எங்க அண்ணா இத்தன வருஷம் கழிச்சு இப்போ கால் பண்ணாரு டா எங்க ஊர்ல திருவிழா தாத்தா வேற உடம்பு சரி இல்லாம இருகாங்க அதனால வர சொல்லி ரொம்பவே கேட்டுக்கிட்டாங்க டா உன் பாட்டி உன்ன குந்தவிய பாக்கணும்னு சொல்ராங்க அதனால 15 நாள் நீ ஊருல இருந்து போற மாறி இருக்கும் டூட்டிக்கு "அவன் கைகளை இறுக்கி மூடி மீண்டும் விடுவித்து "அந்த ஆளு எதுக்கு கூப்புட்றானு உனக்கு தெரியுமா? "என்று கடுகடுக்க "டேய் அவரு உன் மாமா மரியாதையா பேசு "என்றாள்..
"அந்தாளு பொண்ணு வந்துட்டா அமுதன் நேத்துதான் சொன்னான் அந்த அவ பேரு கூட சொல்ல அருவெறுப்பா இருக்கு அந்த பொம்பளைய பாத்தானாம் அந்த ஊருக்கு திருவிழா டூட்டி அவன்தான், இதை பாரு நீ போறதுனா போமா நான் குந்தவி வரல "என்று போனை ஆப் செய்தான்.. கோபம் கண்ணை கட்ட அப்படியே அமர்ந்து போனில் குந்தவி போட்டோவை வருடி "நான் என்னிக்கும் உனக்கு மட்டும்தான் "என்று அவனை சமாதான படுத்தி கொண்டான் .
மாலை
"என்னமா ஆட்டோல வர கரிகாலன் வரலையா உன்ன கூப்பிட "என்று மாமனார் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டு கேட்க "மாமா காலைல வந்து அவங்கதான் விட்டாங்க ஈவினிங் கமிஷனர் ஆபீஸ் போறேன் சோ ஆட்டோல போனு சொல்லிட்டாங்க நீங்க காலையில வந்தீங்களா "என்று புன்னகை உதிர்த்து சந்தோசமாக கேட்டாள்.. அவர் "ஆமாமா உங்க அத்தை உள்ள இருக்கா போ "என்றார்..