அன்று காலை குந்தவி எழுந்து அம்மா காபி என்றால்.... எப்போதும் அங்கும் இங்கும் நடமாடி கொண்டு சூடு பண்ணி குடி என்னும் குரல் கேட்கவில்லை... சற்றென முழித்து சுற்றி பார்த்தால்.. அம்மா சிரித்து கொண்டு இருந்தால் புகைப்படமாய்... கண்ணீரை துடைத்து தங்கையை எழுப்பி குளிக்க அனுப்பினால்...வெளியே வந்து பார்த்தால் கரிகாலன் தனது மொபைலில் மிகவும் சீரியஷா பேசிட்டு இருந்தான்.... அவளை பார்த்ததும் போனை ஆப் செய்து குட் மார்னிங் என்று சொல்லி நகர்ந்தான்... அவள் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே போனால்...
இப்படி 2 மாதம் கடந்து போனது மணி மெரிட் ல தற்போது மதுரை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி.... குந்தவி இப்போது ஒரு அரசு பள்ளியில் தேர்வு எழுதி நிரந்தர ஆசிரியை ஆகிவிட்டால்... அதற்கு முழு துணையாய் இருத்தது அவளின் நண்பனாகி போன கரிகாலன்...
அன்று கரிகாலன் வேலை விஷயமாக ஊருல இல்லை... சிவாவின் பிரிஎண்ட் கெளதம் அவள் தனிமை அறிந்து அங்கு வந்தான்... அப்போது குந்தவி துணிகளை மடித்து கொண்டு இருந்தால்... அவன் பின்னால் இருந்து அவளை அனைத்து கழுத்தில் முத்தமிட அவள் அதிர்ந்து அலற அவள் வீட்டில் அருகில் இருந்த மக்கள் ஓடி வந்தனர்... அவள் கதறி இங்கு அழ அங்கு கரிகாலனுக்கு இருப்பு கொள்ளவில்லை உடனே அங்கு விடை பெற்று ஓடி வந்தான்...
பஞ்சாயத்து கூட்டி இருந்தனர்.. அங்கு அழுது கொண்டு இருந்த குந்தவியை பார்த்து அவனுக்கு எதுவும் புரியவில்லை...சிவா அவளை கோவமாய் பார்த்து கொண்டு இருந்தான்...
என்ன ஆச்சு என்றான்? அவன் குந்தவையை மட்டும் பார்த்து... கெளதம் பேச வர அவனை ஒரு வித கொலை பார்த்து மீண்டும் குந்தவியிடம் என்ன ஆச்சு? என்றான் சற்று கோவமாய்... அவள் அனைத்தையும் கூற கெளதம்" பொய் சொல்லதடி நீதானே கூப்பிட என்னை !!!!"என்றான்... அவள் கண்ணை மூடி அருவெறுப்பை வெளிபடுத்தினாள்..
சிவா அவளை பார்த்து "கெளதம் என் பிரண்ட் என்ன எப்பவும் ஏமாத்த நினைக்க மாட்டான் "என்றான்..