அன்று காலையில் நித்திலாவிற்கு கண்களை திறக்க முடியவில்லை. தீபன் அவளை எழுப்பினான். அவனிடம், "தீபு இன்னும் கொஞ்ச நேரம்!" என்று முணங்கினாள். அவனுக்கு சிரிப்பு வந்தது.
"நிது டைம் ஆச்சு பேபி! உன் தலைமுடி காயணும். நீ மேக்கப் பண்ணி, டிரஸ், ஜ்வல்ஸ் எல்லாம் போட்டு ரெடி ஆகணும்ல, இன்னிக்கு நம்ம கல்யாணம்டா, உனக்கு நியாபகம் இருக்கா? இப்படி 9 மணி வரைக்குமா தூங்கிட்டு இருப்ப?" என்று அவன் சொன்னதும் தூக்கி வாரிப் போட்டு எழுந்தாள் நித்திலா. கடிகாரம் 5:35 என்று மணி காட்டியது.
"எல்லாத்துலயும் விளையாட்டு தானா?" என்று தீபனிடம் கோபித்தவள் இரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு, "தலை வலிக்குது தீபு!" என்று முகம் சுளித்தாள்.
அவளை தன் மடியில் சாய்ந்து கொண்டு தைலத்தை இதமாக அவள் தலையில் தடவி விட்டவன்,
"கண்ணுல இருந்து அவ்ளோ தண்ணிய கொட்டினா அப்புறம் தலைவலிக்காம என்ன செய்யும் பேபி? மறுபடியும் தூங்கிடாத; உன்னோட வலி குறையணும்னு தான் பண்றேன். நாம ஏதாவது பேசிட்டு இருக்கலாம். நீ ரெடியாக டூ ஹவர்ஸ் போதும்ல?" என்று சந்தேகமாக கேட்டவனிடம்
"ஒன் ஹவர் போதும் தீபு. மசாஜ் சூப்பரா இருக்கு தீபு. நிஜமாகவே தூக்கம் தான் வருதுப்பா!" என்று கூறி விட்டு சிரித்தாள்.
"நிது உன் கிட்ட ரெண்டு விஷயம் பேசணும். இப்போ சொல்லிடட்டா?" என்றான் தீபன். எழுந்து கொள்ள முயன்றவளை மறுபடியும் தன் மடியில் இருத்தி கொண்டு, "படுத்துட்டே கேளு பேபி!" என்றவன்
"நிது நம்ம மேரேஜ் கிப்டா உனக்கு ஒரு ஸர்ப்ரைஸ் வச்சிருக்கேன். அதை நீ கண்டிப்பா அக்செப்ட் பண்ணிக்கணும். சரியா?" என்றான் தீபன் அமர்ந்த குரலில்.
"ஐயோ! தீபு மறுபடியும் ட்ரெஸ், ஜ்வல்ஸ் அந்த மாதிரியா?" என்றாள் கண்களில் கவலை காட்டி
அவள் மூக்கை பிடித்து ஆட்டி விட்டு, "டாக்டர் மேடம் உங்களுக்கு பிடிச்ச கிப்ட் தான் தீபு வாங்கி தரப்போறேன். ஸோ நீங்க கொஞ்சம் அதை வாங்கிட்டா ஐ'ம் ஸோ ஹேப்பி!" என்றான் புன்னகையுடன்
YOU ARE READING
எந்தன் உயிர் ஓவியம் நீ✔
Romance"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இ...