சிரியா தேசத்தின்
சொந்தங்களே!
நீங்கள் பிறக்கும் போதே
ஷுஹதாக்கள் என்று,
உங்கள் ஈமானில்
எடுத்துக் கொண்ட
உறுதி மொழியா
உங்களை
இவ்வளவு பொறுமை
காக்க வைக்கின்றது?இரவினில் வெடிகுண்டுகளையும்,
பகலினில் மரணித்த
சொந்தங்களையும்
எண்ணிக் கொண்டு,
ஏங்கும் உள்ளங்களே!இம்மையை விட்டு விட்டு,
மறுமையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் உங்களுக்கு
நீதம் வெகுதூரம் இல்லை...
இறைவன் போதுமானவன்...