Sudum Nilavu Sudatha Suriyan - 31

Start from the beginning
                                    

"நல்லா யோசிச்சு பாரு, ஸம்யு கேஸை எங்கிட்ட கொடுத்தவுடன் நான் உங்கிட்ட சொன்னேனில்லை. சசி விட்டிலேயும், உங்க வீட்டிலேயும் போன் கால்களையும், இணையத்தையும் மானிட்டர் பண்றோம் என்று சொன்னேன்" என அகிலன் பொறுமையாக சொன்னான்.

"வெற்றிவேல் தாத்தா, ரவிகுமாரை பெயிலில் எடுத்தவுடன் அவங்க வீட்டையும் மானிட்டர் பண்ண ஆரம்பிச்சோம். அதிலேயும் ஒண்ணும் தெரியலை. சம்யு சொல்றதை நான் நமபாத மாதிரி இருந்தாலும், நான் சித்தார்த்தை சந்தேகப் பட்டேன். ஆனால் அவன் தாத்தா வீட்டுக்கு வந்த பிறகு, எங்களால் அவங்க நெட்வொர்க்கை ஹாக் பண்ண முடியலை. அவன் போன் நம்பர் தெரிஞ்சும், எங்களால் அதையும் ஹாக் பண்ண முடியலை. அவன் வந்த ஒரே நாளில், அவங்க வீட்டில் இருந்த எல்லா தொலைதொடர்பு சாதனங்களையும் செக்யுர் பண்ணிட்டான். எனக்கு அப்போ தான் அவன் மேல் சந்தேகம் உறுதியாச்சு" என்றான் அகிலன்.

"என்ன காரணத்துகாக அவன் சம்யுவை கடத்தியிருப்பான் என்று யோசிச்சேன். பணம் காரணம் இல்லை என்று முன்னாலே தெரியும். அன்னிக்கு சொன்ன மாதிரி நாலு பேரை தான் டார்கெட் பண்ணியிருப்பான் என்று தோணிச்சு. அதனால் முரளிதரன் பத்தியும், உங்க அப்பா பத்தியும் தகவல் சேகரிச்சேன். அப்போ தான் சத்தி ஸ்டேஷனில் முரளிதரன் பேரில் நாதன் கொடுத்திருந்த புகார் பத்தி சொன்னாங்க. உங்கம்மா பேச்சு வாக்கில் அமிதாகிட்ட பதினெட்டு வருஷமா சத்திக்கு போகலைங்கிறதை சொன்னாங்க. நான் உங்கப்பாவை சந்தேகப்பட்டதால் தான் உன் கிட்ட அதை சொல்ல முடியலை" என்றான் அகிலன்.

"குமரவேல் விபத்து கொலையாக இருந்திருக்கலாம் என்று நினைச்சேன். அந்த விபத்து நடந்த சமயத்தில், சத்தியமங்கலத்தில் எஸ்.பியாக இருந்த முன்னாள் டிஜிபி திருமாறனை போய் சந்திச்சேன். அவரிடம் இந்த கேஸ் பத்தி டிஸ்கஸ் செஞ்சேன். அவர் கடத்தல்காரங்களுக்கு உதவறாங்க என்று சந்தேகப்பட்ட முக்கியமான ஆட்களில் முரளிதரன் இருந்ததை உறுதி செஞ்சார். ஆனால் உங்கப்பாவை அவருக்குத் தெரியலை. எனக்கு உங்கப்பா பணத்துக்காக குமரவேலை கொலை செஞ்சிருப்பார் என்ற சந்தேகம் கடைசி வரை இருந்தது. இன்னும் கேட்டா உங்கப்பாவும், முரளியும் சேர்ந்து கும்ரவேலை கொலை செஞ்சிருப்பாங்க என்று நினைச்சேன்" என்றான்.

Completed - Sudum Nilavu Sudatha SuriyanWhere stories live. Discover now