சுடும் நிலவு சுடாத சூரியன் – 3
ராயல் ப்ளு லெஹங்காவில் தன் எதிரே வந்து நின்ற சம்யுக்தாவைப் பார்த்து சசிதரனுக்கு ஒரு நொடி மூச்சு நின்றே விட்,டது. அவளது மின்னும் சந்தன நிற சருமத்திற்கு, நீல நிறம் அழகாய் பொருந்தியது. பார்டரில் இருந்த வெண்ணிற கற்களும், குந்தன் முத்துக்களும் எழில் சேர்த்தன. மெல்லிய ராயல் பளூ ஜார்ஜெட் சுன்ரியில் வெள்ளி நிற ஜர்தோஸி பூக்களும் இலையும் கொடியும் அவளது அழகை இன்னும் மெருகுட்டியது."சசி, இப்ப ஃபிட்டிங் சரியாக இருக்கா?" என முன்னும் பின்னும் இயலபாக திரும்பி நின்று கேட்டவளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் மலைத்து நின்றான்.
"சசி... சசி.. " என அவள் அருகில் வந்து விரல் சொடுக்கவும் தன்னிலை அடைந்தான்.
"ஸோ ப்யுட்டிஃபுல்", என்று அவளின் கன்னஙளை தொட வந்தவனை நாசுக்காக தடுத்தவள், "நீங்க ஃபிட்டிங் பார்க்கலையா?" என கேட்டாள்."நாளைக்கு தான் ரெடியாகும் போலிருக்கு" என்றான்.
"சரி நாளைக்கு திரும்பவும் வரலாம். நான் டிரஸ் மாத்திட்டு வந்துவிடுகிறேன்" என்றாள்
"எதாவது ஹெல்ப் வேண்டுமா?" என்றவனை புரியாமல் பார்த்தாள்.
"டிரஸ் சேஞ்ச் செய்றதுக்கு... எனி ஹெல்ப்" என்றவனை கண்கள் மின்ன, சுட்டு விரல் அசைத்து, "கிட்ட வந்தீங்க. மித்ரன் கிட்ட மாட்டி விட்டு விடுவேன். இதை சொன்னால் உங்க தோலை உரிச்சிடுவான்" என்றாள்."அவன் இன்னும் இரண்டு நாளைக்கு பின்னால் என்ன செய்றான் என்று பார்க்கிறேன். வசமாக மாட்டிக் கொள்ளப் போவது நானா இல்லை அவனா என்று நீயும் பார்க்கத் தானே போகிறாய்?" என அழுத்தமான குரலில் அவன் சொல்ல, இரு புருவஙளையும் உயர்த்தி அவனை கேள்வியாக பார்த்தாள்.
"இரண்டு நாளைக்கு பிறகு என்ன நடக்கும் என்று தெரியுமில்லை. அதுவும் இல்லாம மாப்பிள்ளை என்றால் மரியாதை கொடுத்து தானே ஆக வேண்டும்" என கேலியான தொனியில் சொன்னான்.ஸம்யுக்தாவிற்கு சசியின் குரல் மாறியது போல தோன்றியது. தன் சுட்டு விரலால் நெற்றியை தேய்த்துக் கொண்டாள்.
"சம்யு, ஜஸ்ட் கிட்டிங், கிளம்பு" என்று இயல்பான் குரலில் சசி சொன்னாலும், எதோ ஒன்று ஸ்ருதி மாறி வேறு ,மாதிரி ஒலித்தது போல் தோன்றியது.
YOU ARE READING
Completed - Sudum Nilavu Sudatha Suriyan
Romanceதிருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல்