Sudum Nilavu Sudatha Suriyan - 27

704 94 178
                                    

சுடும் நிலவு சுடாத சூரியன் – 27

வெற்றிவேல் அவர்கள் அனைவரையும் பார்த்துவிட்டு பெருமூச்சு விட்டார்.

"உங்களோட இன்னிக்கு என் பையன் குமரவேலும் இங்கே இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன்" என வருத்தமுடன் சொன்னார்.

சித்தார்த்தின் முகத்தில் எந்த உணர்வுமின்றி தன் கை விரல்களையே பார்த்துக் கொண்டிருந்தான். ரவிகுமார் வந்து வாசல் கதவோரம் சாய்ந்து நின்றான்.

வராண்டாவின் தூணில் சாய்ந்து நின்றிருந்த அகிலன், "ஐயா, உங்க பையன் எப்படி செத்துப் போனார்?" என கேட்டான்.

அகிலன் எதற்காக இதை கேட்கிறான் என மித்ரன் கேள்வியாக அவனை  பார்த்தான்.
வெற்றிவேலை பற்றி வசந்தன் சொன்னதை அகிலனிடம் அப்படியே சொல்லியிருந்தான்.

"சித்தார்த்துக்கு அப்போ அஞ்சு வயசு. அவனுக்கு மொட்டைப் போடணும் என்று நான் தான் வர அவங்களை அமெரிக்காவில் இருந்து இங்கே வர சொன்னேன். அவனுக்கு மொட்டைப் போட்டு முடிச்ச பிறகு, என் மருமக ராதிகா, மைசூர் பேலஸ் பார்க்கனும் என்று சொன்னாள். அங்கே போயிட்டு வரும் போது நடந்த விபத்தில் அவங்க இரண்டு பேரும் இறந்துட்டாங்க" என சொல்லும் போது அவரது குரல் தழதழத்தது. கண்களில் நீர் நிறைய தன் கண்ணாடியை கழட்டி, கண்களைத் துடைத்துக் கொண்டார்.

தன் கைகளை அழுந்த பிடித்துக் கொண்டு, பாறையாய் முகம் இறுகி அமந்திருந்தான். வினோதினிக்கு ஏற்கனெவே அந்த விபத்தைப் பற்றி தெரிந்திருந்தும், அவரது கண்களில் நீர் நிறைந்தது. சித்தார்த்தின் பெற்றோர்களின் மரணத்தைப் பற்றி அப்போது தான் கேள்விபட்ட சமயுக்தா, நிமிர்ந்து சித்தார்த்தைப் பார்த்தாள். கண்கள் எங்கோ வெறித்தபடி இருக்க, உறைந்திருந்த அவனது முகத்தை பார்த்ததும், சமயுக்தாவிற்கு இதயத்தை ஏதோ செயத்து. அவனது தோளகளை அணைத்து, அவனது கைகளைப் பிடித்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

அவனது பெற்றோர்கள் இறந்து விட்டார்கள் என்று தெரிந்திருதாலும், அத்தனை சிறு வயதில், விபத்தில் ஒன்றாக இறந்து விட்டார்கள் என்று இப்போது தான் தெரிந்ததால், அமிதாவிற்கு நெஞ்சை அடைத்தது. சித்தார்த்தின் அருகே சென்று அமர்ந்தவள், அவனது தோள்களை பரிவுடன் அழுத்தி, அவனது கைகளைப் பிடித்துக் கொண்டாள். அது வரை தன்னை இறுக்கமாக வைத்திருந்த சித்தார்த், அமிதா அவனது கைகளைப் பிடித்ததும், அவனது முகம் கசங்கி, கண்களை தாண்டி நீர் வழிந்தது. அவனது தோளை ஆதரவாக அமிதா அணைத்துக் கொள்ள, முகத்தை தன் இரு கைகளாலும் மூடி கொண்டான்.

Completed - Sudum Nilavu Sudatha SuriyanWhere stories live. Discover now