கவிக்கிளை

By arun_k29

113 39 22

Poetry works from my writings. இப்புத்தகம் நான் எழுதிய பல கவிதைகளில் மிகவும் விருப்பமானவற்றை தொகுப்பாகக் கொண்... More

யாழமுதன்
மூவுடல் ஓருயிர்
ஆசைமிகு அம்மாவுக்கு...
ஒருவன்
வசமாகிய வசந்தம்
நெஞ்சோரம் பரவசம்
முகவுரை - Bonus chapter
மெய்க்கண்ணாடி (must read)
ஆகாயம் மறைந்ததோ?!
என் பார்வையில்
இதமான மாலை
இதயத்தின் வாசனைப் பூவே
மென் தென்றலே
யாரறிவார் இவள் மனதை?
பதில் சொல்வாயா?
எனை வீழ்த்தியவளே!
தூது செல்
இமைகளின் நிழலில்...
உன்னிடம் தொலைந்தேன்
இருதயத்தில் நின்றாயே!
கனவில் பூத்த அழகே
பூக்கடல்
என் கவிதை நீயடி
சொல்லிலடங்கா அழகு!
எனது விடியல் நீயே!
பூந்தமிழ்
குவியா மலரே!
இளவேனில்
எங்கே ஓடுகிறாய் முகிலே?
செந்தூர மயக்கம்
நிழல்
புத்துயிர் வாசம்
வானில் பூத்த நிலா
கரு மேகம்
மனிதநேயம்
மெய்ப்போர்

புரிகிறது

2 1 0
By arun_k29

ஏதும் நிலையில்லை...
பணமும் பொருளும்,
பதவியும் புகழும்,
உயிரும் மெய்யும்,
என ஏதும் நிலைப்பதில்லை!

ஆறாவது அறிவானது,
சிந்தித்து வாழவே இறைவன் அளித்தான்!
ஆனால் மனிதா, நீ,
சிந்திக்கிறாய்...வாழ்வதில்லை!
ஜீவிக்கிறாய்...வளர்வதில்லை!

அன்பும் பண்பும்,
பின்தங்கி நிற்பின்,
மனிதனின் வாழ்வு பயனற்றேப் போகும்!

'நன்மை கடலினும் பெரிது',
என்றதாலோ என்னவோ,
எவரும் நீந்தத் தயாராக இல்லை!

முதுகு விழுந்து,
நாணயத் தாட்களை அள்ளி,
தர்ம நியாயம் இழந்து,
பேர்-புகழ் சொல்லி,
அர்த்தமற்றப் பயணமானது, வாழ்க்கை!

ஏய் மானுடா!
வளர்ந்து முன்னேறி விட்டதாய் எண்ணுகிறாய்...
வாழ்வாதாரங்களை பேணிக்காக்க தவறிப்போனாய்!

நம் புவி உருகிடுதே!
அதன் பச்சை ஆடை உரிக்கப்படுதே!
நீ, நாடகம் நடத்த,
இனி மேடைக்கு எங்கு போவாயோ?

அழிவை நோக்கி ஆரவாரமாய்ச் செல்லும் பதரினமே!
சாவின் விளிம்பில் நிற்பினும் ஆணவத்தி லாடும் மூடரினமே!
வெள்ளம் கழுத்து வரை வர விட்டுவிட்டு,
இன்னும் வானம் பார்க்கும் மேதாவியினமே!

இறப்பின் போது வாழ்கை விளங்குமாம்!
எல்லாம் முடிந்த பின் விளக்கம் கண்டென்ன பயன்?

மானிடப் பருவங்கள்,
மாறிப் போய்,
ஒரு புறம் அழிய!
காலப் பருவங்கள்,
குழம்பிப் போய்,
மறு புறம் கிழிய!

எரிந்து வரும் மடலில்,
கவி வரைந்து என் செய்வாய்?
தங்கபஸ்பம் சேர்த்துவிட்டு,
தாகம் தவித்தால், எங்கு செல்வாய்?

காதல், காமம் வழியினில் சேரவும்,
கண்ணில் தவறே பார்வையென மாறவும்,

தூய்மை தூரத்தில் ஓட,
உண்மை அந்தரத்தில் ஆட!

"என் பிள்ளைகளாலே புறக்கணிக்கப்பட்டேனே!",
என்று, தமிழன்னை தூக்குமேடை ஏற!

பிரம்மனுக்கும் பித்துப் பிடித்து,
தன் படைப்பால், தன் புலன்கள் இழந்தோட!

கல்வி என்பதன் பொருள் காணாமலே போக!
வெண்தாமரையில் சரஸ்வதி,
செந்நீர் பூக்கள் சூட!

பக்திக்கான சாமியெல்லாம்,
பணப்பந்தயத்தில் ஓடவிட!

எதனை நோக்கி ஓடுகிறோம்,
என்று கூட அறியாது,
தரிக்கெட்டோடும் மானுடமே!

இறைவன் எனக்கேன் ஐந்தறிவு அளித்தானென்று,
நன்றாகப் புரிகிறது!!

- இப்படிக்கு,
  ஆலமரத்து அணில்.

Continue Reading

You'll Also Like

43.8M 1.3M 37
"You are mine," He murmured across my skin. He inhaled my scent deeply and kissed the mark he gave me. I shuddered as he lightly nipped it. "Danny, y...
226M 6.9M 92
When billionaire bad boy Eros meets shy, nerdy Jade, he doesn't recognize her from his past. Will they be able to look past their secrets and fall in...
8.7K 2.1K 70
இது என் கைகளில் சிதறிய வார்த்தைத் துளிகள். ???இதில் நினைய அன்புடன் வரவேற்கிரேன். ?? பிடித்தால் விமர்சிக்க மறவாதிர். ? மொக்கையா இருந்தால் தனியாக கூப்ப...
23.9K 271 24
THIS BOOK WILL HAVE SOME OF BHARATHIYAR'S KAVITHAIKAL WHICH I LIKE THE MOST...AND IAM STARTING THIS WITH PUDHUMAI PEN KAVIDHAI FOR WOMEN'S DAY SPECI...