"எப்படி டாக் இருந்தது நைட் ஷிப்ட்?"
"சூப்பரா இருந்துச்சு!"
"என்ன சர்காஸமா?"
"ஹே.. இல்ல டாக். புது கேஸ் கம்மியா வந்துச்சு. ஏற்கனவே அட்மிட் ஆகியிருக்க யாரும் சீரியஸ் ஆகல. என்னாலயே நம்ப முடியல! இந்த மாதிரி ஒரு ஷிப்ட் நான் என் வாழ்க்கைல பண்ணதில்ல. கடவுள் இருக்கார் நு இப்போ நம்புறேன்!"
ஆம், டாக்டர் ரமேஷுக்கு வேலையின் மிக அமைதியான நாளாகவும் யாதிராவுக்கு மிக சுவாரஸ்யமான நாளாகும் அமைந்திருந்தது.
"அப்புறம், டீன் எதாவது கேட்டாரா வருண் கேஸ் பத்தி?"
"ம்ம்ம். நைட் அந்த ஆளு புல் அவுட். எழுந்திரிக்கவே இல்ல சோ டீன் கிட்ட ரிப்போர்ட் பண்ண எதுவுமில்ல. டீன் சொன்னாரு உன் கிட்ட தான் ரிப்போர்ட் கேட்கனும்னு."
"தலை 8 மணிக்கே வந்துட்டாரா?!!" யாதிராவின் கண்கள் விரிந்தன.
"அதான் சொன்னேனே... இன்று அபூர்வமான நாள் நு. அந்த நடிகன் இங்க இருக்கிறதால நிறைய சிக்கல் இருக்காம். அதான் வந்துட்டாரு சீக்கிரமே. நீ போய் பாரு."
"உங்களுக்கு தான் தெரியுமே. நான் ஹாஸ்பிட்டல்ல கால் வைத்ததும் பேஷண்ட்ஸ் ஐ ஒரு தடவ பார்த்துட்டு தான் மீட்டிங்க், ரிப்போர்ட் எல்லாம்னு."
"தெரியும் டாக்டர் யாதிரா. அவர்கிட்டயும் சொல்லிட்டேன் நீ 9 மணிக்கு அவர் ஆபீஸ் வருவன்னு."
"தாங்ஸ் ரமேஷ்! யூ ஹேவ் அ குட் ஸ்லீப் மேன்!"
"நைட் தூங்கிட்டேன். இன்னைக்கு ஊர் சுத்தலாம்னு இருக்கேன். டாட்டா!"
நமக்கும் தான் அதிர்ஷ்டம் நு ஒன்னு இருக்கே... ஐ மீன் இல்லையே, குதூகலமாய் சென்ற ரமேஷைக் கண்டு யாதிரா சிரித்தாள்.
மீண்டும் மாஸ்க், face shield, gloves என தன் பணியைத் தொடங்கினாள் யாதிரா. முக்கால்வாசி பேஷண்ட்ஸ் விழித்திருந்தனர். தாதியர்கள் காலை உணவு பரிமாறுவதும் சில சின்ன வேலைகளைப் பார்ப்பதுமாய் பம்பரமாய் சுழன்றனர். வழக்கம் போல் தூங்கிக்கொண்டிருந்தவர்களை தொந்தரவு செய்யாமல் அவர்களின் ரிப்போர்ட் ஐ மட்டும் படித்துவிட்டு இரவு ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டனவா என கண்காணித்துவிட்டு அடுத்த பெட் கு நகர்ந்தாள் யாதிரா. விழித்திருந்தவர்களிடம் இலையை தட்டி எழுப்பும் சூரியவொளியாய் மெல்லிய குரலில் அவள் கேட்டாள், "எப்படி இருக்கீங்க?" அவ்வொரு கேள்வி போதும் ஒரு மனிதன் தான் படும் சங்கடத்தையும் கவலையையும் கொட்ட. சிலரின் கவலையான பதில்களுக்கு ஆறுதல் அளித்தாள் அதோடு அவர்களின் கவலைகளையும் ஆராய்ந்தாள். எமெர்ஜன்சி வார்ட் முழுக்க தன் கருணையைக் கொட்டியதும் தனி வார்டில் தனியாய் இருக்கும் வருண் நினைவுக்கு வந்தான். சிக்கலை சந்திக்கும் நேரம் வந்துவிட்டது.
YOU ARE READING
யாதிரா (COMPLETED )
General Fiction29 வயதில் Emergency Medicine Associate Consultant ஆக உயர்ந்திருந்தாள் டாக்டர் யாதிரா. எல்லா பேஷண்ட் உம் போல் வருணும் இருப்பான் என அவள் நினைத்தாள் ஆனால் வருண் அப்படி அல்ல. வருணின் வாழ்க்கையை இருமுறைக் காப்பாற்றுகிறாள் யாதிரா - ஒரு முறை எமர்ஜென்சி வ...
யாதிரா - 3
Start from the beginning