46. ப்ரியா ராஜன்:
"என் பிள்ளைக்கு நான் ஏற்கனவே ஒரு பெண்ணை பேசி முடிச்சுட்டேன்." என அறிவழகி கூற, ஜீவா அதிர்ச்சியில் உறைந்தே போனான்.
அப்போது அங்கு வந்த துருவும் ஆதுவும் விஜயும் ஜீவாவின் அதிர்ச்சியான முகத்தை பார்த்து விட்டு, அறிவழகியை கேள்வியாக பார்க்க, அவர் ஒரு நமட்டு சிரிப்புடன் நின்றிருப்பதை பார்த்துவிட்டு "என்ன?" என்று ஜீவாவை எழுப்பி கேட்டான் துருவ்.
"ஒரு பெ... பேசி... பேசி..." என ஜீவா வார்த்தை வராமல் திணறினான். துருவிற்கு அறிவழகியின் விளையாட்டு சுத்தமாக புரியவில்லை.
"அத்தை என்ன ஆச்சு...?" என்ற ஆதர்ஷினியின் கேள்வியில் அறிவழகி, ஜீவாவிற்கு பிரமோஷன் கிடைத்து இருப்பதையும், ஏற்கனவே தான் ஒரு பெண்ணை ஜீவாவிற்கு பார்த்து விட்டதாகவும் கூறவும் ஜீவாவின் காதலை பற்றி தெரிந்த ஆதுவுக்கும் இது அதிர்ச்சி தான்.
"அம்மா... சூப்பர்மா... நீங்க மருமகளா கொண்டு வர ஆசை பட்டீங்களே. அந்த பொண்ணு தான...? நீங்க சொன்னா ஜீவா கேட்காம இருப்பானா... எந்த பொண்ண வேணும்னாலும் கூட்டிட்டு வந்து கட்ரா தாலியன்னு சொல்லுங்க... மறுபேச்சு பேசாமல் கட்டுவான். ஏன்னா அவன் தாய் சொல்லை தட்டாத பிள்ளை..." என்ற துருவ் ஜீவாவின் புறம் திரும்பி
"ஜீவா வாழ்த்துக்கள்டா...." என்று அவனின் இரத்த அழுத்தத்தை நன்றாக ஏற்றிவிட்டான்.
"அப்போ மூன்று கல்யாணத்தையும் ஒரே மேடையில முடிச்சிடலாம்..." என்று குதுகலிக்க அவனை முறைத்த ஜீவா, 'நீயெல்லாம் ஒரு அண்ணனாடா...' என்று பார்த்துவிட்டு 'அம்மாவிடம் தன் காதல் பற்றி கூறினால் ஏமாற்றம் அடைந்து விடுவார்களோ... ஏற்கனவே அவர் கணவரால் ஏமாற்றம் அடைந்து அவரை இழந்து பிள்ளைகளே உலகம் என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவரின் ஆசையை நிறைவேற்றாமல் இருந்தால் நான் அவரின் பிள்ளையே இல்லை' என நினைத்தவன் அவரின் சொல்லிற்கு பதில் கூறாமல் மௌனமாக நின்றிருந்தான்.
YOU ARE READING
மனம் வருடும் ஓவியமே!
General Fictionஇந்த முயற்சியில் கைகோர்க்கும் எழுத்தாளர்களின் பெயர்கள். 1.dharshinichimba 2.hema4inba 3.Saramohan_ 4.Priyadharshini12 5.bhuvana2206 6.im_dhanuu 7.Ramya_Anamika 8.lakshmidevi 9.Anbin shijo 10.narmadhasenthilkumar 11.bhagi 12.Niru_lakshmigesan 13.Mad...