29. ஆர்த்தி முருகேசன்:
"அந்தாளுக்கு என்னடா? " என துருவின் குரலில் ஏளனம் தெரிந்தாலும் அதை கவனிக்காத விஜய், "அப்பா அப்பா" என மீண்டும் பிதற்றினான்.
"விஜய் என்ன ஆச்சு பதறாம சொல்லு?" என்ற துருவின் அதட்டலில் எதிர்முனையில் என்ன கூறப்பட்டதோ சட்டென்று, "என்னால அங்க வரமுடியாதுடா. என்னமோ பண்ணுங்க? அந்தாளுக்கு நெஞ்சு வலின்னா நான் எதுக்குடா வரணும்? அவன் எனக்கு அப்பனும் இல்ல நான் அவனுக்கு புள்ளையும் இல்ல" என கோபத்தில் கடிந்து பேசி விஜயின் பதிலுக்கு காத்திராமல் அழைப்பை துண்டித்து மெத்தையில் போனை தூக்கியெறிந்தவன் சுவற்றில் கையோங்கி குத்தினான்.
இதனை பார்த்துகொண்டிருந்த ஆது, துருவின் தோளில் கைவைத்து, "பப்பு" என்றாள் மென்மையாக.
அவனோ, "இல்ல ஆது. என்ன அங்க மட்டும் போன்னு சொல்லாத" என்று வன்மையாய் மறுத்தவனை சமாதானம் செய்யும் பொருட்டு மெத்தையில் அமரவைத்து தண்ணீர் கொடுத்து ஆசுவாச படுத்தினாள்.
"எதுவா இருந்தாலும் கோபத்துல யோசிக்காத பப்பு. கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாரு. அங்க நெஞ்சு வலில துடிக்கிறது உன்னோட அப்பா" என்றாள் அது.
"அவர் எனக்கு அப்பாவா நடந்துக்கல ஆதுமா" என கூறியவனிடம், "பரவால்ல. நீ ஒரு மகனா நடந்துக்கோ. ஒரு மகனா உங்க அப்பாவுக்கு இந்த கடமையை செய். இல்லனா, ஒரு மனிதாபிமான அடிப்படையில நெஞ்சு வலியில உயிருக்கு போராடுறவற போய் பாரு பப்பு. ப்ளீஸ் போ பப்பு" என்று சமாதானம் செய்து விஜய் வீட்டிற்கு போக வைத்தாள்.
*******
ராஜேந்திரன் ஒரு பக்க நெஞ்சை அழுத்தி பிடித்துக்கொண்டு கத்த, அறிவழகி "என்னங்க! உங்களுக்கு ஒன்னும் ஆகாது" என்று தனக்கும் அவருக்கும் ஆறுதல் கூறிக்கொண்டு அவரது நெஞ்சை நீவி விட்டார்.அப்போது அவ்வறைக்குள் மின்னல் வேகத்தில் நுழைந்த துருவை கண்ட விஜயின் தாய், "விஜய்! அப்பா வலில துடிக்கிறாரு. வாப்பா" என்று கூற, துருவோ அதை பொருட்படுத்தாமல் தனக்கு பின்னே வந்துகொண்டிருந்த விஜயிடம், "டேய் விஜய்! கையை பிடிடா தூக்கனும்" என்று கட்டளையிட்டு இரு கால்களையும் பிடிக்க போனான்.
YOU ARE READING
மனம் வருடும் ஓவியமே!
General Fictionஇந்த முயற்சியில் கைகோர்க்கும் எழுத்தாளர்களின் பெயர்கள். 1.dharshinichimba 2.hema4inba 3.Saramohan_ 4.Priyadharshini12 5.bhuvana2206 6.im_dhanuu 7.Ramya_Anamika 8.lakshmidevi 9.Anbin shijo 10.narmadhasenthilkumar 11.bhagi 12.Niru_lakshmigesan 13.Mad...