25. தீராதி

1.4K 156 120
                                    

25. தீராதி:

அவனுடன் நடந்தவாறே ஆது " எங்க என்ன கூட்டீட்டு போற விஜய்... யார கேட்டு என்ன கடத்தீட்டு வந்த... என் துருவ்க்கு மட்டும் தெரிஞ்சா உன்ன அவன் சும்மா விட மாட்டான் தெரியும்ல... " என லௌட்ஸ்பீக்கர் போட்டதை போல் இவள் மீண்டும் கத்த... விஜயோ செவுடனுக்கு காதேது என்பதை போல் நடந்து கொண்டிருந்தான்...

ஆது " யு டெஃப்... உன் கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன்... " என கத்தியதற்கும் அவனிடம் பதிலில்லை...

கோபம் தலைக்கேற அவன் முன்னால் வந்து வழியை மறைத்தவள்  "அடுத்தவன் பொண்டாட்டிய கடத்தீட்டு போற அசிங்கமா இல்ல... " என கோவமாய் கத்த... முதலில் ஒன்றும் புரியாமல் முளித்தவன் பின்னே காதிலிருந்த பஞ்சை எடுத்துவிட்டு " திரும்ப சொல்லு " என்க... ஆதுக்கு கோவம் தலைக்கேறியது... இருந்தும் அவள் அதை மீண்டும் கூற... சாதாரணமாய் தோளை குலுக்கியவன்

விஜய் " என் அண்ணன் பொண்டாட்டிய தான கடத்தீட்டு போறேன்... அதுல தப்பில்ல... "

ஆது " என்ன திரும்ப கூட்டிட்டு போ... நா என் துருவ் கிட்ட போகனும்... நீ மட்டும் என்ன கடத்தினது அவனுக்கு தெரிஞ்சா உன்ன அவன் சும்மாவே விட மாட்டான் " என கை நீட்டி மிரட்டலிட... அதை பொருட்டாகவும் மதித்திடாதவன்...

விஜய் " உன்ன கடத்தி இரெண்டு மணி நேரமாச்சு... உன் துருவ்க்கு நா கடத்தீட்டேன் தெரியாமையா போக போது... தெரிஞ்சும் சும்மா தான இருக்கான்... " என இவளை ஏற்றி விடுவதை போல் பேச... முகத்தை சுருக்கி அவனை முறைத்தவள்...

ஆது " என் துருவ் என்ன வந்து கூட்டீட்டு போவான்... ... எனக்காக வருவான்  " என முகத்தை மறு புறம் திருப்பி கொண்டாள்... இருந்தும் விஜய் அமைதியாகவே இருக்க மீண்டும் அவன் பக்கம் திரும்பியவள்
" என் துருவ் கிட்ட என்ன கூட்டீட்டு போ விஜய் " என தன்மையாய் கூற... இவ்வளவு நேரமும் பப்புவின் ஆதுமாவை தெரிந்தவள் அவன் ஆறு மாதமாய் கண்டு இரசித்த ஆதர்ஷினியாய் தெரிந்தாள்...

விஜய் " துருவ் துருவ்ங்காத ஆது... முதல்ல நீ என்ன தான் காதலிச்ச... நா தான் உனக்கு மெசேஜ் பன்ன... நியாபகம் இருக்கா " என முதலிலிருந்து தொடங்க...

மனம் வருடும் ஓவியமே!Where stories live. Discover now