21.mad_sago:
“உனக்கென்ன டா என் கஷ்டம் புரியும். எவ்ளோ! கஷ்டப்பட்டு நா பூபதி பொண்ண லவ் பண்ணி அவ காச எடுத்துக்கலாமுன்னு பார்த்தா, அவ எல்லாத்தையும் விட்டுட்டு வந்துட்டா. ஆனா, ஓடி வரும்போது அவ தூக்கிட்டு வந்த பொருளே! ரொம்ப அதிகமான பணம் தேர கூடியதா இருந்துச்சு.
ஆனா என்ன? இதுக்கப்பறம் வளராதே! அத எடுக்க எடுக்க குறைய மட்டும்தா செய்யும்னு நெனச்சு உங்க அம்மாவ கல்யாணம் பண்ணே! அப்பறம் அவங்க ரெண்டு பேரயும் கொன்னுட்டு அவங்ககிட்ட கைல இருக்க மீதி சொத்தயும் அவங்களுக்கு வேற வாரிசில்லாதனால நானே! எடுத்துக்கலாமுன்னு இருந்தேன்.
ஸ்கெச்சு முதல்ல போட்டது துருவ்க்கு. அப்டினுதா நெனச்சுட்டு இருந்தேன். ஆனா, அதுக்கப்பறம் அவங்க அம்மாவ கண்டுபிடிக்க முடில. வாழ்க்கைய வெறுத்து இருக்கத வச்சு ஓட்டிட்டு இருந்தப்போ லீனான்னு ஒரு பொண்ணு கால் பண்ணினா.
என்ன துருவோட அப்பாவானு விசாரிச்சுட்டு துருவ் பத்தி சொன்னா, பணக்கார வீட்டு பொண்ணா தான் தெரிஞ்சா, சரி அவளுக்கும் உதவுற மாறி அவன் மத்த பொண்ணுங்களோட நெருக்கமா இருக்க ஃபோட்டொஸ் வாங்கி ஆதர்ஷினியை அவன வெறுக்க வச்சுட்டு அதுக்கப்பறம் லீனாவ இவனுக்கு எப்படியாச்சு கட்டி வச்ச பின்னாடி லீனா ,துருவ், பூபதி மூணு பேரயும் கொன்னுட்டு அவங்க எல்லா சொத்தையும் லம்ப்பா அடிச்சுட்டு செட்டில் ஆகலாமுன்னு இருந்தேன்.
ஆனா, இப்போ எல்லாம் போச்சு. நா ஆள் வச்சு அவளுக்கு தெரியாம அவ எடத்துல அந்த ஃபோட்டோஸ் வச்சத ஏன் இவ்ளோ நாள் அவ பாக்கலனு தெரில??
இந்த நவீன் கிட்ட துருவ்வ பத்தி நல்ல விதமா ஆது கிட்ட சொல்ல சொல்லி மிரட்டுனா அவன் பயந்து பிரச்சனைய பெருசாக்குவானு பார்த்த அதுவும் ஓர்க்கவுட் ஆகல. நா ஒரு மடையன் உண்ட போய் முடிஞ்சத சொல்லிக்குட்டு”,.என அவன் அடுத்த திட்டத்தை யோசித்தவாறே இடத்தை காலி ராஜேந்திரன்.
******
மேகத்துப் போர்வை போர்த்தி
திகிலான தனிமை அழகில்
தலை சாய்த்த துன்பத்துளிகள்
வலிக்காத கண்ணீர் வழிய
புரியாத துயரம் கொண்டு
ஆது குழப்பத்துடன் துருவை நோக்கினாள்,
YOU ARE READING
மனம் வருடும் ஓவியமே!
General Fictionஇந்த முயற்சியில் கைகோர்க்கும் எழுத்தாளர்களின் பெயர்கள். 1.dharshinichimba 2.hema4inba 3.Saramohan_ 4.Priyadharshini12 5.bhuvana2206 6.im_dhanuu 7.Ramya_Anamika 8.lakshmidevi 9.Anbin shijo 10.narmadhasenthilkumar 11.bhagi 12.Niru_lakshmigesan 13.Mad...