12. நிருலெட்சுமிகேசன்:
மாதுவும் அவள் தோழி சுபாவும் டான்ஸ் பர்பாமன்சிற்கு தேவையான பொருட்களை வாங்கியவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
அப்போது தான் விஐய் மாதுவை கண்டு ஆது என தவறாக அழைத்தது.மாது அவனை தவிர்த்து சென்றாலும் அவளது உள்ளமோ அவனை எங்கோ கண்டதாய் எடுத்துரைக்க அமைதியாக இருந்தாள்.
பின் தோழியின் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவள் அப்போது தான் பசிப்பதை உணர்ந்தாள்.
வெகுநேரம் அலைந்ததிலும் அவளது எப்.எம் மை கொஞ்சம் முன்னர் வரை இயக்கத்தில் வைத்திருந்ததிலும் பசி அதிகமாக சுபாவை பிடித்துக் கொண்டாள்.
"மச்சி உனக்கு மனசாட்சியே இல்ல தெரியுமா? நான் உனக்கு எவ்வளோ ஹெல்ப் பண்ணிருக்கேன் டுடே. பட் நீ கொஞ்சம் கூட என்ன பத்தி யோசிக்கலைல? ஹேட் யூ மச்சி." என்றாள்.
"என்ன பசிக்குதா?" என்று சிரித்தாள் சுபா.
"இஇஇ... எப்படி மச்சி? " என்றாள் குழந்தைத்தனமாக மாது.
"உன் மூஞ்சி. மொச புடிக்கிற நாய மூஞ்ச பாத்தா தெரியாது. என்ன பேச வைக்காத வா சாப்பிட போலாம்." என்று நடந்தாள்.
"லவ் யூ மச்சி." என மாது சுபாவை கன்னம் கிள்ளி கொஞ்சிட,
"கேவலமா நடிச்ச. சோறு இல்ல பாத்துக்க" என்று சுபா திரும்பி முறைத்தாள்.
"ஓகே.. கூல். எனக்கு என்.வி தான் வேணும். உன்னால ஒரு லவ் யூ வேஸ்டா போச்சு. சோ என்.வி வாங்கி கொடு" என்றாள் அடம்பிடிக்கும் குழந்தை போல்.
"உன்னால தான் இப்படிலா பேச முடியும். வா போகலாம்"
********
ஆதுவின் அழுகையை தாங்க முடியாத துருவ் அவளின் தோளை தொட்டு, "அழாத ஆதுமா" என்றான்.
அவனின் கையை வெடுக்கென தட்டிவிட்டு அவன் உணரும் முன் கன்னத்தில் அறைந்திருந்தாள்.
அவனின் முன், கண்கள் சிவக்க கோபத்தின் எல்லையில் இருந்த ஆதுவோ அவனை வெறுப்பாய் பார்த்து கை நீட்டி எச்சரித்து இருந்தாள்.
YOU ARE READING
மனம் வருடும் ஓவியமே!
General Fictionஇந்த முயற்சியில் கைகோர்க்கும் எழுத்தாளர்களின் பெயர்கள். 1.dharshinichimba 2.hema4inba 3.Saramohan_ 4.Priyadharshini12 5.bhuvana2206 6.im_dhanuu 7.Ramya_Anamika 8.lakshmidevi 9.Anbin shijo 10.narmadhasenthilkumar 11.bhagi 12.Niru_lakshmigesan 13.Mad...