ஆது " நிறுத்து விஜய்...உன் மெஸேஜ்ல ஈர்க்கப்பட்டேன்... அவ்ளோ தான்... கடைசி நாள் துருவ் மெசேஜ் பன்னப்போ என் பப்புவா இருப்பானோன்னு ஆச பட்டேன்... அதுல தான் துருவ விஜயா பாத்ததும் நா உணர்ச்சி வசப்பட்டேன்... " என தெளிவுற்றவளாய் கூறினாள்..

விஜய் " இல்ல ஆதுமா... அவன் உன்ன ஏமாத்திற்றுக்கான்... அவன் அப்ராட்ல அடிச்ச கூத்துலாம் தெரியுமா.. அதான் இப்டி அவன பப்புவா நெனச்சு நம்புர... சின்ன வயசுல இருத மாரியே இப்பவும் யாரும் இருக்கமாட்டாங்க... அவன் உன்ன காதலிக்கலவே இல்ல... என்ன பழிவாங்குரதுக்காக உன்ன யூஸ் பன்னிக்க நினைக்கிறான்... அவன நீ டைவர்ஸ் பன்னிட்டு என் கூட வந்துடு ... அவன் உனக்கு வேண்டாம்... உன்னயும் அவன் ஏமாத்திடுவான்.. நாம சந்தோஷமா இருக்கலாம்... அவன் ஒரு உமனைசர் " என்க இவ்வளவு நேரமும் கையை மூடி மூடி திறந்து தன் கோபத்தை கட்டு படுத்தி கொண்டிருந்த ஆதுவின் கரங்கள் இப்போது விஜயின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது...

ஆது " இனஃப் விஜய்... என் துருவ பத்தி எதுவும் பேச தேவையில்ல... எனக்கு எல்லாம் தெரியும்... என் பப்பு சின்ன வயசுல இருந்த மாரியே இருந்தான்... என் புருஷன டைவர்ஸ் பன்ன சொல்ல நீ யாரு டா... அவன பத்தி என்ன தெரியும் உனக்கு... இனிமே என் புருஷன பத்தி வாய திறந்த.. " என கோவத்துடன் சிவந்த கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க எச்சரித்தவளின் மனமும் கத்தியை வைத்து கிழிப்பதை போல் வலித்தது... அன்று துருவை அவனிடம் உமனைசர் என கூறும் போது எத்துனை வலிகளை அனுபவித்திருப்பான் என்று....

விஜய் " எதுக்கு ஆது மா அவனுக்காக என்னையே அடிக்கிர... நா உன் இந்தர் "

ஆது " பிகாஸ் ஐ லவ் ஹிம்... ஐ லவ் ஹிம்.... என் துருவ் தான் என் இந்தர் நீ இல்ல விஜய்... " என  கத்தியவளை பாவமாய் கன்னத்தில் கை வைத்து பார்த்து கொண்டிருந்தவனின் இதழ்கள் இப்போது அழகாய் விரிய... கண்கள் சிரிக்க அவளை நோக்கியவன் " இப்போ எல்லாத்தையும் நீ புரிஞ்சிக்கிட்ட ஆதுமா.. உன்ன ஆரம்பத்துல டிஸ்டர்ப் பன்னதுக்கு சாரி ... என் தப்ப நா உணர்ந்துட்டேன்... உன்னோட காதலையும் உணர வச்சிட்டேன்... இனிமே நிம்மதியா இருப்பேன் என் பின்னாடி வா " என அவளை தாண்டி முன்னே நடந்தான்...

மனம் வருடும் ஓவியமே!Where stories live. Discover now