எங்கும் எதிலும் பிடிவாதம், வாழ்க்கை அவள் போக்கில் தான் இருக்க வேண்டும், அவளை சேர்ந்த எல்லோரும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று இருந்தாலும், அது சரியான வழியாக இருந்ததால் பெற்றோர் ரொம்ப தலை இடுவதில்லை.
அகிக்கு ஆறு வயசு, "ஏங்க, நம்ம அகிய நெனச்சா ரொம்ப கவலையா இருக்குங்க. ரொம்ப அடம், இப்டியே போனா பியூச்சர் கு நல்லது இல்லைங்க. ஒரு பொறுப்பை குடுத்தா சரி வருவாளோனு தோணுது"
"ஓகே, அவளுக்கு ஏதாவது வீட்டு வேலையை குடு. கொஞ்சம் நேரம் கூட யோசிக்க முடியாதபடி அவ வீட்ல இருக்கும் போது எங்கேஜ்ட் ஆ வெச்சுக்கோ. பொறுப்பா இருப்பா இல்ல?"
"ஐயோ, நீங்க வேற. நான் சொல்ல வரது புரியல? பொறுப்புனா வீட்டு வேலை இல்லைங்க, வேற.."
"என்னம்மா பேசற, வீட்டு வேலை இல்லைனா வெளி வேலைக்கா அனுப்ப முடியும்? கொஞ்சம் தெளிவா தன் சொல்லேன்"
"அடடா, அவளுக்கு ஒரு தம்பியோ தங்கையோ இருந்தா, கொஞ்சம் பொறுப்பா இருப்பாளோ என்னமோ?.."
"ஓ, அப்டி வரியா? சே, எனக்கு தோணவே இல்ல பாரேன். ஆபீஸ், வேலை, ப்ரோமோஷன்னு அகி குட்டிக்கு ஒரு சிப்லிங் வேணும்ங்கிறதையே மறந்துட்டோமே. அவளையே கேட்டுரலாமா?"
தப்பு பண்ணிடீங்களே ஆபிசர்!
"இந்த வீட்ல இன்னொரு குழந்தை வரவே கூடாது. அப்டி வந்தா, நான் யார்கிட்டயும் பேச மாட்டேன், விளையாட மாட்டேன், ஆமா!" அகியின் பிடிவாதத்தை கண்டு மிரண்டு தான் போனார்கள் இருவரும்.
"ஏம்மா? ஒரு பாப்பா இருந்தா, நீ அது கூட விளையாடலாம், அது உன்னை அக்கா, அக்கா னு கூப்பிடும், உன் பின்னாலயே வரும். எப்பவும் உனக்கு விளையாட ஆள் இருப்பாங்க. ஜாலியா இருக்கும் செல்லம்" ரீசன் அவுட் பண்ணிப்பார்த்தார்.
"நோ டாடி, அதுக்கு தான் பாப்பா வேணாம்னு சொல்லறேன். அது என் பின்னாலயே வரும், டிஸ்டர்ப் பண்ணும்"
எப்போது இந்த பேச்சை எடுத்தாலும் இதே பதில் தான். சரி, பிரெண்ட்ஸ்க்கு சிப்லிங்ஸ் பிறந்தா மாறிடுவா என்று காத்திருந்தாலும், அப்போதும் மாறவில்லை. அப்பாவோ அம்மாவோ வேறு குழந்தையை கொஞ்சினாலோ, "பாரு, உனக்கு ஒரு தம்பி இருந்தா இப்டி தான் இருப்பான்" என்றாலோ மிகவும் சோகமாகி விடுவாள்.
YOU ARE READING
Keerai (கீரை)
General Fictionகீரை - இதை ஊட்டாத அம்மக்களே இல்லை, பார்த்து ஓடாத குழந்தைகளே இல்லை :) அந்த கீரையின் மகத்துவத்தை நாம் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்பு தான் உணர்கிறோம் அப்படி ஒரு உனர்வை பற்றிய கதை