"உன்னோட திடீர் முடிவு என்னை வாயடைக்க வச்சது. அதனால அமைதியா இருந்தேன். ஆனா இனிமே நான் அப்படி இருக்க மாட்டேன். எனக்கு விருப்பமில்லன்னு எல்லார்கிட்டயும் சொல்ல போறேன்"
"அப்படி செய்யாத குஷி..." என்றான் அமைதியாய்.
"நானும் உன்னை அதையே தான் செய்ய சொல்றேன்... இப்படி செய்யாத. இந்த கல்யாணத்தை நிறுத்து"
"முடியாது"
"ஏன்?"
"எங்க அம்மாவோட விருப்பத்தை நிறைவேத்தணும்னு நான் நினைக்கிறேன். நீ அவங்க மருமகளா வரணும்னு அவங்க எந்த அளவுக்கு விருப்பப்பட்டாங்கன்னு உனக்கு தெரியாது?"
அதைக் கேட்ட அவள் கிண்டலாய்,
"ஓ... அப்படின்னா உங்க அம்மாவோட செல்ல பிள்ளையா அவங்க ஆசையை நிறைவேத்த தான் இதை செய்றியா? உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? இது உங்க அம்மாவோட விருப்பம் இல்ல... உன்னோட விருப்பத்தை பத்தின விஷயம்" என்றாள் எரிச்சலுடன்.
"எனக்குன்னு எந்த விருப்பமும் கிடையாது"
"ஆனா எனக்கு இருக்கு. உங்க அம்மாவுக்கு வேணும் அப்படிங்கறதுக்காக உன்னை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. புரிஞ்சுதா?"
அவள் அங்கிருந்து செல்ல நினைத்தபோது,
"அப்படின்னா, நீ நந்தா மேலையும் லாவண்யா மேலையும் ரொம்ப அக்கறை இருக்கிற மாதிரி காட்டிகிட்டதெல்லாம் பொய் தான?"
பேச்சிழந்து நின்ற குஷி, அவனை திகைப்புடன் பார்த்தாள். தன்னை சமாளித்துக் கொண்டு,
"அவங்களுக்கு என்னை பத்தி நல்லா தெரியும். அவங்க என்னை புரிஞ்சுக்குவாங்க" என்றாள்.
அவள் கூறுவதும் சரி தான். அவன் தன் அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்ற தான் இந்த திருமணம் செய்து கொள்கிறேன் என்று அவர்களுக்கு தெரிந்தால், அவர்கள் நிச்சயம் அவள் பக்கம் தான் நிற்பார்கள்.
"சரி, உனக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லைன்னு போய் சொல்லு"
YOU ARE READING
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)
Romanceகாதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம...
23 குஷியின் மறுப்பு
Start from the beginning