15 ஊகத்திற்கு அப்பாற்பட்ட...

277 37 3
                                    


15 ஊகத்திற்கு அப்பாற்பட்ட...

கரிமாவுடன் தேநீர் பருகிக் கொண்டிருந்தாள் குஷி. தேர்வுகள் முடிந்து, வீட்டில் சும்மா அமர்ந்து கொண்டிருந்த அவளுக்கு பொழுது போகவில்லை. அப்பொழுது அங்கு வந்த ரத்னாவை பார்த்து அம்மாவும் மகளும் ஆனந்தம் அடைந்தார்கள்.

"ஹாய் ஆன்ட்டி"

"ஹாய் பேபி"

"நந்து வீட்ல இருக்கானா?"

"அண்ணன் தம்பி ரெண்டு பேரும் வீட்ல தான் இருக்காங்க"

"எனக்கு செம போர் அடிக்குது"

"ரெண்டு பேரும் ஹால்ல தான் இருக்கானுங்க. நீ வேணும்னா அங்க போ. நான் கொஞ்ச நேரத்துல வரேன்"

தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை செய்ய இது தான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணினாள் குஷி.

"சரிங்க ஆன்ட்டி. நான் ஒரு ஃபோன் பண்ணணும். ஆனா என் ஃபோன்ல சிக்னலே இல்ல. அம்மா அவங்க ஃபோனை எங்க வச்சாங்கன்னு தெரியல" என்றாள் கரிமாவின் கைபேசியை ஒளித்து வைத்துவிட்டு.

"ஒன்னும் பிரச்சனை இல்ல. இந்தா என் ஃபோன்ல இருந்து கால் பண்ணிக்கோ" என்று தன் கைபேசியை அவளிடம் கொடுத்தார் ரத்னா.

"தேங்க்யூ ஆன்ட்டி" என்று அதை பெற்றுக் கொண்ட அவள்,

"சார்ஜ் ரொம்ப கம்மியா இருக்கு" என்றாள்.

"சரி, நந்து கிட்ட சொல்லி அதை சார்ஜ்ல போட சொல்லு"

"ஓகே" என்றபடி அங்கிருந்து நடந்தாள்.

அவள் எதிர்பார்த்தது இதைத்தான். யாருக்கோ ஃபோன் செய்வது போல் பாசாங்கு செய்தபடி வீட்டை விட்டு வெளியே வந்தாள். ரத்னாவின் ஃபோனை சைலன்ட் மோடுக்கு மாற்றிவிட்டு, தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டாள். அர்னவ்வை கையும் களவுமாய் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் வீட்டிற்கு வந்தாள்.

அர்னவ் தன் மடிக்கணினியில் ஏதோ வேலை செய்து கொண்டிருக்க, நந்தா டிவி பார்த்துக் கொண்டிருந்தான். இருவரும் குஷியை பார்த்தார்கள். ஆனால் அவள் நந்தாவை மட்டும் தான் பார்த்தாள்.

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்!Where stories live. Discover now