14 உடைந்த ஜாடி
அர்னவ்வின் மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த புதிய பூ சாடியை பார்த்தார், அவனுக்கு காபி கொண்டு வந்த ரத்னா. பழைய ஜாடியை தூக்கி எறிந்து விட்டு அவன் புதிதாய் வாங்கி விட்டானோ என்று எண்ணினார் அவர்.
"இந்த ஜாடி ரொம்ப அழகா இருக்கு. இதை நீ எப்போ வாங்கின? பழசை தூக்கி போட்டுட்டு, அதுக்கு பதிலா இதை வாங்கினியா?" என்றார்.
"எனக்கு பிடிச்ச எதையுமே நான் தூக்கி போட மாட்டேன்னு உங்களுக்கு தெரியாதா? இது புதுசு இல்ல. அதே பழைய உடைஞ்ச ஜாடி தான்"
"நெஜமாவா?" என்றார் ஆர்வத்துடன்.
அதை எடுத்து ஆராய்ந்து பார்த்தார். அதில் உடைந்ததற்கான அறிகுறியே இல்லை. அவ்வளவு அழகாய் வர்ணம் தீட்டப்பட்டிருந்தது. அவருக்கு தெரியும், அது வெறும் ஜாடி சம்பந்தப்பட்ட விஷயமல்ல... அவனது உணர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பது. அது, அந்த ஜாடிக்கு பின்னால் ஒளிந்திருந்த விஷயத்தின் ஆழத்தை காட்டுவதாகவே தோன்றியது.
"இதை நீ பெயிண்ட் பண்ணியா?"
"ஆமாம்"
"எப்படி பண்ண? உள்ள கூட விரிசல் எதுவுமே தெரியலையே..."
"பெயிண்ட் பண்றதுக்கு முன்னாடி, ஒயிட் சிமெண்ட் வச்சி விரிசல் எல்லாத்தையும் பூசிட்டேன்"
"நீ இந்த வேலை எல்லாம் இவ்வளவு அழகா செய்வேன்னு எனக்கு தெரியாதே!"
"அதெல்லாம் பெரிய விஷயமே இல்ல, மா. இன்னைக்கு யூ டியூப்ல எல்லாமே இருக்கு. நம்ம என்ன வேணும்னாலும் கத்துக்கலாம்"
"இந்த சாதாரண ஜாடிக்காகவா நீ பெயிண்ட் பண்றது எப்படின்னு கத்துக்கிட்ட?"
அதற்கு அவன் பதில் கூறவில்லை. அவர் கொடுத்த காபியை அமைதியாய் பருகினான்.
"சூப்பரா செஞ்சிருக்க. நீ இதை அழகா செய்வேன்னு நான் எதிர்பார்த்தேன், ஆனா இந்த அளவுக்கு எதிர்பார்க்கல. ரொம்ப அழகா இருக்கு. இதே மாதிரி நீ எல்லா விஷயத்துலயும் ஜெயிச்சு வருவ..."
YOU ARE READING
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்!
Romanceகாதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம...