19 வேண்டுமென்றே...

282 39 5
                                    

19 வேண்டுமென்றே...

லாவண்யாவையும் நந்தாவையும் அழைத்துச் சென்று, கல்லூரி விடுதியில் முடிக்க வேண்டிய சம்பிரதாயங்களை முடித்தார் அரவிந்தன். அவளது கல்லூரி விடுதியின் அறையை காலி செய்து கொண்டு, லாவண்யாவை தங்கள் இல்லத்திற்கு நிரந்தரமாய் அழைத்து வந்தார் அவர். அதற்காக, அவர்களது திருமண பதிவு சான்றிதழை அவர் சமர்ப்பித்தார்.

லாவண்யாவின் பொருட்களை, அவளது அறையில் சீரமைத்து கொடுக்க, அவளுக்கு உதவுவதற்காக வந்தாள் குஷி.

"பாவம் அர்ச்சனா... இனிமே அவ ஹாஸ்டல் ரூம்ல தனியா இருப்பா" என்றாள் லாவண்யா வருத்தத்துடன்.

"பாவம் நந்தா, அவனும் அவனுடைய ரூம்ல தனியா இருப்பான்" என்றாள் குஷி.

"உனக்கு நந்தா மேல அவ்வளவு கரிசனம் இருந்தா, உன்னோட அல்லவ்வை கல்யாணத்துக்கு சம்மதிக்க வை" என்றாள்.

"அல்லவ்வாவது கல்யாணத்துக்கு சம்மதிக்கிறதாவது...! நீங்க ரெண்டு பேரும் ஒரே ரூம்ல இருக்க வாய்ப்பே இல்ல"

விளையாட்டாக அவள் முதுகில் ஒரு அடி போட்டாள் லாவண்யா.

அப்பொழுது அவளுக்கு எல்லாம் வசதியாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள அங்கு வந்தார் ரத்னா.

"எல்லாம் கம்ஃபர்டபிலா இருக்கா?"

"ஹாஸ்டல் ரூமை விட பல மடங்கு கம்ஃபர்ட்டபுளா இருக்கு மா...!"

"அதுவும் ரத்னா ஆன்ட்டியோட சூப்பர் சமையலோட... " என்றாள் குஷி.

"கரெக்ட்" என்றாள் லாவண்யா.

"லாவி, நான் கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காத. உன் குடும்பத்தை பத்தி நான் தெரிஞ்சுக்கலாமா?" என்றார் ரத்னா.

"இதுல தயங்க என்ன மா இருக்கு? தாராளமா தெரிஞ்சுக்கலாம். நான் டென்த் படிச்சுக்கிட்டு இருந்தப்போ எங்க அம்மா அப்பா இறந்துட்டாங்க. எங்க அம்மாவோட தம்பி எனக்கு கார்டியன் ஆனாரு. என்னோட சேர்த்து, என் சொத்தோட பொறுப்பும் அவர் கைக்கு போச்சு. ஊர்க்காரங்ககிட்ட கிடைச்ச புது மரியாதை, அவரை அப்படியே தலைகீழா மாத்திடுச்சு. எனக்கு கல்யாணம் ஆனா, எல்லாம் அவர் கையைவிட்டு போயிடும்னு அவர் நினைச்சாரு. அதனால அவர் கட்டுப்பாட்டுல இருக்கிற ஒருத்தனை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவு பண்ணாரு"

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்!Where stories live. Discover now